Minnangadi

Minnangadi

Share

Bookstore

26/10/2025

ரஷ்ய இலக்கிய நூல் வரிசை!

மக்கள் பதிப்பாக மகத்தான சாதனையைத் தொட்டிருக்கிறது.
ரஷ்ய இலக்கியங்கள் மீது எனக்குப் பதின்ம பருவத்திலிருந்து தொடர்ந்து கொண்டு இருக்கும் அதீத காதலின் அடுத்த படி நிலையே இந்த நூல் வெளியீடு. ரஷ்யாவின் மீர் பதிப்பகம், முன்னேற்ற பதிப்பகம், ராதுகா பதிப்பகம் மூன்றும் இந்தியாவில் செய்த மகத்தான சாதனை புரிந்தன. அந்தப் பதிப்பகத்தின் வெளியீடுகள் வாசகர்களை முடிந்த வரை மனிதர்களாக மாற்றியது.
60 - 70களில் மக்கள் பதிப்பாக ஏராளமான நூல்கள் வெளிவந்தன. வாசகர் வட்ட வெளியீடுகள், ஹிக்கின் பாதம்ஸ் வெளியீடுகள், ரஷ்ய வெளியீடுகள் அனைத்தும் மக்கள் பதிப்பாக ஒரு ரூபாய் விலையில் புத்தகங்கள் வெளியிட்டன. படிப்பவர் எண்ணிக்கையை, வாசக பரப்பை உயர்த்தும் உன்னத திட்டங்கள் அவை.
அந்தத் திட்டங்களின் அடுத்த வடிவமாகவும் nமின்னங்காடியின் இந்த வெளியீடுகளை நான் நினைக்கிறேன்.
ஆன்டன் செகாவ் சிறுகதைகள் குறுநாவல்கள் - இது எங்கள் ரஷ்ய நூல் வரிசையில் முதல் வெளியீடு. முன்பதிவு மூலமாக 1200 பிரதிகள் விற்பனையானது.
60 ஆண்டுகள் கழித்து நடக்கிற மகத்தான பாய்ச்சல் இது. அடுத்து இரண்டு ரஷ்ய நாவல்கள் மக்கள் பதிப்பாக வெளிவர இருக்கின்றன. ஒவ்வொன்றும் 180/- ரூபாய் விலை. முன் வெளியீட்டு திட்டத்தில் நூறு ரூபாய்க்கு வழங்கப்படும்.
இது குறித்த அறிவிப்பு நவம்பர் முதல் வாரத்தில்...
நூல் விற்பனையாளர்கள் தொடர்பு கொள்ளலாம்.
7824049160

05/03/2025
23/10/2024

இரண்டு ஆண்டுகளுக்கு முன் எடுத்த முயற்சி இப்போதுதான் கை கூடியிருக்கிறது. கடின உழைப்பு. பெரும் செலவு. மக்கள் வாங்குவார்களா என்ற அச்சம் அத்தனையையும் கடந்து களத்தில் நிற்கிறேன். ருஷ்ய புரட்சியை உயிருள்ள திரை வடிவமாக பார்க்க இதைவிட சிறந்த இலக்கியம் இருக்குமா எனத் தெரியவில்லை. 40 ஆண்டுகளாக எங்கும் கிடைக்கவில்லை எனக் கேட்டுக்கொண்டிருந்த தோழர்களுக்கு ஷேர் செய்து தெரியப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.

26/07/2024

குமுதம் இதழில் பெரு மதிப்புக்குரிய டெல்லி கணேஷ் அவர்களைக் குறித்த கட்டுரை. நண்பர் இயக்குனர் கரு. பழனியப்பன் அவர்கள் கட்டுரையை இப்படி முடித்திருக்கிறார். என் மீது அவர் வைத்திருக்கும் அன்பும் மதிப்பும் திகைக்க வைத்தது. நன்றி நண்பரே.

10/07/2024

மாதந்தோறும் அரசு பள்ளி மாணவர்களிடம் பாடம் காற்று வருகிறேன்.

03/06/2024

கலைஞரின் தொலை தூரப் பார்வை!



