DMK - Dravida Munnetra Kazhagam

DMK - Dravida Munnetra Kazhagam

Share

DMK | Dravida Munnetra Kazhagam
Ins :- http://instagram.com/arivalayam
x :- https://x.com/arivalayam |
YT:- https://www.youtube.com/@thedmkofficial

To liberate the Dravidian race from the shackles of superstition and religious dogmas, to revive and restore the ancient heritage of Tamil and Tamilnadu, and to protect Tamil language from imperialism, Dravida Munnetra Kazhagam – (DMK) was founded by Dr. C.N. Annadurai – better known as Anna (Elder brother) on 17th September 1949. The History of DMK is the history of rational and reformist movemen

02/06/2026

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 103வது பிறந்தநாளையொட்டி கழகத் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் நிகழ்ச்சிகள்!

- தலைமைக் கழக அறிவிப்பு

02/06/2026

தமிழ்நாட்டில் சரியான ஆட்சியை நடத்துவதற்கான வழிமுறைகளைப் பார்க்காமல் திமுகவையே குறை சொல்லி வருகிறார். சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை கவனிக்காமல் இருப்பதை மக்கள் மறந்துவிட மாட்டார்கள்.

- கழக துணைப் பொதுச் செயலாளர் திருமிகு.கனிமொழி கருணாநிதி எம்.பி அவர்கள்

01/06/2026

முதலமைச்சரான பிறகும் தேர்தல் பிரச்சாரத்தில் பேசுவதுபோலப் பேசி வருகிறார் விஜய்!

200 யூனிட் மின்சாரம், விவசாயக் கடன் தள்ளுபடி விவகாரங்களில் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றுகிறது தவெக அரசு!

தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாட மோடியிடம் அனுமதி கேட்கிறார் விஜய்!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (01-06-26) மருத்துவர் எழிலன் நாகநாதன் அவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தது குறித்த செய்திக்குறிப்பு:

டெல்லியில் செய்தியாளர்களைச் சந்திக்காமல் அவசர அவசரமாகக் காரில் ஏறிப் போன முதலமைச்சர் விஜய், இன்று திருச்சியில் பொதுமக்களுக்குப் பதிலாகக் "கேப்டிவ் ஆடியன்ஸ்" (Captive Audience) எனப்படும் தேர்ந்தெடுக்கப்பட்ட கூட்டத்தை வைத்து நிகழ்ச்சி நடத்தியுள்ளார். முன்னாள் முதலமைச்சர்கள் டெல்லி சென்று பிரதமரைச் சந்தித்தபிறகு ஊடகவியலாளர்களைச் சந்திப்பது வழக்கம். ஆனால், முதலமைச்சர் விஜய் ஊடகங்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் காரில் ஏறித் தப்பிச் செல்வதையே வழக்கமாகக் கொண்டுள்ளார்.

அறிஞர் அண்ணா கூறியதைப்போல, "எதிர்க்கட்சியாக இருக்கும்போது கிண்ணத்தை எப்படி வேண்டுமானாலும் சுழற்றலாம்; ஆனால் ஆளுங்கட்சியாக இருக்கும்போது ஆட்சி என்பது நெய்க்கரண்டியைப் போன்றது, அதனைச் சிந்தாமல் கையாள வேண்டும்". முதலமைச்சர் விஜய் இன்னும் தேர்தல் பிரச்சார மனநிலையிலேயே பேசுவதை நிறுத்திவிட்டு, தமிழ்நாட்டிற்கான தெளிவான "விஷன் ஸ்டேட்மென்ட்" (Vision Statement) வழங்க வேண்டும் என டாக்டர் எழிலன் வலியுறுத்தினார்.

தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி மாதந்தோறும் மின்கட்டணம் மற்றும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்காமல், இன்னும் இரு மாதங்களுக்கு ஒருமுறைக் கட்டணம் வசூலிப்பதையும், அதில் பல்வேறு நிபந்தனைகள் விதிப்பதையும் எழிலன் சுட்டிக்காட்டினார். விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்வதில் மக்களை ஏமாற்றாமல், 2006-ல் கலைஞர் அவர்கள் நிபந்தனையின்றி 7,000 கோடி ரூபாயைத் தள்ளுபடி செய்த அரசாணையைப் படித்துப் பார்க்குமாறு முதலமைச்சருக்கு அறிவுறுத்தினார்.

