17/02/2021
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப அவர்களின் உத்தரவின் பேரில், 01.02.2021 முதல் 15.02.2021 வரை சென்னை பெருநகரில் Operation Smile Special Drive என்ற பெயரில் பாதுகாப்பு தேவைப்படும் குழந்தைகளை மீட்டெடுத்து மறுவாழ்வு அளிக்கும் நோக்கத்துடன் 01.02.2021-ம் தேதி சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் உள்ள கருத்தரங்கத்தில் காவல் துறை கூடுதல் இயக்குநர் திருமதி. சீமா அகர்வால், இ.கா.ப பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத்தடுப்பு பிரிவு (பொறுப்பு), திரு. லால்வீனா, இ.ஆ.ப, சமூக பாதுகாப்புத் துறை இயக்குநர் மற்றும் காவல் துணை ஆணையாளர் திருமதி. H. ஜெயலட்சுமி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத்தடுப்பு பிரிவு ஆகியோர் கலந்து கொண்டு துவக்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் குழந்தைகள் நலன் சார்ந்த சமூக பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கி வரும் மாவட்ட குழந்தைகள் நல அலகு, குழந்தைகள் நலக் குழுமம் (சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்), தொழிலாளர் துறை, Child Line மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களைச் சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்த Operation Smile Special Drive -ல் சென்னை பெருநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பிச்சையெடுக்கும் குழந்தைகள், பராரியாக சுற்றித்திரியும் குழந்தைகள், காணாமல் போன குழந்தைகள், கடத்தப்பட்ட குழந்தைகள், பாதுகாப்பும் பராமரிப்பும் தேவைப்படும் குழந்தைகள், ஆபத்து விளைவிக்கக்கூடிய தொழிலில் ஈடுபடுத்தப்படும் குழந்தைகள் போன்ற அனைத்து தரப்பட்ட குழந்தைகளையும் அவர்களை அந்தச் சூழலிலிருந்து மீட்டெடுத்து அவர்களுக்கு தேவையான மறுவாழ்விற்கு ஏற்பாடு செய்து சீர்திருத்தம் செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு 12 காவல் மாவட்டங்களில் காவல் உதவி ஆணையாளர் தலைமையில் 2 காவல் ஆய்வாளர்கள் அணியில் காவல் ஆளிநர்கள் மற்றும் குழந்தைகள் நலன் சார்ந்த (சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்) மாவட்ட குழந்தைகள் நல அலகு அதிகாரிகள், குழந்தைகள் நலக் குழுமம், தொழிலாளர் துறை, Child Line மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உள்ளடங்கிய 24 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு குழந்தைகளை மீட்டெடுப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வந்தனர்.
இதன் மூலம் இதுவரை 361 ஆண் குழந்தைகள் மற்றும் 74 பெண் குழந்தைகள் மொத்தம் 435 குழந்தைகள் சென்னை பெருநகருக்குட்பட்ட பல்வேறு பகுதியிலிருந்து குறுகிய இந்த நாட்களில் பாதுகாப்பாக (குழந்தை தொழிலாளர்கள், பிச்சையெடுக்கும் குழந்தைகள் மற்றும் பாதுகாப்பும் பாராமரிப்பும் தேவைப்படும் குழந்தைகள்) மீட்கப்பட்டு குழந்தைகள் நலக்குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டு, அவர்களின் மறுவாழ்விற்கு ஏற்பாடு செய்து சீர்திருத்தம் செய்ய தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
மேலும், காணாமல் போன குழந்தைகளில் 2 ஆண் குழந்தைகள் கோயம்புத்தூரிலும், 1 பெண் குழந்தை விழுப்புரத்திலும், 1 பெண் குழந்தை இராமநாதபுரத்திலும், 1 பெண் குழந்தை முத்தாபுதுப்பேட்டிலும், 1 ஆண் குழந்தை மதுரையிலும் மொத்தம் 6 காணாமல் போன குழந்தைகள் வழக்குப்பதிவு செய்யப்பட்ட 24 மணிநேரத்தில் துரிதமான நடவடிக்கை எடுக்கப்பட்டு சென்னை பெருநகர காவல் துறையால் அமைக்கப்பட்ட சிறப்பு குழுவினர்களால் கண்டுபிடிக்கப்பட்டு தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்த நடவடிக்கையின் தொடர்ச்சியாக சிறப்புக் குழுவிற்கு கிடைக்கப்பட்ட இரகசிய தகவலின் மூலம் 04.02.2021 –ம் தேதி அன்று போரூரில் நடக்கவிருந்த குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது மற்றும் 05.02.2021 –ம் தேதி அன்று கொரட்டூரில் நடக்கவிருந்த மற்றொரு குழந்தை திருமணம் மாவட்ட சமூக நல அதிகாரியின் உதவியுடன் தடுத்து நிறுத்தப்பட்டது. மேலும் மீட்கப்பட்ட குழந்தைகளை அரசு காப்பகத்தில் ஒப்படைத்து அவர்களுக்கு தகுந்த உளவியல் ரீதியான ஆலோசனை வழங்கப்பட்டது.
