Subbulakshmi Jegadeesan

Subbulakshmi Jegadeesan

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Subbulakshmi Jegadeesan, Erode.

11/08/2024
Photos from Subbulakshmi Jegadeesan's post 06/06/2023

மல்யுத்த வீராங்கனைகளின் மீதான தாக்குதலைக் கண்டித்து நாடு தழுவிய ஐக்கிய விவசாய முன்னணியின்
போராட்டம் !!!
ஈரோட்டில் நேற்று
(05/06/2023) நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்
ஐக்கிய விவசாயிகள் முன்னணி செயல்பாட்டுக் குழு உறுப்பினர்
தோழர் கி.வே. பொன்னையன் தலைமை தாங்கினார்.
இந்திய ஒன்றிய முன்னாள் அமைச்சர்
திருமதி சுப்புலட்சுமி ஜெகதீசன் அவர்கள் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் சிறப்புரையாற்றினார்.
சமூகத்தின் அனைத்து பிரிவு மக்களும் கலந்து கொண்ட வெகுமக்கள் போராட்டமாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் உணர்ச்சி மிக்க முழக்கங்களை எழுப்பினார்கள்.
பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் .
மல்யுத்த சங்கத்தின் தலைவர் ......
பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள பிரிட்ஜ் பூசன் சரண் சிங்கின் உருவப்படம் போராட்ட களத்தில் கிழித்தெறியப்பட்டது.
300க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.

Photos from Subbulakshmi Jegadeesan's post 01/06/2023

விவசாயிகளின் கோரிக்கை ஏற்று அனுமதி வழங்கிய மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் அண்ணன் Durai Murugan அவர்களுக்கு நன்றி !!!

31/05/2023

கீழ்பவானி சீரமைப்பு வேலைகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்று அறிவிப்பு செய்துள்ள மாண்புமிகு நீர்வளத் துறை அமைச்சர் அவர்களுக்கும்
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும் நன்றி பாராட்டுகின்றோம்.
கீழ்பவானி சீரமைப்பு வேலைகள் உயர் நீதிமன்றத் தீர்ப்பின்படி
மே -1ஆம் தேதி தொடங்கப்பட்டது. இருந்தாலும் வேலைகள் திட்டத்தில் உள்ளபடி செய்வதில் சில தடங்கல்கள் இருந்தது இது குறித்து மாண்புமிகு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் அவர்களை 27/05/ 2023 அன்று காலை அவரது இல்லத்தில் சந்தித்தோம் .
இந்த சந்திப்பிற்கு முன்னாள் அமைச்சரும் கீழ்பவானி பாசனத்தில் மிகுந்த அக்கறை கொண்டவருமான திருமதி சுப்புலட்சுமி ஜெகதீசன் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்.

மொடக்குறிச்சி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு ஆர் .எம் .பழனிசாமி அவர்கள் விவசாயிகள் குழுவில் பங்கெடுத்துக் கொண்டார்.
கீழ்பவானி முறை நீர் பாசன விவசாயிகள் கூட்டமைப்பு நிர்வாகிகளும் ,
கீழ்பவானி ஆயக்கட்டு நில உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளும்
இந்தக் குழுவில் இடம் பெற்றிருந்தனர்.
மாண்புமிகு அமைச்சர் துரைமுருகன் அவர்களிடம் நடைபெற்று வரும் தவறான பரப்புரைகள் குறித்தும், அதற்கு அரசு தரப்பில் சரியான விளக்கம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தோம். உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக அப்பொழுது தெரிவித்தார்கள். விவசாயிகள் சங்க குழுவிடம் உறுதிமொழி அளித்தபடி இன்று தலைமைச் செயலகத்தில் நீர்வளத் துறை அதிகாரிகளின் கூட்டத்தை நடத்தி திட்டமிட்டபடி வேலைகளை செய்வதற்கு வழிகாட்டி உள்ளார்கள்.
அத்தோடு சீரமைப்பு வேலைகளினால் குடிநீர் ஆதாரங்கள் எதுவும் பாதிக்கப்படாது என்றும் எந்த இடத்திலும் கால்வாயில் தளத்தில் கான்கிரீட் போடுவதில்லை என்றும் கீழ் பவானி கால்வாய் சீரமைப்பு காலத்தின் கட்டாயம் என்றும் அதிகமான கசிவு நீரினால் கடைமடை விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள் அதனை சீரமைத்து கடைமடை விவசாயிகள் நலனும் காக்கப்பட வேண்டும் என்றும் ஊடகவியலாளர்கள் சந்திப்பில் தெளிவு படுத்தி உள்ளார்கள். காலத்தின் தேவை கருதி மாண்புமிகு அமைச்சர் துரைமுருகன் அவர்கள் கீழ்பவானி பாசன விவசாயிகள் அமைப்பின் கோரிக்கையை ஏற்று உடனடியாக நீர்வளத் துறை தலைமை அதிகாரிகளின் கூட்டத்தை நடத்தி வேலைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு ஆணையிட்டுள்ளதற்கு நன்றி பாராட்டுகிறோம் .
மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கு கடந்த 03/05/ 2023 அன்று நடந்த உயர்மட்ட கூட்டத்தில் உயர்நீதிமன்ற ஆணைப்படி கீழ் பவானி வேலைகள் செம்மையாக செய்யப்பட வேண்டும் என்று வழிகாட்டிய மாண்புமிகு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கும் நன்றி பாராட்டுகிறோம்.
ஆயக்கட்டு விவசாயிகளின் உரிமையை பாதுகாக்க தானாக முன்வந்து இந்த சந்திப்பிற்கான ஏற்பாட்டை செய்த முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன் அவர்களுக்கும் தானாகவே முன்வந்து குழுவில் இடம் பெற்று இந்தப் பிரச்சனையில் தனது அனுபவங்களை மாண்புமிகு அமைச்சர் எடுத்துக் கூறிய மொடக்குறிச்சி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர் எம் பழனிசாமி அவர்களுக்கும் நன்றி பாராட்டுகிறோம்.