மகளிர் உரிமைத்தொகை, காலை உணவுத்திட்டம், மக்களைத் தேடி மருத்துவம் போன்ற திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளைத் தாம் தொடர்வதாகக் கூறிவரும் முதலமைச்சர், புதியதாகத் தமிழ்நாட்டிற்கு என்ன செய்யப்போகிறார் என்றும் கேள்வி எழுப்பினார். 100 யூனிட் இலவச மின்சாரத்தின் தொடக்கம் 1989-ல் கலைஞர் வழங்கிய இலவச மின்சாரத்தில்தான் உள்ளது என்பதையும் அவர் நினைவூட்டினார்.

தமிழ்நாட்டில் தற்போது அதிகரித்துவரும் பாலியல் வன்கொடுமைகள் மற்றும் ஆணவப்படுகொலைகள் குறித்துக் கேள்வி எழுப்பிய எழிலன், முன்பு திமுகவை நோக்கி விஜய் எழுப்பிய கேள்விகள் இப்போது அவரிடமே "பூமராங்" ஆகத் திரும்பிவருவதாகக் குறிப்பிட்டார். மேலும், தமிழ்த்தாய் வாழ்த்தைவிட "வந்தே மாதரம்" பாடலுக்கு முக்கியத்துவம் அளிப்பதன்மூலம் மாநில உரிமைகளை முதலமைச்சர் விட்டுக்கொடுக்கிறாரா? என்றும், மேகதாது மற்றும் மும்மொழிக்கொள்கை குறித்து அவர் ஏன் மௌனம் காக்கிறார் என்றும் கேள்வி எழுப்பினார்.

முதலமைச்சர் விஜய் தமது அமைச்சர்களை ஊடகங்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்க அறிவுறுத்த வேண்டும் என்றும், வெறும் ரசிகர்மன்றத் தலைவராகச் செயல்படாமல் பொறுப்புள்ள முதலமைச்சராகச் செயல்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

01/06/2026

எதிர்க்கட்சியாக இருக்கும்போது கிண்ணத்தை எப்படி வேண்டுமானாலும் சுற்றலாம், ஆனால் ஆளுங்கட்சியாக இருக்கும் போது நெய் கரண்டியை நினைத்தபடி சுற்ற முடியாது. தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவர்கள் இன்னும் தேர்தல் பிரச்சார மனநிலையிலேயே பேசிக்கொண்டிருக்கிறார்.

கழக மருத்துவர் அணிச் செயலாளர் திரு Dr.எழிலன் நாகநாதன் அவர்கள்

01/06/2026

தமிழ்நாட்டைப் பொருளாதார வளர்ச்சியில் முதலிடத்திற்குக் கொண்டு சென்றதும், மக்களின் உரிமைகளுக்காக என்றும் குரல் கொடுப்பதும் திமுக தான். இது வெறும் கட்சியல்ல, மக்களின் உடன்பிறப்பு சக்தி!

கழக மருத்துவர் அணிச் செயலாளர் திரு Dr.எழிலன் நாகநாதன் அவர்கள்

01/06/2026

7 ஆயிரம் விவசாய கடன்களை தள்ளுபடி செய்தது திமுக அரசு, Covid காலத்தில் கூட திமுக ஆட்சியின் முதல் start best start ஆக இருந்தது!

கழக மருத்துவர் அணிச் செயலாளர் திரு Dr.எழிலன் நாகநாதன் அவர்கள்

01/06/2026

பிற்படுத்தப்பட்ட - ஒடுக்கப்பட்ட மக்களின் நம்பிக்கையாய் ஒளிவீசி - தமிழ்மொழி மற்றும் பண்பாட்டைக் காக்க களப்பணியாற்றிய திரு.ஏ.டி.பன்னீர்செல்வம் அவர்களின் புகழை அடுத்தடுத்த தலைமுறைக்கும் கொண்டு சேர்ப்போம் - இனமானம் காப்போம்!

- மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள்

29/05/2026

நீங்க டைம் எடுத்து கத்துக்கிட்டு வந்து சட்டம் ஒழுங்கை காப்பாத்துற வரை தமிழ்நாடு தாங்காது CM SIR!

- மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள்

Want your business to be the top-listed Government Service in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


Anna Arivalayam, Anna Salai
Chennai
600018