10/01/2025
மொழிப்போர் தியாகிகள் வீரவணக்கநாள் பொதுக்கூட்டத்தை
தமிழகமெங்கும் எழுச்சியுடன் நடத்திடுவோம்..!
கழக மாணவர் அணியினரே ஆயத்தமாவீர்..!
அன்னைத் தமிழ்மொழி காக்க தங்கள் தேகத்தை தீக்கிரையாக்கியும், இன்னுயிரை மாய்த்துக் கொண்டும் உயிர்த்தியாகம் செய்த வீர மறவர்களின் தியாகத்தை நினைவுகூறும் வகையில் மறுமலர்ச்சி தி.மு.கழகம் சார்பில் ஆண்டுதோறும் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்கநாள் பொதுக்கூட்டங்களை தமிழகமெங்கும் நடத்தி வருகின்றோம்.
மாணவர் அணி சார்பில் நாம் இக்கூட்டங்களை நடத்துவது தான் மற்ற அணிகளுக்கு இல்லாத பெருஞ்சிறப்பு ஆகும். திராவிட இயக்கங்களில் மாணவர் அமைப்புகள் தான் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்கநாள் பொதுக்கூட்ட நிகழ்வுகளை எழுச்சியுடன் நடத்தி வருகின்றன. மாணவர் அணியின் முதற் கடமையும் இதுவேயாகும்.
மொழிப்போராட்டத்தில் களம் கண்ட பெருமைக்குரிய தலைவரை நாம் பெற்றிருக்கிறோம். ஆதிக்க இந்தியை எதிர்த்து கல்லூரி மாணவராக வீதியில் இறங்கி போராடியவர் நம் தலைவர். திராவிட இயக்கத்தின் நாற்றங்கால் என வர்ணிக்கப்படும் மாணவர் அமைப்பில் இருந்து உருவான தலைவர். இன்றும் அந்த உணர்வு பட்டுப்போகாமல் இந்தி ஆதிக்கத்திற்கு எதிராக யமுனை நதிக் கரையில் அவருடைய குரல் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.
இத்தனை பெருமைகளையும் தாங்கி நிற்கும் திராவிட இயக்கத்தின் மிக மூத்த தலைவர் திராவிட இயக்கப் போர்வாள் கழகப் பொதுச்செயலாளர் ஐயா வைகோ எம்பி அவர்கள் வழிநடந்தும் மறுமலர்ச்சி திமுகழகம் சார்பில் கடந்த முப்பது ஆண்டுகளாக தொய்வில்லாமல் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்கநாள் பொதுக்கூட்டங்களை நாம் நடத்தியிருக்கிறோம்.
இந்த ஆண்டும் தலைமைக் கழகத்தின் சார்பில் பொதுக்கூட்டத்திற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
ஆருயிர் தலைவர் வைகோ அவர்கள் தென்சென்னையில் நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.
மிக குறுகிய காலத்திலேயே தன் செயல்பாடுகளின் மூலம் ஒட்டுமொத்த நாடாளுமன்றத்தின் கவனத்தையும் ஈர்த்திருக்கின்ற இளம் தலைவர் அண்ணன் துரை வைகோ எம்பி அவர்கள் தீரர்கள் கோட்டம் திருச்சியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார்.
கழகத்தின் முன்னணி தலைவர்களும், தலைசிறந்த சொற்பொழிவாளர்களும் தமிழகமெங்கும் நடைபெறவுள்ள பொதுக்கூட்டங்களில் பங்கேற்க இருக்கிறார்கள்.
தலைமைக் கழகத்தின் சார்பில் 26 இடங்களில் பொதுக்கூட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
தலைவர் வைகோ அவர்களும்,
இளம் தலைவர் அண்ணன் துரை வைகோ அவர்களும் பங்கேற்கும் பொதுக்கூட்டங்களில் பெருமளவில் மாணவர்களையும், இளைஞர்களையும் பங்கேற்கச் செய்ய வேண்டிய கடமை மாணவர் அணியினருக்கு இருக்கிறது. இக்கூட்டங்களுக்கு மாணவர் அணியினர் எல்லா வகையிலும் தங்களது ஒத்துழைப்பை கூடுதலாக வழங்கி மாணவர் அணியின் கடமையை நிறைவேற்ற வேண்டும்.
தலைமைக் கழகம் அறிவித்துள்ள மற்ற இடங்களிலும் மாவட்டக் கழகச் செயலாளர்களின் வழிகாட்டுதலில் மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர்கள் தங்களது துணை அமைப்பாளர்களுடன் இணைந்து கூட்ட ஏற்பாடுகளை முன்னின்று செய்ய வேண்டும்.
