தனது தொண்டாமுத்தூர் தொகுதி மக்களுக்கு நன்றி சொன்ன அண்ணன் வேலுமணி.
SPVelumaniTeam
வீழ்வேன் என நினைத்தாயோ? சாம்பலில் இருந்து எழும் பீனிக்ஸ் பறவை போல மீண்டு வருவோம்..
03/06/2026
எஸ் பி.வேலுமணி எனும் செயல் வடிவம்..!
தூரத்திலிருந்து பார்க்கும் பலருக்கு அவரைப் பற்றிய உண்மையான குணநலன்களும், அவர் ஆற்றிய சேவைகளும் முழுமையாகத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் அவரை நெருக்கமாக அறிந்தவர்கள் அனைவரும் அவர் மிகுந்த மனிதநேயமும், உதவும் மனப்பான்மையும் கொண்டவர் என்பதை நன்கு அறிவார்கள்.
திருமண உதவி, கல்விச் செலவு உதவி, மருத்துவ உதவி என எண்ணற்ற மக்களின் வாழ்வில் நம்பிக்கையின் ஒளியாக திகழ்ந்தவர். அரசியல் வேறுபாடுகளைப் பார்க்காமல், நமது கட்சியினர் அல்லது மாற்றுக் கட்சியினர் என்ற பாகுபாடின்றி அனைவரிடமும் அன்புடனும் மரியாதையுடனும் பழகுபவர். உதவி தேவைப்படும் நேரங்களில் யார் வந்தாலும் அவர்களுக்கு ஆதரவாக நிற்பவர்.
பலருக்கு அரசாங்க வேலைவாய்ப்புகள் கிடைக்க வழிகாட்டியவர். தனிப்பட்ட முறையிலும் ஏராளமானோரின் வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்தவர். தன்னால் இயன்ற எல்லா உதவிகளையும் எந்த எதிர்பார்ப்பும் இன்றி செய்வதே அவரது இயல்பு.
தொகுதி மக்களை தனது குடும்ப உறுப்பினர்களாகக் கருதி அவர்களின் நன்மை தீமைகளில் பங்கெடுப்பவர். கட்சிக்குள்ளும் எந்த அணியைச் சேர்ந்தவர் என்ற வேறுபாடின்றி அனைவரையும் ஒரே பார்வையில் அணுகி, "அனைவரும் நமது கட்சிக்காரர்களே" என்ற எண்ணத்துடன் செயல்படுபவர்.
எப்போதும் சிரித்த முகத்துடன் அனைவரையும் வரவேற்பவர். கோபம், முகச்சுளிப்பு போன்றவற்றை வெளிக்காட்டாமல் அமைதியாகவும் பணிவாகவும் பழகுபவர்.
கட்சி சோதனைகளைச் சந்தித்த காலங்களிலும் தளராமல் நிற்கும் உறுதியான தூணாக விளங்குபவர். பொருளாதார ரீதியிலும் கட்சிக்கும் கழகத் தோழர்களுக்கும் முக்கியமான ஆதரவாக இருப்பவர். நல்ல காலங்களில் மட்டுமல்ல, சோதனைக் காலங்களிலும் துணை நிற்பவரே உண்மையான விசுவாசி என்பதற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்பவர்.
இத்தகைய மனிதநேயமும் தியாக உணர்வும் கொண்ட ஒருவரை முழுமையாகப் புரிந்துகொள்ளாமல் விமர்சிப்பது வருத்தமளிக்கிறது. அவரைப் பற்றி அறியாதவர்கள் குறை கூறலாம்; ஆனால் அவரை அறிந்தவர்கள் மனதில் அவர் எப்போதும் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரியவராகவே இருப்பார்.
காவேரி நதி நீர் பிரச்னையை அன்பாலே வென்று காட்டிய புரட்சித்தலைவர்..
நல்லவர் இலட்சியம் வெல்லுவது நிச்சயம்
உலகம் ஆயிரம் சொல்லட்டுமே..
கதை கட்ட ஒருவன் பிறந்து விட்டால்
கண்ணகி வாழ்விலும் களங்கம் உண்டு
காப்பாற்ற சில பேர் இருந்து விட்டால்
கள்வர்கள் வாழ்விலும் நியாயம் உண்டு
கோர்ட்டுக்குத் தேவை சில சாட்சி
குணத்துக்குத் தேவை மனசாட்சி
உன் குணத்துக்குத் தேவை மனசாட்சி
S.P.Anbarasan, Nallaramm Trust & Amma IAS Academy, Coimbatore
கோவை விமானநிலையத்தில் எஸ்.பி.வேலுமணி உற்சாக வரவேற்பளித்த அண்ணாதிமுக கழக தொண்டர்கள்
28/05/2026
இஸ்லாமிய மக்கள் அனைவருக்கும் பக்ரீத் பெருநாள் நல்வாழ்த்துக்கள் 🌃🕋
27/05/2026
மாறாதய்யா மாறாது... மனமும் குணமும் மாறாது!துறவியின் வாழ்வில் துயரம் வந்தாலும்தூய தங்கம் தீயில் வெந்தாலும்! (மாறாதய்யா... மாறாது!
27/05/2026
You can also follow on Instagram to see more.
Click here to claim your Sponsored Listing.
Location
Contact the business
Telephone
Address
641008