தமிழ்மகன்





கலைஞரின் தொலைநோக்குப் பார்வைக்கு பல உதாரணங்கள் சொல்லலாம். தொலை தூரத்தை அவர் பார்த்த பார்வை ஒன்றையே அவருடைய தொலை நோக்குப் பார்வைக்கு சான்றாக சொன்னால் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

நகர விரிவாக்கம் குறித்து அவருடைய தொலைநோக்குப் பார்வை அதிலே முக்கியமானது. பூக்கடை பேருந்து நிலையம் இன்றைய உலகில் பலருக்கும் நினைவில் இருக்காது. அப்போதெல்லாம் அங்கிருந்துதான் தமிழகம் முழுமைக்கும் பேருந்துகள் புறப்படும். கொத்தவால் சாவடி, உயர் நீதிமன்றம், சைக்கிள் செல்வதற்கு வழியில்லாத குறுகிய சாலைகளில் நடக்கும் நெரிசல் வர்த்தகம் போன்றவை இன்றைக்கும் மலைப்பாக இருக்கும். மக்கள் எறும்பு போல ஊர்ந்து செல்லும் போக்கை அங்கே பார்க்கலாம். அங்கிருந்துதான் தமிழகம் முழுக்க பேருந்து புறப்படும். பேருந்து நகர்ந்து சென்று ஐந்து கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும். பேருந்துகளை சற்றே வேகமாக செலுத்த வேண்டுமானால் அங்கிருந்து இரண்டு கிலோ மீட்டர்களைக் கடக்க வேண்டும்.

இந்தக் கொடுமையைக் காண்கிறார் கலைஞர். பெரு நகர வளர்ச்சிக் கழகத்தை அணுகி, கோயம்பேடு என்ற பகுதியில் புதிய பேருந்து நிலையத்தையும் காய்கறி மொத்த விலை கடையையும் தொடங்குவதாக கலைஞர் முடிவு செய்தார்.

அப்போது பலரும் கேட்ட கேள்வி எனக்கு நன்றாக நினைவிருக்கிறது.

``கோயம்பேடு என்ற ஊர் எங்கே இருக்கிறது?’’

``அங்கே பேருந்து நிலையத்தை வைத்தால் எப்படி செல்வது, அங்கு செல்வதற்கு பஸ் வசதி உண்டா? என்றெல்லாம் கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு சில ஆண்டுகளுக்கு முன் வந்த ஆனந்தவிகடன் தீபாவளி மலரில் சென்னைக்கு அருகே உள்ள கோயம்பேடு கிராமத்தில் குறுங்காலீசுவரர் கோயில் பற்றி ஒரு கட்டுரை வெளியானது. `சுற்றிலும் வயல்களும் எரிகளும் குளங்களும் சூழ்ந்த இயற்கையான சூழலின் நடுவே அமைந்திருக்கிறது குறுங்காலீசுவரர் கோயில்’ என்று தொடங்கும். அங்குதான் புதிய பேருந்து நிலையத்துக்குத் திட்டமிட்டார் கலைஞர்.

கலைஞர் இந்த திட்டத்துக்கு வித்திட்டது 1974 ஆம் ஆண்டு. அடுத்த ஆண்டிலேயே அவருடைய ஆட்சி எமர்ஜென்சி காலத்தில் கலைக்கப்பட்டது. அடுத்த 13 ஆண்டுகள் எம்ஜிஆர் தமிழகத்தில் முதலமைச்சராக இருந்தார். அந்தத் திட்டம் அப்படியே கைவிடப்பட்டது. மீண்டும் 1989 ஆம் ஆண்டு கலைஞர் ஆட்சி வந்ததும் பூக்கடை பேருந்து நிலையத்தின் பரிதாப நிலையை கணக்கில் கொண்டு மீண்டும் கோயம்பேடு பேருந்து திட்டத்தை வேகமாகத் தொடங்கினார். திட்டம் தொடங்கிய அடுத்த ஆண்டிலேயே மீண்டும் ஆட்சி கலைப்பு. அடுத்து ஜெயலலிதா ஆட்சி. அவரது ஆட்சியில் கோயம்பேடு பேருந்து நிலையமும் காய்கறி மொத்த வியாபார நிலையமும் தொடங்கப்பட்டன.

