தமிழக மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து நமது வழிபாட்டு தலங்களை காக்க ஒரு மாபெரும் அரசியல் கூட்டணியை உருவாக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது அழைக்கிறார் உச்ச நீதிமன்றத்தின் வழக்கறிஞர் டாக்டர். எஸ் கே சுவாமி அவர்கள்
இன்று அனைத்து சமய நிலங்களை பயன்படுத்துவோர் பாதுகாப்பு சங்கத்தின் வாழ்வுரிமை கோரிக்கை மாநில மாநாடு சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்றது.
இதில் வழிபாட்டு தலங்களை ஆசைவார்த்தைகளை கூறி ஆக்கிரமிப்பு செய்ய பொது மக்களை தூண்டிவிடும் பிரதான தமிழக அரசியல் கட்சிகளான திமுக வின் அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்ட ஆயிரக்கணகான வழிபாட்டு தலங்களின் நிலத்தை திட்ட மிட்டு திருடும் நில அபகரிப்பு மாபியா கும்பலைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.
ஆர். எஸ். பாரதி மேடையில் பேசிய பொழுது;
தமிழகம் முழுவதும் லட்சகணக்கானோர் வழிபாட்டு தலங்களில் நிலத்தில் குடி இருக்கிறார்கள்.,
நான் நிச்சயமாக சொல்கிறேன், திமுக தேர்தல் அறிக்கையில் உங்கள் கோரிக்கையும் இடம்பெறும் வகையில் இருக்கும், திமுக ஆட்சிக்கு வந்ததும் நிச்சயமாக உங்கள் கோரிகையை நிறைவேற்றுவோம், அதற்கான அறிவிப்பை இங்கே இருக்கக்கூடிய அனைத்து கட்சித் தலைவர்கள் மத்தியில் வெளியிடுவோம் என பேசினார்.
முத்தரசன் மேடை பேச்சு;
கோவில், மசூதி, தேவாலயங்கள் என எந்த இடத்திற்கு சொந்தமான நிலமாக இருந்தாலும் நில அக்கிரமிப்பாளர்களை எளிதில் வெளியேற்ற முடியாத ஒரு சட்டம் உள்ளது.
ஆக்கிரமிப்பு நிலங்களையெல்லாம் நமக்கே சொந்தம் என்ற கோரிக்கைகளை அரசு ஏற்க தொடர்ந்து அனைத்து கூடங்களையும் நடத்தி இணைத்து நாம் குரல்கொடுப்போம்.
கே.பாலகிருஷ்ணன் மேடை பேச்சு;
அ இ அ தி மு க ஆட்சியில் அரசனை 318 வெளியிடப்பட்டு அது நிறைவேற்றப்பட வேண்டும் என பலர் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
ஆனால் சிவ பூஜையில் கரடி நுழைந்த மாதிரி ஆர்வலர்கள் நீதிமன்றம் சென்று இந்த அரசானை நிறைவேற்ற கூடாது என முறையீடு செய்து வருகிறார்கள்.
இந்த வழக்கை திருப்ப பெரும்வரை நம் போராட்டம் தொடரும் என அறிவித்தால் மட்டுமே இந்த வழக்கை திரும்ப பெறுவார்கள்.
அந்த கோவிலுக்கு உரிமையாக இருக்கும் நிலங்களில் அந்த நிலத்தில் குடியிருக்கும் மக்களுக்கு இனிமேலாவது பட்டா கிடைக்கட்டும்.
திருமாவளவன் மேடை பேச்சு;
உங்கள் கோரிக்கை நியமானது, அது நிறைவேற்ற பட வேண்டும் என நான் ஆதரவு அளிப்பதோடு, நீங்கள் முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்பேன்.
அனைவருக்குமான வாழ்வுரிமைகளை கோரிக்கையாக வைத்து இந்த வாழ்வுரிமை சங்கம் போராடி வருகிறது. தேர்தல் ஆதாயம் கருதியாவது தமிழக அரசு நல்ல முடிவு எடுக்க வேண்டும், நடைபெற இருக்கிற சட்டபேரவையில் இந்த கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும்.
இந்த பயனாளிகள் கோரிக்கை உடனடியாக நிறைவேற்ற பட வேண்டும், ஒரு வேலை தேர்தலுக்குல் நிறைவேற்றப்படவில்லை என்றால், ஆட்சி மாற்றம் விரைவில் நிகழும் உங்கள் கோரிக்கை நிறைவேற்றபடும்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் திருமா வளவன் கூறியதாவது,
சட்டப்பரிவு 34 ன் படி கோயில் நிலங்களில் குடியிருப்போருக்கு நிலத்தை சொந்தமாக்க வேண்டும்.
இந்து கோயில்கள் இந்தியா முழுவதும் அதிகமாக இருக்கின்றன. அவைகளை ஆக்கிரமிப்பு செய்து அபகரிக்க திட்டம் தீட்டி உள்ளனர்.
எனவே தான் நான் கூறுகிறேன் நமது வழிபாட்டு தலங்களையும் மற்றும் சொத்துக்களையும் பாதுகாக்க வேண்டியது நமது கடமையாகும் மேலே குறிப்பிட்ட அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு என்ன என்பதை அவர்கள் தெரிவித்து விட்டார்கள்.
