18/03/2026
The Prophets in Islam
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from At-Taqwa, Delhi.
18/03/2026
The Prophets in Islam
14/03/2026
தஜ்ஜால்.
மாபெரும் பத்து அடையாளங்களில் முக்கியமானது
மாபெரும் பத்து அடையாளங்களில் மிகவும் முக்கியமானதாகக் குறிப்பிடப்படுவது தஜ்ஜால் என்பவனின் தோற்றமாகும்.
தஜ்ஜாலைப் பற்றி முன்னறிவிப்பு
தஜ்ஜால் பற்றி நபிகள் நாயகம் ﷺ அவர்கள் பல முன்னறிவிப்புகளை வழங்கியுள்ளனர். அவற்றை முதலில் அறிந்து கொள்வோம்.
முஸ்லிம் சமூகத்தில் தஜ்ஜால் பற்றி பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. சிலர் தஜ்ஜாலை ஒரு குறிப்பிட்ட மனிதராக அல்லாமல், ஒரு தீய சக்தியை அல்லது ஒரு அமைப்பை குறிக்கும் உருவகமாக விளக்குகின்றனர்.
காலகட்டங்களின் தாக்கத்தால் சிலர் தங்களது காலத்தில் ஆதிக்கம் செலுத்திய அரசியல் சக்திகளையோ அல்லது தலைவர்களையோ தஜ்ஜாலாகக் கருதி கூறியுள்ளதும் காணப்படுகிறது. உதாரணமாக சில காலங்களில் உலக அரசியல் சூழ்நிலைகளைப் பொருத்து பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
ஆனால் நபிகள் நாயகம் ﷺ அவர்கள் கூறிய அனைத்து ஹதீஸ்களையும் ஒன்றாக ஆராய்ந்து பார்த்தால், தஜ்ஜாலைப் பற்றிய விளக்கம் அதைவிட விரிவானதும் தனித்துவமானதுமானதாக இருப்பதை அறியலாம்.
மேலும் சிலர் தஜ்ஜாலைப் பற்றி மிகையாகக் கற்பனை செய்து பல கதைகளையும் பரப்பியுள்ளனர். அவனது உருவம் அல்லது சக்திகள் குறித்து மிகைப்படுத்தப்பட்ட விளக்கங்கள் கூறப்பட்டுள்ளன. ஆனால் இத்தகைய கற்பனைகளுக்கு உறுதியான ஆதாரங்கள் இல்லையென அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.
மற்றொரு பக்கம், தஜ்ஜால் பற்றிய விஷயங்களை முழுமையாக அறியாதவர்களும் இருக்கின்றனர்.
எனவே இவ்வாறான பல்வேறு கருத்துக்கள் மற்றும் குழப்பங்களைத் தெளிவுபடுத்துவதற்காக, தஜ்ஜால் குறித்து நபிகள் நாயகம் ﷺ அவர்கள் கூறியுள்ள அனைத்து முக்கியமான முன்னறிவிப்புகளையும் இங்கு விரிவாகப் பார்க்கலாம்.
தஜ்ஜாலைப் பற்றி எச்சரிக்கை
நூஹ் (அலை) அவர்களுக்குப் பின் வந்த எந்த நபியும் தஜ்ஜாலைப் பற்றி தமது சமுதாயத்திற்கு எச்சரிக்காமல் விட்டதில்லை.
“நிச்சயமாக நானும் அவனைப் பற்றி உங்களுக்கு எச்சரிக்கிறேன்”
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 3337, 3440, 3441, 7127 மற்றும் பல
ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்ட காலத்திலிருந்து யுக முடிவு நாள் வரையிலும் தஜ்ஜாலின் விஷயத்தை விட மிகப் பெரிய சோதனை எதுவும் ஏற்படாது என்றும் நபிகள் நாயகம் ﷺ அவர்கள் கூறியுள்ளனர்.
