31/03/2026
#அலெக்சாண்டர்_கொலொன்டேய்_பிறந்த_தினம்_இன்று
ரஷ்யாவில் பாரம்பரிய சமூக பழக்கவழக்கங்கள், ஒடுக்குமுறைகள் பிற்போக்கு வாதங்கள் போன்றவற்றிற்கு எதிராக தீவிர வாழ்நாள் பணிகளை மேற்கொண்ட ரஷ்ய புரட்சியாளர்; சோவியத் நாட்டின் அங்கீகாரம் பெற்ற அமைச்சராக பணியாற்றிய முதல் பெண்மணி என்ற பெருமையை பெற்றார் #அலெக்சாண்டர் கொலொன்டேய்.
1872 ஆம் ஆண்டு வசதிபடைத்த குடும்பத்தில் பிறந்த அலெக்ஸாண்டர் கொலொன்டாய் சிறுவயதிலிருந்தே புரட்சிகர பார்வை கொண்ட சமூக சூழ்நிலையில் வளர்ந்தார். புரட்சிகர அரசியல் மீதான ஈர்ப்பு எழுத்தை நோக்கியும் ரஷ்யாவை நோக்கியும் அவரை நகர்த்தியது. பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை எதிர்த்து தனது உறவினரான விளாடிமிர் கொலொன்டாயய் திருமணம் செய்து கொண்டார். 2 ஆண்டு கால குடும்ப வாழ்க்கைக்கு பிறகு சமூகத்தின்பால் இருந்த ஈர்ப்பு குடும்ப வாழ்வை விட்டு விலகி அவரை புரட்சிப் பாதை நோக்கி பயணம் செய்ய வைத்தது. திருமணம் , பெற்றோரின் எதிர்ப்புகளை கடந்து 26 ஆவது அகவையில் முழுமையாக அரசியல் பணிகளில் ஈடுபடத் தொடங்கினார்.
ரஷ்யாவில் பின்லாந்து சுதந்திரப் போராட்டத்தில் மிகுந்த அக்கறை செலுத்தத் தொடங்கினார். பின்லாந்தில் உள்ள தொழிலாளர்கள் தங்களை தொழிற்சங்கங்களாக ஒழுங்கமைக்க உதவியதுடன், பின்னிஷ் மக்களுக்கும் ரஷ்ய எதேச்சதிகாரத்திற்கும் இடையிலான போராட்டம் பற்றி கட்டுரைகளை எழுதினார். அவரது புத்தகமான "பின்லாந்தில் உள்ள தொழிலாள வர்க்கத்தின் நிலை" 1903 இல் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கொலன்டேய் ஐரோப்பா முழுவதும் பயணம் செய்து
ரோசா லக்சம்பர்க், பிளக்கனோவ் போன்றோருடன் இணைந்து கருத்தியல் தளத்தில் தன்னை வளர்த்துக்கொண்டவர் ,திறமை மிக்க ஒரு எழுத்தாளராகவும் தலைசிறந்த பேச்சாளராகவும் மெருகேற்றிக் கொண்டார்.1906 இல்,
பிளெக்கானோவ் மீதான அபிமானத்தால் #மென்ஷிவிக்குகளில் சேர்ந்தார். பின்பு மென்ஷ்விக் கட்சிக்குள் நடந்த சந்தர்ப்பவாத போக்குகள், விவாதங்கள் முக்கியமாக #முதலாம்_உலகப் போருக்கு ஆதரவான நிலைப்பாடுகள் அவரை போல்ஷ்விக் நோக்கி நகர்த்தியது.முதலாம் உலகப் போரில் ரஷ்யா பங்கு பெறக் கூடாது என்ற கருத்தில் தீர்க்கமாக நின்ற லெனினின் நிலைப்பாட்டை அலெக்சாண்டர் கொலொண்டேயும் தீவிரமாக ஆதரித்தார். இந்நாட்களில் ரஷ்யாவின் சோஷியல் டெமாக்ரடிக் தொழிலாளர்கள் கட்சியின் புரட்சிகர கருத்துகளை தொழிலாளர்கள் மத்தியில் கொண்டு செல்பவர் ஆகவும் முதலாம் உலகப்போரை தீவிரமாக எதிர்ப்பதாகவும் அவரது பயணங்கள் தீவிரமடையத் தொடங்கியது.