கலைஞர் 74 இல் தொடங்கிய திட்டம் 94 இல் ஒரு வழியாக நிறைவேற்றி முடிக்கப்பட்டது. கோயம்பேடுக்கு எங்கே இருக்கிறது அந்த கிராமத்துக்கு எப்படி செல்வது என்று கேட்டவர்கள் எல்லாம் இப்போது கிளாம்பாக்கம் எங்கே இருக்கிறது அந்த ஊருக்கு எப்படி செல்வது என்று கேலி செய்து கொண்டு இருக்கிறார்கள்.

ஒரு நகரம் வளர்வதை தொலைநோக்கோடு சிந்தித்து செயல்படுத்த வேண்டியது முக்கியம்.

கலைஞர் குடிசை மாற்று வாரியம் தொடங்கிய போதும், ரேஷன் கடை தொடங்கிய போதும், கை ரிக்ஷாவை ஒழிக்க நினைத்தபோதும், உழவர் சந்தை - சமத்துவபுரம் - டைடல் பார்க் போன்றவற்றைத் தொடங்கிய போதும் அதனால் ஏற்படும் நன்மையை அந்தத் திட்டம் நிறைவேற்றப்படும் காலத்தில் பலரும் நம்பிக்கை இல்லாமல் தான் எதிர்கொண்டார்கள்.

கலைஞர் காலத்தை கடந்து யோசிப்பவராக இருந்தார். அதனால்தான் ஒரு பக்கம் டைடல் பார்க், இன்னொரு பக்கம் சமத்துவபுரம் என்று அவரால் யோசிக்க முடிந்தது. ரயில் பாதை சந்திப்பு, ஆறுகள் கடக்க வேண்டிய பாதையில் மட்டும்தான் பாலங்கள் காட்டுகிற நடைமுறை இருந்த காலத்தில் இரண்டு சாலைகள் சந்திக்கிற இடத்தில் பாலம் கட்ட வேண்டும் என்று யோசித்தவர் கலைஞர். சென்னையின் அண்ணா மேம்பாலம் அப்படி உருவாக்கப்பட்டதுதான். அப்போதும் அங்கே எதற்கு பாலம் என்று கேட்டவர்கள் இருந்தார்கள். இப்போது பொன்விழா கண்டிருக்கும் அண்ணா மேம்பாலத்தைத் தவிர்த்துவிட்டு சென்னையை நினைத்துப் பார்க்க முடியுமா?

தமிழகத்துக்கு புதிய அடையாளங்களை உருவாக்குவதில் கலைஞர் எடுத்துக் கொண்ட முயற்சிகள் சாதாரணமானவை அல்ல. பாலர் திரையரங்கை கலைவாணர் அரங்கம் என்று மாற்றினார். கடற்கரையில் அண்ணாவுக்கு நினைவிடம் எழுப்ப வேண்டும் என்று அவர் நினைத்ததுகூட ஒரு மகத்தான சாதனைதான். சென்னை பல்கலைக்கழகத்திற்கு எதிரே நடமாடும் பல்கலைக்கழகமாக இருந்த அண்ணாவுக்கு நினைவிடம் எழுப்பினார். கன்னியாகுமரியில் கடலின் பாறையில் விவேகானந்தருக்கு ஒரு மண்டபம் இருக்கிறது. அதை விவேகானந்தர் பாறை என்றுதான் அழைத்து வந்தார்கள். இப்போது அந்த இடத்தை அய்யன் திருவள்ளுவர் சிலை என்று உச்சரிக்க தொடங்கி இருக்கிறார்கள். எழிலகம், குறளகம், வள்ளுவர் கோட்டம், சீரணி அரங்கம், தொல்காப்பிய பூங்கா, அறிவாலயம், அன்பகம், பூம்புகார், அண்ணா நூலகம் என அவர் ஏற்படுத்திய அடையாளங்கள் தமிழருக்கான அடையாளங்கள், தமிழுக்கான அடையாளங்கள். ஏறத்தாழ 20 ஆண்டுகள்தான் அவர் ஆட்சிப் பொறுப்பிலே இருந்தார். அதற்குள் அவர் செய்த சாதனைகள், சமூகத் திட்டங்கள், பெண்களுக்கான உரிமைகள், சொத்துரிமை, கல்வி சமத்துவம், எழுப்பிய கல்விக் கூடங்கள், உருவாக்கிய பஞ்சாயத்துகள், மாநில உரிமைக்கான போர்க் கொடிகள் போன்ற அனைத்துமே இன்றும் கூட இந்திய அளவில் ஆச்சரியமாகப் பார்க்கப்படுகின்றன.