அறிவிப்பவர்: இம்ரான் பின் ஹுஸைன் (ரலி)
நூல்: முஸ்லிம் 5239
தஜ்ஜாலின் அங்க அடையாளங்கள்
• தஜ்ஜால் ஒரு கண் ஊனமுற்றவனாக இருப்பான்.
“நிச்சயமாக அல்லாஹ்வைப் பற்றி உங்களுக்குத் தெரியும். அல்லாஹ் ஒரு கண் ஊனமுற்றவன் அல்லன். ஆனால் தஜ்ஜாலின் வலக்கண் சுருங்கிய திராட்சையைப் போன்றதாக ஊனமுற்றிருக்கும்”
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)
நூல்: புகாரி
“பெரும் பொய்யனாகிய ஒற்றைக் கண்ணனைப் பற்றி எந்த நபியும் தமது சமுதாயத்திற்கு எச்சரிக்காமல் இருந்ததில்லை. நிச்சயமாக தஜ்ஜால் ஒரு கண் ஊனமுற்றவன். உங்கள் இறைவன் ஒரு கண் ஊனமுற்றவன் அல்லன்”
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி 7131
“தஜ்ஜால் இடது கண் ஊனமுற்றவன்”
அறிவிப்பவர்: ஹுதைஃபா (ரலி)
நூல்: புகாரி
• ஒற்றைக் கண்ணனாக இருப்பவனை எல்லாம் தஜ்ஜால் என்று முடிவு செய்யக்கூடாது. அவனை அடையாளம் காண இன்னும் பல அடையாளங்கள் உள்ளன.
“தஜ்ஜாலின் கண்களுக்கிடையே ‘காஃபிர்’ என்று எழுதப்பட்டிருக்கும்”
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி 7131, 7404
“எழுதத் தெரிந்தவர்களும், எழுதத் தெரியாதவர்களும் உட்பட அனைத்து முஃமின்களும் அதை வாசிக்கும் வகையில் தஜ்ஜாலின் கண்களுக்கிடையே ‘காஃபிர்’ என்று எழுதப்பட்டிருக்கும்”
அறிவிப்பவர்: ஹுதைஃபா (ரலி)
நூல்: முஸ்லிம் 5223
• ஊனமுற்ற கண்ணின் மூக்கை ஒட்டிய பகுதியில் கடினமான சதைக் கட்டி ஒன்று இருக்கும்.
நூல்: முஸ்லிம் 5223
• ஊனமடையாத மற்றொரு கண் பச்சை நிறக் கண்ணாடிக் கல் போன்றதாக இருக்கும்.
நூல்: அஹ்மத் 20220
• தஜ்ஜால் சிவந்த நிறமுடையவனாக இருப்பான்.
நூல்: புகாரி 3441, 7026, 7128
• மேலும் அவன் மிக வெண்மை நிறமுடையவனாகவும் இருப்பான்.
நூல்: அஹ்மத்
• திடகாத்திரமான உடலமைப்புடன் இருப்பான்.
நூல்: புகாரி 3441, 7026, 7128
இவ்வெல்லா அடையாளங்களையும் பார்த்தால், தஜ்ஜால் ஒரு குறிப்பிட்ட மனிதன், தீய சக்திக்கான உருவகம் அல்ல என்பதை அறியலாம்.
09/03/2026
நபி Muhammad ﷺ முஸ்லிம்களுக்கு ஏழு அழிவை ஏற்படுத்தும் பெரிய பாவங்கள் பற்றி எச்சரித்துள்ளார். ஒவ்வொரு முஸ்லிமும் அவற்றை அறிந்திருக்க வேண்டும், தங்களை மற்றும் தங்கள் குடும்பத்தை பாதுகாக்க.