கூட்ட ஏற்பாடுகள் தொடர்பாக மாணவர் அணியினர் மாவட்டச் செயலாளர்களை நேரில் சந்தித்து விரைவில் திட்டமிட வேண்டும்.
தங்களது மாவட்டத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ள சொற்பொழிவாளரை மாவட்டச் செயலாளர்களின் ஒப்புதலுடன் அலைபேசியில் அழைத்து கூட்டம் நடைபெறும் விபரத்தை மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் தெரிவிக்க வேண்டும்.
பொதுக்கூட்ட அழைப்பிதழை மாணவர் அணி வாட்ஸ்அப் குழுவிலும், சமூக வலைதளங்களிலும் பதிவிட வேண்டுகிறேன்.
பொதுக்கூட்டம் நடைபெறும் நகரங்களில் மாணவர் அணி சார்பில் சுவரொட்டிகள் ஒட்டுவதை கட்டாயமாக்கிக் கொள்வோம்.
மாநில மாணவர் அணி துணைச் செயலாளர்கள் தங்களது மண்டலத்திற்கு உட்பட்ட மாவட்டங்களில் பொதுக்கூட்ட ஏற்பாடுகள் செய்யப்படுவதை விரைந்து உறுதிசெய்திட வேண்டுகிறேன். மாவட்ட மாணவர் அணி நிர்வாகிகளுடன் தொடர்பு கொண்டு கூட்டம் தொடர்பாக பேசுமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
சில மாவட்டங்களில் மாணவர் அணி அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் இன்னும் நியமிக்கப்படாமல் உள்ளார்கள். மாணவர் அணியின் நிகழ்ச்சிகளை சிறப்புற நடத்தி முடிக்கவும், தொடர்ந்து இயங்கவும் ஏதுவாக புதிய மாணவர் அணி நிர்வாகிகளை பரிந்துரை செய்து தலைமைக் கழகத்திற்கு விரைந்து அனுப்பி வைக்குமாறு ஆற்றல்மிக்க மாவட்டச் செயலாளர்களை பணிவுடன் வேண்டுகிறேன்.
மாணவர் அணித் தோழர்களே!
மொழிப்போர் தியாகிகள் வீரவணக்கநாள் பொதுக்கூட்டங்களை ஆண்டுதோறும் நடத்துவது மாணவர் அணியின் முதற்கடமை என்பதை நினைவில் கொண்டு இக்கூட்டங்களை எழுச்சியுடன் நடத்திட முன்வருவோம்.
தமிழகமெங்கும் மொழிப்போர் தியாகிகளின் நினைவை எடுத்துச் செல்வோம்.
இளம் தலைமுறையினரின் உள்ளங்களில் மொழிப்போராட்ட கனலை விதைத்திட களம் அமைப்போம்.
ஆதிக்க இந்தியை எதிர்ப்போம்!
அன்னை தமிழ் காப்போம்!
நட்புடன்,
பால.சசிகுமார்
மாநில மாணவர் அணிச் செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
10.01.2025
09/08/2024
*மறுமலர்ச்சி திமுக மாணவர் அணி நடத்தும் நீட் எதிர்ப்பு கருத்தரங்கம்!*
*வைகோ அறிக்கை*
நுழைவுத்தேர்வு என்றப் பெயரில் தமிழக மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்து, தமிழ்நாட்டில் மட்டும் இருபதுக்கும் மேற்பட்ட மாணவர்களின் உயிரை காவு வாங்கிய நீட் நுழைவுத் தேர்வு முறையை ஒழிக்க வேண்டும்; தேசிய தேர்வு முகமை கலைக்கப்பட வேண்டும்; கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும் என்பதை வலியுறுத்தியும், நீட் மோசடிகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் வருகின்ற ஆகஸ்ட் 17 ஆம் தேதி சனிக்கிழமையன்று மாலை 3 மணிக்கு சென்னையில் உள்ள மதிமுக தலைமை அலுவலகம் தாயகத்தில் மாநில மாணவர் அணிச் செயலாளர் பால.சசிகுமார் தலைமையில் நீட் எதிர்ப்பு கருத்தரங்கம் நடைபெறவுள்ளது.