ஒருங்கிணைப்புக் குழுவிற்காக
பொன்னையன்
30/05/2023

27/05/2023

இன்று (27.05.2023) காலை தமிழன தலைவர் டாக்டர் கலைஞர் அவர்கள் கோபாலபுரம் இல்லத்தில்..

Photos from Subbulakshmi Jegadeesan's post 31/01/2023

நேற்று (30.01.2223) சிறுகதை மன்னன் அமரர் S.S.தென்னரசு ஐயா அவர்கள் நினைவகத்தில் மலர்மாலை வைத்து நினைவு அஞ்சலி செலுத்தினார்கள் திருமதி.சுப்புலட்சுமி ஜெகதீசன் அவர்கள்.உடன் திருமதி. இளவரசி தென்னரசு அவர்கள் மற்றும் திரு.செவ்வந்தியப்பன் அவர்கள்.

Photos from Subbulakshmi Jegadeesan's post 09/01/2023

நேற்று(08.01.2023) பல்லடத்தில் உள்ள வனாலயம் - தாய் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற"தை மகளே வருக" பொங்கல் விழா இனிய நிகழ்வில்
திருமதி சுப்புலட்சுமி ஜெகதீசன் அவர்கள், இந்திய விண்வெளி ஆய்வு மைய மேளான் இயக்குனர் முனைவர் உயர்திரு.மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் மற்றும் சித்த மருத்துவர்
உயர்திரு.கு.சிவராமன் அவர்கள்,
மருத்துவர் திருமதி.லலிதா ஆகியோர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி விழாவினை சிறப்பித்தார்கள்...

20/12/2022

நெஞ்சம் நிறைந்த தயாளு அம்மா அவர்களை கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்தபோது !!!

6 பேர் விடுதலை: ``ஆட்சியாளர்கள் செய்யத் தவறியதை, நீதித்துறை செய்திருக்கிறது”- சுப்புலட்சுமி ஜ 15/11/2022

இந்த 6 பேருக்கும், ராஜீவ் காந்தி கொலை வழக்குக்கும் நேரடியாக எந்தத் தொடர்பும் இல்லை என்பது நன்றாகத் தெரியும்” - சுப்புலட்சுமி ஜெகதீசன்.

6 பேர் விடுதலை: ``ஆட்சியாளர்கள் செய்யத் தவறியதை, நீதித்துறை செய்திருக்கிறது”- சுப்புலட்சுமி ஜ ``இந்த 6 பேருக்கும், ராஜீவ் காந்தி கொலை வழக்குக்கும் நேரடியாக எந்தத் தொடர்பும் இல்லை என்பது நன்றாகத் தெரியும்....

Photos from Subbulakshmi Jegadeesan's post 06/11/2022

கொடுமுடி SSV மகளிர் உயர்நிலைப்பள்ளி, துவக்கப்பள்ளி, நர்சரி பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது.
சிறப்பு விருந்தினர்களாக
திருமதி.சுப்புலட்சுமி ஜெகதீசன் அவர்கள், யசாதோ IFS அவர்கள்,
உடன் திரு.S.ராஜேந்திரன் திரு.S.சிவக்குமார் மற்றும் சக பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள்,
மாணவ மற்றும் மாணவியர்கள்.

Photos from Subbulakshmi Jegadeesan's post 16/10/2022

ஈரோடு மாவட்டத்திற்கு வருகை புரிந்த திராவிட கழக தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களை வரவேற்ற போது !!!
திராவிட கழகத்தின் முதல் பொருளாளர் தளபதி அர்ச்சுனன் மன்றடியார் 100வது ஆண்டு விழா ஈரோடு பெரியார் மன்றத்தில் நடைபெற்றது, அதில் கலந்து கொண்டபோது !!!

Want your business to be the top-listed Government Service in Erode?

Click here to claim your Sponsored Listing.

Location

Culinary Team

Attire

Address

Erode