இந்தியாவில் பல மாநில கட்சிகள் அந்தந்த மாநிலங்களில் ஆட்சிப் பொறுப்பிலே இருக்கின்றன. ஆனால் கலைஞர் தலைமையிலான ஆட்சி மாநில தலைவர் அந்தஸ்துக்கான ஆட்சி அல்ல. பீகார், ஒடிசா, உத்தர பிரதேசம், ஆந்திரா, பீகார், மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் அந்த மாநில கட்சிக்கான முதல்வர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் மாநில உரிமைக்கான உரிமையை பேசுகிறவர்களாக இருக்கிறார்களா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

மாநில உரிமைக்கான ராஜமன்னார் கமிஷன், செம்மொழி அந்தஸ்துக்கான போராட்டம், பெண் உரிமைக்கான போராட்டம், தாய் மொழி கல்வி, இரு மொழிக் கொள்கை, இட ஒதுக்கீடு போன்ற பல சமூகப் பிரச்சினைகளில் நாம் எடுத்திருக்கும் அக்கறையை மற்ற மாநில முதல்வர்களின் செயல்பாடுகளில் பார்க்கவே முடியாது. தெலுங்கு, கர்நாடகா, பீகார், ஓடிசா போன்ற மாநிலங்களில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் இல்லை. மாறாக இந்தியைப் படிக்கிறார்கள். சமீபத்தில் பீகாரில் நிதீஷ்குமார் அவர்கள் சொன்னது நினைவுக்கு வருகிறது. அவர் பிகாரி மொழியை சேர்ந்தவர். ஆனால் இந்தி படிப்பது நல்லது என்று பேசுகிறார். அப்படித்தான் ஒடிசா முதல்வரின் நடவடிக்கையும் இருக்கிறது. குஜராத் மாநிலம், இந்தி மொழியை எதிர்க்கிற, இட ஒதுக்கீட்டை, மாநில உரிமையை கோருகிற ஒரு மாநிலமாக ஒருபோதும் இருக்கவில்லை.

ரீஜினல் பார்ட்டிஸ் என்று ஆங்கிலத்திலே பொதுவாக சொன்னாலும் அவையும் தேசிய நீரோட்டத்தில் கலந்துவிட்டவைதான். அங்குள்ள ஒரு தலைவர் அங்கே ஆளுகிறார், அவ்வளவுதான். அதனால்தான் தமிழகத்தைப் பார்த்து பல மாநிலங்களில் 50, 60 ஆண்டுகள் கழித்தும் ஆச்சரியமாகப் பார்க்கிறார்கள்.

தொலை நோக்குப் பார்வையில் திட்டங்களை வகுப்பதில் ஒரு சிக்கல் இருக்கிறது. அதே பார்வை அதனால் பயனடையப் போகிறவர்களுக்கும் இருக்க வேண்டும். இல்லையென்றால் மரம் வைக்கும்போது எதற்கு இப்போது மரம் என்று கேட்பார்கள். அது கனி தரும் காலம் வரும்போதுதான் அதன் பலனை உணரக் கூடியவர்களாக இருப்பார்கள். அதனால் கலைஞரின் திட்டங்களைப் புரிந்துகொள்ள 50 ஆண்டுகள் தேவைப் படுகிறது. உடனடி திட்டங்கள் மூலம் சோறு போடுவது, செருப்பு வழங்குவது போன்றவற்றால் மக்களை ஈர்ப்பது சுலபம். மீன் வழங்குவதைவிட மீன்பிடிக்கக் கற்றுத்தருவதுதான் நியாயமான ஆட்சியாளரின் கடமை. அதைத்தான் கலைஞர் தன் வாழ்நாள்எல்லாம் செய்தார்.

கொச்சையாக சொல்ல வேண்டுமானால் கலைஞரின் திட்டங்களைப் புரிந்துகொள்ள `வயசு பத்தாத’வர்கள் அவரை விமர்சித்தார்கள்.

அவருடைய அக்கறைக்கு ஒரு சான்று சொல்கிறேன். சிக்குன் குனியா வந்த நேரம் சித்த மருத்துவர்கள் விழா வேம்பு கஷாயத்தை அரசு பரிந்துரைக்க வேண்டும் என்றார்கள். கலைஞர் உடனே அறிவிக்கவில்லை.

