17/03/2026
தேசிய ஜனநாயக கூட்டணியின் (NDA) எழுச்சிமிகு கண்டன ஆற்றினார் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநில தலைவர் அக்கா தமிழிசை சௌந்தர்ராஜன்
தமிழகம் எங்கும் எதிரொலிக்கும் மக்களின் குரலாக, தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) சார்பில் திருநெல்வேலியில் நடைபெற்ற பிரம்மாண்டமான கண்டன ஆர்ப்பாட்டம் வரலாற்றில் ஒரு மைல்கல்லாக அமைந்தது.
📍 இடம்: திருநெல்வேலி
🎤 தலைமை: இந்த மாபெரும் போராட்டத்திற்கு தலைமை ஏற்று, மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து அனல் பறக்கும் உரையை நிகழ்த்தினார் நமது தலைவர் அவர்கள்.
இந்த ஆர்ப்பாட்டத்தில்:
NDA தோழமைக் கட்சித் தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள்.
திருநெல்வேலி தெற்கு மாவட்ட நிர்வாகிகள் மற்றும் அணிப் பொறுப்பாளர்கள்.
ஆயிரக்கணக்கான உறுதிமிக்க தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள்.
ஒரே நேர்க்கோட்டில், அசைக்க முடியாத ஒற்றுமையுடன் திரண்டு வந்து இந்த நிகழ்வை ஒரு மிகப்பெரிய வெற்றியாக மாற்றிய அனைத்து தேசபக்தர்களுக்கும் திருநெல்வேலி தெற்கு மாவட்ட சமூக ஊடக பிரிவு சார்பாக எங்களது நெஞ்சார்ந்த நன்றிகள்!
15/03/2026
திருநெல்வேலி தெற்கு மாவட்டம், ஓபிசி அணி சார்பாக "சமூக நீதிக் காவலர் மோடிஜி" என்ற தலைப்பிலான சிறப்புக் கருத்தரங்கம் இன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது.
பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் ஓபிசி மக்களுக்கான நலத்திட்டங்கள் மற்றும் சமூக நீதிப் பணிகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில் இந்த நிகழ்வு ஒருங்கிணைக்கப்பட்டது
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் திரு சௌந்தர்ராஜன் ஓ பி சி அணி திருநெல்வேலி தெற்கு மாவட்ட தலைவர்
தலைமை தாங்கியோர்:
திருமதி. மீனாதேவ் (தமிழ் மாநிலச் செயலாளர்)
திரு. சுந்தர் (மாநில துணைத்தலைவர்)
திருமதி. பாவனி ரெட்டி (ஆந்திர மாநிலச் செயலாளர் & நாங்குநேரி சட்டமன்ற பார்வையாளர்)
திரு. தமிழ்ச்செல்வன் (திருநெல்வேலி தெற்கு மாவட்டத் தலைவர்)
இந்தக் கருத்தரங்கில், பின்தங்கிய சமூக மக்களின் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு எடுத்து வரும் வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. திரளான கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் இதில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
நமது சமூகத்தின் முன்னேற்றத்திற்காகத் தொடர்ந்து உழைப்போம்! 🇮🇳
#சமூகநீதிகாவலர்
26/12/2025
பாரதிய ஜனதா கட்சியின் திருநெல்வேலி தெற்கு மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் திருநெல்வேலி தெற்கு மாவட்ட தலைவர் அண்ணன் S. P. தமிழ்ச்செல்வன் தலைமையில் வள்ளியூர் MS மஹாலில் வைத்து நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக மாநில துணைத்தலைவர் கரூர் நாகராஜன் அவர்கள் கலந்து கொண்டு வழி காட்டினார்
26/12/2025
இன்றைய தினம் 101 ஆவது பிறந்த தினம் கொண்டாடும், இந்திய அரசியலில் மூத்த தலைவர்களில் ஒருவரான, ஐயா திரு நல்லகண்ணு அவர்களுக்கு, இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நேர்மையான அரசியலும், எளிமையான வாழ்வும், ஐயா நல்லகண்ணு அவர்கள் அடையாளமாகும். பொதுநலன் சார்ந்த போராட்டங்கள் நிறைந்த அவரது பொது வாழ்க்கை, இன்றைய தலைமுறைக்கு வழிகாட்டியாக திகழ்கிறது.
சிறந்த சமூக சீர்திருத்தவாதியான ஐயா திரு. நல்லகண்ணு அவர்கள், நல்ல உடல்நலத்துடனும் நீண்ட ஆயுளுடனும் தமது மக்கள் பணிகள் தொடர இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
21/12/2025
திருப்பரங்குன்றம் தீபக் தூணில் தீபம் ஏற்ற கோர்ட் அனுமதி கொடுத்தும் தீபம் ஏற்ற மறுத்ததை கண்டித்து #பூர்ணசந்திரன் என்பவர் தன்னுடைய உயிரை துச்சம் என்று நினைத்து இன்னுயிர் எய்தார் அவருக்கு மோட்ச தீபம் ஏற்றுவதற்கு திருநெல்வேலி தெற்கு மாவட்ட தலைவர் அண்ணன் எஸ் பி #தமிழ்ச்செல்வன் அவர்கள் தலைமையில் நாங்குநேரி மேற்கு ஒன்றியத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது அதை திருட்டு முன்னேற்றக் கழகம் காவல்துறையை வைத்து தடுத்து நிறுத்தி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டபோது
16/12/2025
ராதாபுரம் சட்டமன்ற தொகுதி பூத் பொறுப்பாளர்கள் மாநாடு கூடங்குளம் மாளவிகா பள்ளியில் வைத்து நடைபெற்றது
16/12/2025
நாங்குநேரி சட்டமன்ற தொகுதி பூத் பொறுப்பாளர்கள் மாநாடு பரப்பாடி SJ திருமண மண்டபத்தில் வைத்து திருநெல்வேலி தெற்கு மாவட்ட தலைவர் அண்ணன் தமிழ்ச்செல்வன் தலைமையில் இன்று நடைபெற்றது இதில்SIR குறித்து மாநில செயற்குழு உறுப்பினர் அக்கா மங்கல சுந்தரி அவர்கள் சிறப்பாக விவரித்தார்கள் இதில் சிறப்பு அழைப்பாளராக மாநிலத் துணைத் தலைவர் அண்ணன் சுந்தர் அவர்கள் மற்றும் திருநெல்வேலி தெற்கு மாவட்ட பார்வையாளர் அண்ணன் நீலா முரளி யாதவ் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்