கடவுள் நம்பிக்கை மற்றும் மத வழிபாடு உணர்வுள்ள நாம் அனைவரும் ஒன்றிணைந்து மேற்படி திமுக, வி சி க உள்ளிட்ட கட்சிகளை வருகிற தமிழக சட்டமன்ற தேர்தலில் படுதோல்வி அடையச் செய்ய இந்த தகவலை தங்களுக்குத் தெரிந்த அனைவருக்கும் பகிருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
மேலும் உணர்வாலர்கள் அனைவரும் என்னுடன் வாருங்கள் இவர்களின் சதித்திட்டத்தை முறியடித்து நமது வழிபாட்டு தலங்களின் சொத்துக்களை மீட்கலாம் வாருங்கள்.
தமிழ்நாடு வழிபாட்டு தலங்களின் சொத்துக்கள் பாதுகாப்பு குழு கூட்டம் வருகிற 22.02.2021 மாலை 03.00 மணியளவில் எண். 34, முதல் தெரு, கங்காநகர், கோடம்பாக்கம், சென்னை -600024 என்ற முகவரியில் வழக்கறிஞர் டாக்டர். எஸ் கே சுவாமி அவர்களின் தலைமையில் நடைபெறுகிறது. கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் முன்பதிவிற்கு தொடர்பு கொள்ளவும் 9445922210, 9968441440, 04429585944, [email protected]
லயோலா வசமுள்ள கோயில் நில மீட்பு
லயோலா நிலம் சட்டம் மூலம் மீட்டு கோயி?
லயாலோ காலேஜ் இருக்கும் இடம் ஹிந்து கோவில் சொத்து. நம் உயிரைக் கொடுத்தாவது அதனைப் பாதுகாப்போம்.
லயாலோ காலேஜ் இருக்கும் இடம் ஹிந்து கோவில் சொத்து. நம் உயிரைக் கொடுத்தாவது அதனைப் பாதுகாப்போம்.
கோவில் நில ஆக்கிரமிப்பை தடுக்க ஹிந்து அறநிலையத்துறை செயல்பாடுகள் திருப்தி அளிக்கவில்லை மதுரை ஹைகோர்ட்
லயோலா வசமுள்ள கோயில் நிலத்தை மீட்க எழுச்சி பயணம்
சட்டத்திற்கு உட்பட்டு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு லயோலா கல்லூரியை மீட்டெடுக்கும் அறப்போரில் தமிழ்நாட்டில் வாழும் இந்து மக்கள் அனைவரும் பங்கேற்க முன்வர வேண்டும் என்ற விழிப்புணர்வை தமிழ் நாட்டில் வளர்க்க வேண்டும் என்ற லட்சியத்தை கருப்பொருளாகக் கொண்டு கோயில் நிலத்தை மீட்க வேண்டும் என்று எழுச்சியை உருவாக்க இந்து மக்களுக்கான மாபெரும் எழுச்சி நடை/வாகன ஆன்மீக பயணம் வருகிற
நாள்: 06.02.2021 காலை: 10.00மணிக்கு
ஆரம்பிக்கும் இடம்:- திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில்
முடியும் இடம்: ஸ்ரீ வில்லிபுத்துர் ஆண்டாள் திருக்கோயில் வரை
தலைமை : டாக்டர். எஸ் கே சுவாமி வழக்கறிஞர் மற்றும் தலைவர் தமிழ்நாடு முன்னேற்றக் கழகம்
முன்னிலை : மன்னார் குடி ஜீயர் சுவாமிகள் மற்றும் சில ஆன்மீக பெரியவர்கள்
அனைவரும் வருக! பேராதரவு தருக!!
கோயில் நிலத்தை மீட்பதற்கு இந்த காலகட்டத்தில் நமது இந்துமக்களிடம் எழுச்சி ஏற்படவில்லை என்றால் இனி எப்பொழுதும் கிடையாது!!!
தமிழக இந்து மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து அந்நிய மதப்பிடியில் இருக்கும் நமது அனைத்து கோயில் நிலங்களையும் மீட்டெடுக்க வேண்டும் என்று சபதம் எடுக்க முன்வரவேண்டும் என்று அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
தொடர்பு கொள்ளவும்
9445922210, 9968441440, 7550015555
உதவிகளை வழங்க GPay/Phonepe Nos: 7550015555, 9968441440
College நிர்வாகமே? கோவில் நிலம் ஆவணம் எங்கே? #ஏரியை காணம்? மண்ணை மீட்டெடுக்க அறப்போராட்டம்
College பெயரை சிவாலயா கல்லூரியாக மாற்ற வேண்டும் #இராம இரவிக்குமார் #இந்து தமிழர் கட்சி தலைவர்
30/01/2021
லயோலா கல்லூரி நிர்வாகம் வசமுள்ள இந்து கோயில் நிலத்தை மீட்டெடுப்பதற்கான அறப்போர் துவக்கவிழா நேற்று சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டத்தில் நடை பெற்றது அதில் ஏராளமான உண்மையான இந்து உணர்வு கொண்ட அமைப்புகளின் முக்கிய பிரதிநிதிகள், ஆன்மீக பெரியவர்கள் மற்றும் இந்து மக்கள் கலந்து கொண்டனர்.
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the business
Telephone
Website
Address
Chennai
600092