மறுமலர்ச்சி திமுக பொருளாளர் மு.செந்திலதிபன், திமுக மாணவர் அணிச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான சி.வி.எம்.பி.எழிலரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச்செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான ஆளூர் ஷா நவாஸ், திராவிடர் கழக துணைப் பொதுச்செயலாளர் சே.மெ.மதிவதனி ஆகியோர் கருத்தரங்கில் பங்கேற்று உரையாற்றுகிறார்கள்.
நீட் நீக்கப்பட வேண்டும், ஏன்? என்றத் தலைப்பில் கழக மாணவர் அணி நடத்தும் கட்டுரைப் போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு இந்நிகழ்வில் பரிசும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட உள்ளது.
தொடக்கத்தில் இருந்தே நீட் தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக நின்று மறுமலர்ச்சி திமுக குரல் கொடுத்து வருகின்றது. அதற்கு மேலும் வலுசேர்க்கின்ற வகையில் கழக மாணவர் அணி நடத்துகின்ற நீட் எதிர்ப்பு கருத்தரங்கத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள மாணவர் அணி நிர்வாகிகள், சென்னை மண்டல கழக நிர்வாகிகள் மற்றும் நாட்டின் எதிர்காலமாகிய மாணவச் செல்வங்கள், கல்வியாளர்கள் ஆகியோர் பங்கேற்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க
'தாயகம்'
சென்னை - 08
09.08.2024
25/07/2024
கழக மாணவர் அணி மாநில துணைச் செயலாளர்கள் கூட்டம்!
மறுமலர்ச்சி தி.மு.கழக மாணவர் அணி மாநில துணைச் செயலாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் 26.07.2024, வெள்ளிக்கிழமை அன்று இரவு 8 மணிக்கு காணொளி வாயிலாக நடைபெறவுள்ளது.
மாணவர் அணி துணைச் செயலாளர்கள் குறித்த நேரத்திற்குள் நிகழ்வில் தவறாது பங்கேற்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
காணொளி கூட்டத்திற்கான லிங்க் (Link) மாணவர் அணி செயலாக்க வாட்ஸ்அப் குழுவில் பகிரப்பட்டு உள்ளது.
அன்புடன்,
பால.சசிகுமார்
மாநில மாணவர் அணிச் செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
25.07.2024
11/08/2023
மறுமலர்ச்சி தி.மு.க இளைஞர் அணி - மாணவர் அணி - பொறியாளர் அணி நேர்காணல்..!
மதுரை மண்டலத்திற்கு உட்பட்ட,
மதுரை மாநகர்,
மதுரை வடக்கு,
மதுரை தெற்கு,
திண்டுக்கல்,
தேனி,
சிவகங்கை,
இராமநாதபுரம் ஆகிய ஏழு மாவட்டங்களுக்கான இளைஞர் அணி - மாணவர் அணி - பொறியாளர் அணி மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் நேர்காணல் நிகழ்ச்சி வருகின்ற 14.08.2023 திங்கள்கிழமை அன்று காலை 9 மணியளவில் மதுரை தெப்பக்குளம் நோட்புக் அரங்கத்தில் நடைபெற உள்ளது.
மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொருளாளர் ஈழவாளேந்தி பொறியாளர் மு.செந்திலதிபன், துணைப் பொதுச் செயலாளர் தி.மு.இராசேந்திரன், சட்டமன்ற உறுப்பினர் புதூர் மு.பூமிநாதன், மாநில இளைஞர் அணிச் செயலாளர் ப.த.ஆசைத்தம்பி, மாநில மாணவர் அணிச் செயலாளர் பால.சசிகுமார் ஆகியோர் இந்நிகழ்வில் பங்கேற்று நேர்காணல் செய்ய உள்ளார்கள்.
மாநில மாணவர் அணி துணைச் செயலாளர் ஜெ.கௌ.மகேஷ்சங்கர் மாணவர் அணி நேர்காணலுக்கான பணிகளை மாவட்டக் கழகங்களுடன் இணைந்து ஒருங்கிணைப்பார்.
மாநில மாணவர் அணி துணைச் செயலாளர்கள் மாணவர் அணிக்கான நேர்காணல் நிகழ்வில் பங்கேற்பார்கள்.
மேற்கண்ட மாவட்டக் கழகங்கள், மாணவர் அணியில் ஈடுபாடும், ஆர்வமும் கொண்ட தகுதிவாய்ந்த ஒரு மாவட்ட அமைப்பாளரையும், மூன்று துணை அமைப்பாளர்களையும் தேர்வு செய்ய உதவிடும் வகையில் ஆர்வமுள்ள இளம் தோழர்களை நேர்காணல் நிகழ்விற்கு அனுப்பி வைத்து உதவிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
அன்புத் தலைவர் வைகோ அவர்கள் பொறுப்பு வகித்த பெருமைக்குரிய அணி 'மாணவர் அணி' ஆகும்.