இன்று, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்களின் உத்தரவுப்படி சிறப்பாக நடைபெற்ற Operation Smile Special Drive நேற்று (15.02.2021) முடிவடைந்த நிலையில் இதுவரை மொத்தம் 435 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர்.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள், OPERATION SMILE – க்காக காவல் துணை ஆணையாளர், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத்தடுப்பு பிரிவு அவர்களின் தலைமையின் கீழ் அமைக்கப்பட்ட சிறப்புக் குழுவினர்களான 24 குழுக்கள், சிறார் நல காவல் பிரிவு 1, சிறார் நல காவல் பிரிவு 2 மற்றும் குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு ஆகியோர்களுடன் கலந்துரையாடியதுடன் அவர்களுக்கு தக்க ஆலோசனை வழங்கி சிறப்பாக செயல்பட்டவர்களை வெகுவாக பாராட்டியும், இனிவரும் நாட்களிலும் சிறப்பாக செயல்படுவதற்கும் ஊக்கமளித்தார்.
Tr. Mahesh Kumar Aggarwal, I.P.S., the Commissioner of Police, Greater Chennai Police, had unveiled the special initiative of “OPERATION SMILE-2021” on 01.02.2021 to trace the Missing Children and rescue the children to need care and protection in Greater Chennai Police jurisdictions. The grand inaugural ceremony was held in the Conference Hall, O/o. the Commissioner of Police in which Tmt. Seema Agrawal, I.P.S., Addl. Director General of Police, Head Quarters, i/c Crime against Women and Children Wing, Tr. Lalvena, I.A.S., Commissioner of Social Defence and other dignitaries graciously participated.
As part of the action programme, 24 special teams have been earmarked comprising Assistant Commissioner of Police, Inspector of Police, Child Welfare Police Officers, Labour Department, Child Welfare Committee, Child Line and other stake holders to achieve the above mission to rescue the children who need care and protection and to trace the missing children in Greater Chennai Police jurisdictions. Which was carried out till 15.02.2021 with full swing.
The special teams embarked in to the mission and rescued 361 Boys, 74 Girls totalling 435 children who were roaming, wandering and begging at various places in Greater Chennai Police in a span of 15 days who have been safely produced before Child Welfare Committee in Chennai, Chengalpet and Thiruvallur who have been all safely kept in Government Child Care institutions for their reformation and rehabilitation in ensuring their bright future and career.
The other prominent and significant tracing of missing children and rescuing them include 2 boys from Coimbatore 1 Girl from Villupuram, 1 Girl from Ramnad and 1 Girl from Muthapudhupet and 1 boy from Madurai Greater Chennai police within 24 hours of the registration of the case which is prompt actions of the special teams.
The special teams received a secret information and acting on swiftly on that a Child Marriage was prevented on 04.02.2021 in Porur area and another a Child Marriage was prevented on 05.02.2021 in Korattur area with assistance of the District Social Welfare Officer and rescued Children have been safely kept in Government Home after providing psychological counselling and other legal assistances.
The Commissioner of Police, Greater Chennai Police, appreciated the effective performances of the 24 special teams, the teams of JAPU-I, JAPU-II and ACTU headed by the Deputy Commissioner of Police, Crime against Women and Children Wing, Greater Chennai Police. The assignments and actions of the special team have fetched laurel to the Greater Chennai Police who have took initiative in reforming and rehabilitating the children who needed care and protection including tracing missing children.