சஹீஹ் ஹதீஸ்களில் குறிப்பிடப்பட்டுள்ள 7 பெரிய பாவங்கள்:
1. ஷிர்க் (Shirk) – அல்லாஹ்வுக்கு இணைவை அமைத்தல்
2. கொலை (Murder) – குற்றமற்ற ஒருவரை கொல்வது
3. கருமம் / சூனியம் (Black Magic) – மந்திரம் அல்லது சூனியம் செய்வது
4. ரிபா (Riba) – வட்டி வாங்குதல் அல்லது கொடுத்தல்
5. அனாதை செல்வத்தை அபகரித்தல் – அனாதைகளின் சொத்துகளை அநியாயமாக எடுத்துக்கொள்வது
6. போர்க்களத்தில் இருந்து ஓடுதல் – நியாயமான போரில் இருந்து பயந்து தப்பிச் செல்வது
7. தூய்மையான பெண்களை பொய்யாக குற்றம் சாட்டுதல் – நிரபராத பெண்களை தவறாக குற்றம் சாட்டுதல்
இந்த பாவங்கள் “அல்-முபீகாத் (Al-Mubiqat)” என்று அழைக்கப்படுகின்றன. காரணம், அவை ஒருவரின் ஈமான், நற்பண்பு மற்றும் சமூகத்தை அழிக்கக்கூடியவை.
அல்லாஹ் நம்மை இந்த பாவங்களிலிருந்து காக்கட்டும்; நேரான பாதையில் வழிநடத்தட்டும். ஆமீன்.
இந்த நினைவூட்டலை சேமித்து மற்றவர்களுடனும் பகிருங்கள், அவர்கள் கூட அறிந்து பயன் பெறலாம்.
06/03/2026
கேள்விக்கு சரியான பதில் அளிக்கவும். ✍🏻
05/03/2026
இஸ்லாமிய வரலாற்றில் எத்தனையோ மாவீரர்கள் போர்க்களங்களில் தங்கள் இன்னுயிரை நீத்து ஷஹீத் என்ற மாபெரும் அந்தஸ்தைப் பெற்றிருக்கிறார்கள். ஆனால், தன் உயிரைத் துச்சமென மதித்துப் போராடி, உடலெங்கும் வெட்டுக் காயங்களைச் சுமந்துகொண்டு, பூமியில் உயிருடன் நடமாடிய ஒருவரைப் பார்த்து, இவர் ஒரு ஷஹீத் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நற்சான்றிதழ் அளித்தார்கள் என்றால், அவருடைய தியாகத்தின் ஆழம் எப்படிப்பட்டதாக இருக்கும்? அவர்தான் 'உயிருடன் நடமாடும் ஷஹீத்' என்று அண்ணலாரால் போற்றப்பட்ட தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் (ரலி).
உஹத் போர்க்களத்தின் அந்த நெஞ்சைப் பிளக்கும் கொடூரமான கட்டம்... இஸ்லாமியப் படையில் குழப்பம் ஏற்பட்டு, எதிரிகள் அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்களை நாலாபுறமும் சூழ்ந்துகொள்கிறார்கள். நபிகளாரைக் குறிவைத்து அம்புகளும், வாள்களும், ஈட்டிகளும் பாய்ந்து வருகின்றன. அண்ணலாருக்குப் பாதுகாப்பாக விரல் விட்டு எண்ணக்கூடிய சில தோழர்கள் மட்டுமே நிற்கிறார்கள். அப்போது அண்ணலார், "இவர்களை விரட்டியடிப்பவர் யார்? அவருக்குச் சுவர்க்கத்தில் என்னுடன் இருக்கும் பாக்கியம் கிடைக்கும்!" என்று கேட்டார்கள்.