மாணவர் அமைப்பு வலிமையாக இருந்தால் தான் ஒரு இயக்கத்தின் வலிமையும் உயரும்.
நம் முதன்மைச் செயலாளர் இளம் தலைவர் துரை வைகோ அவர்களின் அரசியல் பணிகளுக்கு தோள் கொடுக்கும் வகையில் மாணவர் அமைப்பை கட்டமைப்போம்.
மாணவர் அணியில் இணைந்து பணியாற்ற ஆர்வமுள்ள தோழர்கள் மாவட்டக் கழகச் செயலாளர்களின் ஒப்புதலுடன் நேர்காணல் நிகழ்வில் பங்கேற்று சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
குறிப்பு:
1. நேர்காணலில் பங்கேற்க இருக்கும் தோழர்கள் ஒரு பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் அவசியம் எடுத்துவர வேண்டும்.
2. நேர்காணலில் பங்கேற்க இருக்கும் தோழர்கள் தங்களுக்கு வழங்கப்படும் படிவங்களை சரியான தகவலுடன் பூர்த்தி செய்து தர வேண்டும்.
3. குறித்த நேரத்திற்குள் வர வேண்டும்.
தொடர்புக்கு: 9942671930
அன்புடன்,
பால.சசிகுமார்
மாநில மாணவர் அணிச் செயலாளர்,
மறுமலர்ச்சி திமுக.,
10.08.2023
17/02/2023
உங்களுக்குத் தெரியுமா! -2
சென்னை வேப்பேரி எத்திராஜுலு இல்லத்தில் 1916-ம் ஆண்டு நவம்பர் 20-ம் நாள் ஒரு கூட்டம் நடந்தது. இதில் குறிப்பிடத்தக்கவர்களாக பிட்டி தியாகராயர், டாக்டர் டி.எம்.நாயர், டாக்டர் சி.நடேசனார், பனகல் அரசர், எம்.சி.ராஜா, டாக்டர் முகமது உஸ்மான் சாகிபு, அலமேலு மங்கைத் தாயாரம்மாள், கருணாகர மேனன் உள்ளிட்டவர்கள் இருந்தார்கள். 'South Indian Liberal Federation' என்ற அமைப்பை உருவாக்கினார்கள். இதைத் தமிழில், 'தென் இந்திய நல உரிமைச் சங்கம்' என்று எழுதினார்கள். இந்த அமைப்பின் சார்பில் 'ஜஸ்டிஸ்' என்ற ஆங்கில இதழ் தொடங்கப் பட்டது. அதனால் இந்தக் கட்சி, 'ஜஸ்டிஸ் கட்சி' என்றும் தமிழில், ‘நீதிக்கட்சி' என்றும் அழைக்கப்பட்டது.
#மதிமுக_மாணவர்_அணி
12/02/2023
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் இளம் தலைவர் அண்ணன் துரை வைகோ பிரச்சாரம்!
நடைபெறவுள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிடும் மக்கள் தலைவர் வைகோ அவர்களின் ஆதரவுபெற்ற வெற்றி வேட்பாளர் திரு. ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அவர்களை ஆதரித்து, நம் இளம் தலைவர் அண்ணன் துரை வைகோ அவர்கள் வரும் பிப்ரவரி 19, ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8.30 மணிக்கு ஈரோடு மாநகர கடைவீதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார்.
நாள்முழுவதும் நடைபெறவுள்ள பரப்புரை பயணத்தில் வேட்பாளரை ஆதரித்து மாலையில் இரண்டு முக்கிய இடங்களில் தீவிர பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார்.
கழக மாணவர் அணியினரும் இந்தப் பரப்புரை பயணத்தில் பங்கேற்க வேண்டும் என, இளம் தலைவர் அண்ணன் துரை வைகோ அவர்கள் அறிவுறுத்தியிருக்கிறார்.
மாணவர் அணி மாநில துணைச் செயலாளர்கள், மாவட்ட அமைப்பாளர்கள், மாவட்ட துணை அமைப்பாளர்கள் ஒரு நாள் ஒதுக்கி ஈரோடு வருக!