அதேபோன்று பெண்கள் சார்ந்த பிரச்சினைகளுக்கும் கேள்விகளுக்கு தீவிரமாக இயங்க கூடிய ;நல்ல புரிதல் இருக்க கூடிய சூழ்நிலை இல்லாத காலகட்டத்தில் அலெக்சாண்டர் கொலெண்டாய் போன்றோர் வீரியமாக "பெண்கள் கேள்விகள்" சார்ந்து (Women question) தொடர்ந்து இயங்கினர்.
பெண்கள் சார்ந்த கேள்விகளுக்கு சோஷலிஸ்ட்களுக்கிடையே வேறுபட்ட பார்வைகள் இருந்தது.போல்ஷ்விக் கட்சிக்குள்ளேயே வெவ்வேறு பார்வைகள் மாற்றுக்கருத்துக்கள் இருந்தன. ஆனால் பெண்ணிய போராட்டங்கள் வலுப்பெற்ற காலகட்டங்களில் அதற்கான ஆதாரவுகளும் கட்சிகளிலும் தொடங்கியது. பிப்ரவரி புரட்சிக்கு வித்திட்ட ஆடை தொழிற்சாலை பெண் தொழிலாளர்களின் மாபெரும் புரட்சிகரப் போராட்டம் பல்வேறு புரட்சிகர மாற்றங்களை ஏற்படுத்தியது. முதலாளித்துவ பெண்ணிய கருத்தாக்கங்களையும் வெறும் பெண் விடுதலையை மட்டும் பேசும் சித்தாந்தங்களையும் முழுமையாக எதிர்த்து அலெக்சாண்டர் கொலொன்டாய் ஆண்-பெண் பேதங்களற்று உழைக்கும் மக்களாக ஒருங்கிணைந்து இந்த ஒடுக்குமுறை சுரண்டல் அமைப்பை தூக்கி எறிய முயல வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அதேபோன்று பெண்கள் மீதான ஒடுக்குமுறை பொருளாதார கட்டத்திலிருந்து உளவியல் ரீதியாக கட்டமைக்கப்படுகிறது என்ற பார்வையோடு பயணித்தவர்களில் கொலொன்டேயும் ஒருவர்.குடும்பம், திருமணம், தனியுடைமை போன்றவை சுரண்டல் பொருளாதார அமைப்பு முறையின் வளர்ச்சியை தக்க வைத்துக் கொள்ளும் ஸ்தாபனங்கள் என்பதும் பெண்ணை கருத்தியல் தளத்தில் சமூகத்தளத்தில் பொருளாதாரத்தில் சுரண்டுவதற்கான காரணிகளை அவை வழங்குகின்றன என்றும் தொடர் பிரச்சாரங்கள் ஊடாக எழுத்துக்கள் ஊடாக எடுத்துரைத்தார்.
திருமணம் மற்றும் குடும்பம் குறித்த சமூகத்தின் மனநிலை மாறும்போதுதான் பெண்களின் விடுதலையை அடைய முடியும் என்று கொலோன்டாய் நம்பினார்.
பிறகு பெண்ணியம் சார்ந்த நிலைப்பாடுகள் (குடும்பம், ஆண் பெண் உறவு திருமணபந்தம்) அவருக்கு இருந்த கருத்தாக்கங்கள் மற்றும் கட்சியின் அமைப்பு முறை இருந்த மாற்றுக்கருத்துக்கள் போல்ஷ்விக் கட்சியை விட்டு விலகி opposition என்னும் அமைப்பை தொடங்குவதற்கு வழிவகுத்தது.ஸ்டாலின் அதிகாரத்திற்கு வந்த பிறகு கொலண்டாயை இராஜதந்திரியாக வெளிநாடுகளுக்கு அனுப்பினார். இதில் நோர்வே (1923-25), மெக்ஸிகோ (1925-27), நோர்வே (1927-30) மற்றும் சுவீடன் (1930-45) ஆகிய நாடுகள் அடங்கும்.1945 இல் ஓய்வு பெற்ற கொலண்டாய் 1952 மார்ச் 9 ஆம் தேதி இறக்கும் வரை மாஸ்கோவில் வாழ்ந்தார்.
-தோழமையுடன்
பொதுவுடைமை இயக்கம்

25/03/2026
08/03/2026
03/02/2026
30/01/2026
12/10/2025
06/10/2025
30/08/2025
15/08/2025
05/08/2025
30/07/2025