உடனே பாய்ந்து வந்த தல்ஹா (ரலி), "இறைத்தூதரே! நான் விரட்டுகிறேன்!" என்று கூறி ஒரு சிங்கத்தைப் போல எதிரிகளுக்கு மத்தியில் புகுந்து சுழன்று சுழன்று தாக்கினார். நபிகளாரை நோக்கி வரும் வெட்டுக்களையெல்லாம் தன் உடலால் தடுத்து நிறுத்தினார். ஒரு கட்டத்தில், எதிரியின் கொடிய அம்பு ஒன்று நபிகளாரின் முகத்தைக் குறிவைத்து சீறிப் பாய்ந்து வந்தது. வேறு வழியின்றி, அந்த அம்பைத் தடுப்பதற்காகத் தன் கையை அப்படியே கேடயமாக நீட்டினார் தல்ஹா (ரலி). அம்பு அவருடைய கையைத் துளைத்து நரம்புகளை அறுத்தெறிந்தது; விரல்கள் செயலிழந்தன. அந்த வலியிலும் "உஸ்" என்று அவர் சத்தமிட்டபோது, "நீர் பிஸ்மில்லாஹ் என்று கூறியிருந்தால் மலக்குகள் உம்மை வானில் தூக்கியிருப்பார்கள்" என்று நபிகளார் கூறினார்கள்.
உஹத் களம் ஓய்ந்த பிறகு, அபூபக்கர் (ரலி) அவர்களும், அபூ உபைதா (ரலி) அவர்களும் அண்ணலாரை நோக்கி ஓடி வந்தார்கள். ஆனால் நபிகளார், "என்னை விடுங்கள், உங்கள் தோழர் தல்ஹாவைப் பாருங்கள்!" என்று கட்டளையிட்டார்கள். அங்கே தல்ஹா (ரலி) இரத்த வெள்ளத்தில் மயங்கிக் கிடந்தார். அவருடைய உடலில் வாள், ஈட்டி மற்றும் அம்புகளால் ஏற்பட்ட 70-க்கும் மேற்பட்ட காயங்கள் இருந்தன! ஒரு மனிதனின் உடலில் 70 வெட்டுக்காயங்கள் என்றால், அவர் தன் உடலையே அண்ணலாருக்காக ஒரு சல்லடையாக மாற்றியிருக்கிறார் என்றுதானே அர்த்தம்! இதனால்தான் அபூபக்கர் (ரலி) அவர்கள் உஹத் போரைப் பற்றி நினைவுகூரும்போதெல்லாம், "அந்த நாள் முழுமையும் தல்ஹாவுக்குரிய நாளாகவே இருந்தது!" என்று பெருமைப்படுவார்கள்.
தல்ஹா (ரலி) அவர்களின் சிறப்பு வீரத்தோடு முடிந்துவிடவில்லை. அள்ளிக் கொடுப்பதிலும் அவர் மாபெரும் வள்ளலாகத் திகழ்ந்தார். எந்த அளவிற்கு என்றால், 'தல்ஹத்துல் ஃபய்யாத்' (அள்ளிக் கொடுக்கும் தல்ஹா) என்று மக்களால் அன்போடு அழைக்கப்பட்டார். ஒருமுறை அவருக்கு 7 லட்சம் திர்ஹம்கள் லாபமாகக் கிடைத்தன. அந்தப் பணம் வீட்டிலிருக்கும்போது அவரால் நிம்மதியாகத் தூங்க முடியவில்லை. இவ்வளவு பணத்தை வீட்டில் வைத்துக்கொண்டு எப்படி உறங்குவது? என்று தன் மனைவியிடம் தவிப்போடு கேட்டார். காலையானதும் அதை ஏழைகளுக்குப் பங்கிட்டுக் கொடுத்துவிடுங்கள் என்று மனைவி ஆலோசனைக் கூற, மறுநாள் காலை அந்த 7 லட்சம் திர்ஹம்களையும் முழுமையாகத் தர்மம் செய்துவிட்டுத்தான் நிம்மதிப் பெருமூச்சு விட்டார் அந்தத் தர்மவீரர்.