நாள் முழுவதும் அண்ணன் துரை வைகோ அவர்களுடன் பயணித்து பரப்புரை மேற்கொள்ள ஆர்வமுள்ள மாணவர் அணி தோழர்கள் தங்களது பெயர்களை கீழ்காணும் அலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
தொடர்புக்கு:
பால.சசிகுமார் - 9942671930
மாநில மாணவர் அணிச் செயலாளர்
தமிழீழம் சோமு - 99526 47111
ஈரோடு கிழக்கு மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர்,
அவல்பூந்துறை பேரூராட்சி மன்றத் துணைத் தலைவர்.
-மறுமலர்ச்சி தி.மு.க மாணவர் அணி
11/02/2023
உங்களுக்குத் தெரியுமா! -1
நீதிக்கட்சி ஆட்சி அமையும் வரை மருத்துவப் படிப்பில் ஒரு மாணவன் சேர வேண்டுமானால் அவன் கட்டாயமாக சமஸ்கிருதம் கற்றிருக்க வேண்டும் என்ற விதிமுறை நடப்பில் இருந்தது.
நீதிக்கட்சி பதவியேற்றவுடன் பனகல் அரசர் ஆட்சிக் காலத்தில் மருத்துவம் படிக்க சமஸ்கிருதம் கட்டாயம் படித்திருக்க வேண்டும் என்ற விதி தூக்கி எறியப்பட்டது.
இந்திய துணைக் கண்டத்தில் நீதிக்கட்சி ஆட்சிதான் முதன்முதலாக அனைவருக்கும் கல்வி என்பதைச் சட்டமாக்கியது.
#மாணவர்_அணி_மதிமுக
03/12/2022
ம.தி.மு.க மாணவர் அணி மாநில - மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்..!
கழக மாணவர் அணி மாநில - மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் வருகின்ற 17.12.2022 சனிக்கிழமை அன்று காலை 9.30 மணிக்கு தலைமைக் கழகம் தாயகத்தில் நடைபெற உள்ளது.
தலைமைக் கழகச் செயலாளர் இளம் தலைவர் அண்ணன் துரை வைகோ அவர்கள் கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரையாற்ற உள்ளார்.
இக்கூட்டத்தில், கழக மாணவர் அணி மாநில துணைச் செயலாளர்கள், மாவட்ட அமைப்பாளர்கள், மாவட்ட துணை அமைப்பாளர்கள், மறுமலர்ச்சி மாணவர் மன்றத் தோழர்கள் அனைவரும் தவறாது பங்கேற்றுச் சிறப்பிக்க அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் பொறுப்பு நியமிக்கப்படாமல் உள்ள மாவட்டங்களில், கூட்டத்திற்கு முன்பாக முழுமையாக நிர்வாகிகளை நியமிக்க அன்புத் தலைவர் வைகோ அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
மாவட்டச் செயலாளர்களின் ஒத்துழைப்போடும், உதவியோடும் இப்பணிகள் விரைந்து முடிக்கப்பட வேண்டும்.
குறிப்பு:
1.மாணவர் அணியினர் உரிய நேரத்தில் கூட்டத்திற்கு வருகை தர வேண்டும்.
2.கூட்டத்தில் பங்கேற்கும் மாணவர் அணி நிர்வாகிகள் மாணவர் அணி சீருடையில் தான் கட்டாயம் வருகை தர வேண்டும்.
அன்புடன்,
பால.சசிகுமார்
மாநில மாணவர் அணிச் செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.,
03.12.2022
10/05/2021
பெருந்தொற்றுக் காலம்
அடையாளம் காட்டிய தலைவன்!
கொரோனா நோய்த்தொற்று பரவத் தொடங்கிய நாளில் இருந்து அண்ணன் துரை வைகோ அவர்கள் அறிக்கைகளின் வாயிலாகவும், காணொளிகளின் வாயிலாகவும் தொடர்ந்து பொதுமக்களிடம் தொடர்பில் இருக்கிறார்.
கடந்த வருடம், கொரோனாவால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் இழந்து உணவுக்கே வழியின்றி தவித்த மக்களுக்கு களத்தில் நின்று பெருமளவில் உதவிகள் செய்தார்.
ஒரு மருத்துவரைப் போல,
புள்ளி விவரங்களுடன் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா நோய்த்தொற்று தாக்கம் குறித்தும், அதன் பாதிப்புகள் குறித்தும் காணொளி வாயிலாக பொதுமக்களுக்கு விளக்கினார். பாதுகாப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தினார்.
நாம் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து விரிவாகப் பேசினார். பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படும் என்று கணிக்கப்பட்ட நேரத்திலும், நம் மனதில் நம்பிக்கையை விதைத்தார். அதற்குச் சான்றாக மருத்துவ ஆய்வுகள், அறிக்கைகளை குறிப்பிட்டார்.
