01/05/2022
மே தினத்தை முன்னிட்டு மனுஷி அமைப்புசாரா பெண் தொழிலாளர்கள் தொழிற்சங்கம் சார்பாக வீட்டுவேலை தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைகளை அரசிடம் கொண்டு செல்ல சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் இன்று மாலை 3 மணி அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் 200 வீட்டு வேலை தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
30/04/2022
மே தினத்தை முன்னிட்டு ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத தொகுப்பு சட்டங்களை ரத்துசெய்து கலைஞர் கொணர்ந்த தொழில்ரீதியான நல வாரியங்களை பாதுகாக்கவும், வீட்டுவேலை தொழிலாளர்களுக்கு தனி சட்டம் இயற்றவும் மற்றும் உரிமைகள் கோரி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நாளை மாலை 3 மணி அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் அனைத்து வீட்டுவேலை தொழிலாளர்களும் பங்கேற்று நம் உரிமைகளை அரசிடம் கோரிக்கையாக வைக்க உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்..
ஒன்றுபடுவோம்! போராடுவோம்! வெற்றி பெறுவோம்!
15/03/2022
ஒன்றிய அரசின் தொழிலாளர் தொகுப்பு சட்டங்களை ரத்து செய்து மாநில அரசின் தொழில் ரீதியான நலவாரியங்களை பாதுகாத்திடவும், புதிய தொழிலாளர் தொகுப்பு சட்டங்களுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றக் கோரி அமைப்பு சாரா தொழிலாளர் கூட்டமைப்பு, மனுஷி வீட்டு வேலைத் தொழிற்சங்கம் சார்பில் இன்று காலை 10.30 மணியளவில் எழும்பூர் இராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து கோட்டை நோக்கி மாபெறும் பேரணி நடைப்பெற்றது. இதில் பல்வேறு தொழிற்சங்கங்களை சார்ந்த தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். இதில் வீட்டு வேலைத் தொழிலாளர்களுக்கு தனிச் சட்டம் கோரியும், மத்திய தொகுப்பு சட்டங்களை ரத்து செய்ய கோரி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற தலைமை செயலகத்தில் தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டு அமைச்சர் உயர்திரு.C.Vசண்முகம் அவர்களிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. வ