இன்று நாம் இஸ்லாத்திற்காக என்ன தியாகம் செய்திருக்கிறோம்? ஒரு சிறு தலைவலியோ, காய்ச்சலோ வந்துவிட்டால் இறைவனின் மார்க்கப் பணிகளை ஓரங்கட்டி விடுகிறோம். சிறிதளவு பணத்தை தர்மம் செய்யச் சொன்னால் நம் கைகள் நடுங்குகின்றன. ஆனால், தல்ஹா (ரலி) தன் சொத்துக்களையும் சரி, தன் இரத்தத்தையும் சரி, மார்க்கத்திற்காகத் தண்ணீரைப் போல வாரி வழங்கினார்.
யாராவது பூமியில் உயிருடன் நடமாடும் ஒரு ஷஹீதைப் பார்க்க விரும்பினால், அவர் தல்ஹா இப்னு உபைதுல்லாஹ்வைப் பார்க்கட்டும் என்ற நபிகளாரின் அந்தப் பொன்மொழி இன்றும் வரலாற்றில் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. உடலாலும், பொருளாலும் இஸ்லாத்திற்காகத் தியாகம் செய்த அந்த உஹத் களத்தின் இரும்பு மனிதரை அல்லாஹ் பொருந்திக்கொள்வானாக! அவர் வாழ்ந்த அந்தத் தியாக வாழ்வின் சிறு துளியையேனும் நாமும் நம் வாழ்வில் கடைப்பிடிக்க அல்லாஹ் அருள்புரிவானாக!
✍️ Abdullah Ibnu Naseer
04/03/2026
Majestic Views of the Grand Mosque in Makkah. 🕋❤️
03/03/2026
நீங்கள் இறந்தபின் எவ்வளவு வேகமாக மறக்கப்படுகிறீர்கள் என்பதை உணர்ந்தால் மனிதர்களை திருப்திப்படுத்த முயல்வதைவிட அல்லாஹ்வை திருப்திப்படுத்த முயல்வீர்கள்.❤🤲
03/03/2026
🕌 இஸ்லாமிய வரலாற்றின் பெரும் திருப்புமுனை – பத்ர் போர்
பத்ர் போர் என்பது இஸ்லாமிய வரலாற்றில் மிக முக்கியமான மற்றும் வரலாற்றை மாற்றிய ஒரு போராகும். இது ஹிஜ்ரத் 2ஆம் ஆண்டு ரமழான் மாதம் 17ஆம் நாள், பத்ர் என்னும் இடத்தில் நடைபெற்றது.
⚔️ யார் யாருக்கு இடையில்?
இந்தப் போர்,
முஸ்லிம் படை (313 பேர்)
மற்றும்
குரைஷ் படை (1000 பேர்)
இடையே நடைபெற்றது.
🌙 ஏன் இந்தப் போர் முக்கியம்?
எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும், முஸ்லிம்கள் அல்லாஹ்வின் உதவியால் வெற்றி பெற்றனர்.
இது இஸ்லாமின் சக்தியை உலகிற்கு காட்டிய முதல் பெரிய வெற்றி.
இஸ்லாமிய சமூகத்தின் மனவலிமை பலமடைந்தது.
📖 குர்ஆனில் பத்ர் போர்
அல்-குர்ஆன் இல், சூரத்துல் அன்பால் (8:9-12) பகுதியில் இந்தப் போரில் அல்லாஹ் தனது தூதர்களின் மூலம் உதவியதாக குறிப்பிடப்படுகிறது.
🕊️ கற்றுக் கொடுக்கும் பாடம்
நம்பிக்கை இருந்தால் சிறியவர்கள் கூட பெரிய சக்தியை வெல்ல முடியும்.
பொறுமை, தியாகம், அல்லாஹ்வின் மீது நம்பிக்கை – இவை வெற்றியின் ரகசியம்.
✨ பத்ர் போர் என்பது வெறும் போரல்ல; அது ஈமானின் வெற்றி!