மறுமலர்ச்சி தி.மு.க நிர்வாகிகள், தொண்டர்கள் கொரோனா காலத்தில் பொதுமக்களுக்கு உதவிகரமாக இருக்க வேண்டும் என்பது அண்ணன் துரை வைகோ அவர்களின் பெரும் விருப்பம்.
கட்சியினரை ஊக்கப்படுத்தும் விதமாக, அலைபேசியில் அழைத்து அவர்கள் மேற்கொண்ட கொரோனா நிவாரணப் பணிகளைப் பாராட்டினார். உதவி செய்யும் அதே நேரத்தில் உங்கள் பாதுகாப்பும் மிக முக்கியம் என, சகோதர உணர்வுடன் கட்சி நிர்வாகிகளிடம் அறிவுறுத்தினார்.
அண்ணன் துரை வைகோ அவர்களின் குரல் தமிழகம் முழுவதும் களத்தில் நின்ற அனைத்து மறுமலர்ச்சி தி.மு.க நிர்வாகிகளின் அலைபேசியிலும் ஒலித்தது.
தற்போது, கொரோனா இரண்டாவது அலை மிகக் கடுமையான பாதிப்புகளையும், உயிர் பலியையும் ஏற்படுத்தி வருகின்றது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நோய்த்தொற்று கடும் அச்சத்தை உருவாக்கியுள்ளது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அண்ணன் துரை வைகோ அவர்களுடன் அலைபேசியில் பேசிக் கொண்டு இருந்தேன்.
'நீங்கள் அலைபேசியில் தொடர்புக் கொண்டீர்கள். கடும் வேலைப்பளு. திட்டமிடாத சில நிகழ்ச்சிகள். அதைத் தொடர்ந்து கலிங்கப்பட்டியில் இருந்து நானே காரை ஓட்டிக் கொண்டு சென்னைக்கு தற்போது தான் வந்தேன். ஆகையால் குறிப்பிட்ட நேரத்தில் பேச இயலவில்லை' என்றார்.
அண்ணா..
நமது ஓட்டுனர் என்ற போது,
கொரோனா தீவிரமாக பரவி வருகின்றது. இந்த நேரத்தில் என்னால் அவர்களுக்கு ஏதேனும் தொற்று ஏற்பட்டு விடக் கூடும். எனக்கு வந்தால் தாங்கிக் கொள்வேன். அவர்களின் பாதுகாப்பு கருதி நானே வாகனம் ஓட்டி வந்தேன் என்றார்.
அண்ணன் துரை வைகோ அவர்களின் மனிதநேய பண்பு வியப்பை ஏற்படுத்தியது.
அண்ணன் துரை வைகோ அவர்களின் அறிக்கையை முகநூலில் சற்றுமுன் படிக்க நேரிட்டது.
அதில், 'நாள்தோறும் அலைபேசி அழைப்பு வந்தாலே நெஞ்சம் நடுங்குகிறது.
நம் அன்புக்குரியோர், நண்பர்கள், கழகத் தோழர்கள் மறைவு செய்தி என்னை பேரிடியாக தாக்குகிறது' எனக் குறிப்பிட்டிருந்தார்.
மேலும்,
இந்த சோதனையான சூழலில் முடிந்த உதவிகளை மக்களுக்கு செய்வோம் என, அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
ஒரு நல்ல தலைவருக்கு உரிய பண்புகள் அண்ணன் துரை வைகோ அவர்களிடம் இருக்கிறது. அதைக் கடந்த, மனிதநேய உணர்வும் அவரிடம் உள்ளது.
சமூகப் பொறுப்பு உணர்வு என்பது அவர் உதிரத்தில் கலந்த ஒன்று. காரணம், அவர் வைகோவின் மகன்.
பெருந்தொற்றுக் காலம்,
ஒரு நல்ல தலைவனை நமக்கு அடையாளம் காட்டியுள்ளது.
அண்ணனின் நற்பணிகள் தொடர்க!
அன்புடன்,
பால.சசிகுமார்
கழக மாணவர் அணிச் செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.,
10.05.2021
22/03/2021
தியாகவேங்கை அண்ணன் பூமிநாதன் அவர்களை ஆதரித்து, மதுரை தெற்கு தொகுதியில் தலைவர் வைகோ அவர்கள், இன்று மாலை பரப்புரை மேற்கொள்கிறார்.