கலைஞர் சித்த மருத்துவர்களை அழைத்துப் பேசினார். ``இதை குழந்தைகள் குடிக்கலாமா, கர்ப்பிணிகள் குடிக்கலாமா, முதியவர்கள் குடிக்கலாமா? எந்தெந்த வயதினர் எவ்வளவு எடுத்துக்கொள்ள வேண்டும், எத்தனை நாள் அருந்த வேண்டும், பக்க விளைவு உண்டா என நூறு கேள்விகள் கேட்டு விளக்கம் பெற்ற பின்புதான் அதை அரசு மருத்துவமனைகளில் அனுமதித்தார்.

``நாங்களே யோசிக்காத சந்தேகங்களை எல்லாம் அவர் கேட்டது ஆச்சரியமாக இருந்தது’’ என்றார் அந்தக் குழுவிலே இருந்த மருத்துவர் கு. சிவராமன் அவர்கள். தான் செயல்படுத்தும் ஒவ்வொரு திட்டத்துக்கும் முழுப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் அறிவு நாணயம் அவருக்கு இருந்தது. அதனால்தான் நீண்ட காலத் திட்டங்களுக்கு அவர் அதிக கவனம் செலுத்தினார். வயசு பத்தாத விமர்சகர்களால் ஆட்சி இழந்தபோதும் அவர் அதிகம் கவலைப்படவில்லை.

24/04/2024

இன்று மெயிலில் வந்த ஒரு அன்பரின் கடிதம். நன்றியுடன் பகிர்கிறேன்.


புத்தகத்தின் பெயர்: ஞாலம்
வகைமை: நாவல்/புதினம்
எழுதியவர்: தமிழ்மகன்
வாங்கிய இடம்: மின்னங்காடி பதிப்பக அரங்கு எண் 371 - சென்னை புத்தக கண்காட்சி
வாங்கிய தேதி: 10-ஜனவரி-2024

தமிழ் மரபு மருத்துவர் தணிகாசலம் Siddhar Ka அவர்களின் முகநூல் பக்கத்தில் ஞாலம் புத்தகத்தை பற்றிய ஒரு பதிவைப் பார்த்துவிட்டு அதை வாங்க வேண்டும் என்ற எண்ணத்தோடு புத்தக கண்காட்சிக்கு சென்றேன். ஈ வெ ரா விற்கு முன் வாழ்ந்த சமூக சீர்திருத்தவாதி பற்றிய ஒரு புத்தகம் என்ற ஒன்றைத் தவிர இந்த புத்தகத்தை பற்றிய வேறு எந்த தகவலும் என்னிடம் இல்லை.

மின்னங்காடி பதிப்பக அரங்கிற்குச் சென்று ஞாலம் புத்தகத்தை எடுத்து கொடுக்கல்-வாங்கல் இடத்தில் கட்டணத்தை செலுத்தும் போது, இருக்கையில் இருந்தவர் என்னை நோக்கி "எப்படி தெரிஞ்சுது இந்த புத்தகத்தைப் பற்றி " என்று கேட்டார். மருத்துவரின் முகநூல் பெயர் சித்தர் க என்று இருந்ததால் அவரின் இயற்பெயர் மறந்துவிட்டேன். பின்பு மருத்துவர் தணிகாசலம் அவர்களின் புகைப்படத்தை காண்பித்த போது அவரை அடையாளம் கண்டுகொண்டார். அதற்கு பின் தான் எனக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. அவர் சொன்னது "நாந்தான் எழுதுனது". எழுதிய புத்தகத்தின் எழுத்தாளரை நமக்கு தெரியாமல் போய்விட்டதே என்ற குற்றவுணர்ச்சியுடன் சிரித்து சில வினாடிகள் உரையாடினோம். அன்போடு அவரது கையெழுத்தையும் நான் வாங்கிய பிரதியில் இட்டு தந்தார்.

காலத்தால் கிட்டத்தட்ட கரைந்த வரலாற்றை தோண்டி வெளிக்கொண்டு வருவதே ஒரு பெரும்பணி. எழுத்தாளர் தமிழ்மகன் அந்த பெரும்பணியைச் செய்து அதை சற்று புனைந்து ஒரு நாவலை வடித்திருக்கிறார். கத்தி மேல் நடப்பது போன்ற செயல் இது. காரணம் பொதுவாகவே நாவலுக்கு கட்டுரை வடிவம் வரும் இயல்பு உண்டு. அதுவும் முழுமையாக தொகுக்கப் படாத ஒரு நபரின் வரலாற்றில் கையளவு கதாபாத்திரங்கள் கொண்டு சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட சில வரலாற்று நிகழ்வுகளை ஒட்டி தொய்வில்லாமல் அக மற்றும் புறவெளிகளின் விவரங்களையும் மிகுந்த கவனத்தில் கொண்டு அத்திப்பாக்கம் வெங்கடாச்சல நாயகரின் கதை நம்முன் விரிகிறது.

19ஆம் நூற்றாண்டு மனிதர்களின் வாழ்க்கை முறை, வாழ்வாதாரம், ராமலிங்க அடிகளாரின் இளம் பருவத்தில் நடந்த நிகழ்வுகள், பட்டா வழங்குதலில் வெள்ளையர்கள், மராட்டியர்கள் மற்றும் நவாபுகள் ஆட்சியில் நடந்த முறைகேடுகள், சடங்குகளில் இருந்த செலவு என்று நம்மை புனைவுக் கொக்கியில் சிக்க வைக்க பல அம்சங்கள் இருக்கிறது. ஆனால் புத்தகத்தை மூடிவைத்தப் பின் என் மனத்திரையில் ஓடுவது

அபகரிக்கப்பட்ட நிலங்களை அதன் உரியவருக்கான பெயரில் பட்டா செய்ய வெங்கடாச்சல நாயக்கர் பட்டப் பாடு,
திருவிடைச்சுரத்தில் இருக்கும் கோட்டையை கைப்பற்ற வந்த கிருஷ்ண தேவராயரின் படைககளை விரட்டி அடித்த காந்தவராயன் மற்றும் சேந்தவராயன் சகோதரர்கள்.
கஞ்சித்தொட்டியை நோக்கி செங்கல்பட்டில் இருந்து தொடர்வண்டியில் வந்த மக்கள்.

நீங்கள் எதையாவது விரும்பினால், அதை அடைய உங்களுக்கு உதவுவதில் இந்த ஒட்டு மொத்த பிரபஞ்சமே ஒன்று கூடி திட்டமிடும் என்று பவுலோ கோயிலோ வின் கூற்றுக்கு இணங்க எனது அம்மாவின் பிறப்பிடமான செங்கல்பட்டு குறித்த தரவுகளை உள்ளடக்கிய இரண்டாம் புத்தகம் என் வாசிப்பிற்கு இந்த வருடம் பிரபஞ்சம் அருளியதாகவே கருதுகிறேன்.

வெறும் விவரணைகளில் மட்டும் இல்லாமல் மொழி நடையிலும் நம்மை 19ஆம் நூற்றாண்டிற்கு கடத்துவது இந்த புதினத்தின் மற்றும் ஓர் சிறப்பு. இந்த சொல்வனத்தில் நான் அறுவடை சில சொற்கள்

லோடா -> பானம் பருகும் சிறிய அளவிலான குடுவை. எனது தாத்தா மற்றும் பாட்டி இந்த சொல்லை பயன்படுத்துவர்.
பாரியா -> மனைவி (இன்றளவிலும் மலையாளம் தெலுங்கு மொழி வழக்கில் உள்ள சொல் )
உலுப்பை -> காணிக்கை
கெளிப்பு -> வெற்றி (இன்றைக்கும் தெலுங்கு மொழியில் வழக்கில் உள்ளது )
குளம்பு -> விலங்கினங்களின் கால்களின் அடிப்பகுதியை பாதுகாக்கும் கனமான நகம்

இந்த படைப்பை வாசித்தால் - அரசு பதவியில் ஏக போக மாக இருக்கும் சில கணக்கு பிள்ளைமார்கள், பிராமணர்கள் மற்றும் வெள்ளாளர்களின் முறைகோடுகளால் பலரும் தங்களுக்கு உரிய நிலங்களை இழந்து பட்டினியாய் தவிக்கும் சந்ததியினருக்கு கோரும் ஒதுக்கீட்டை குறித்து இனி ஏளனம் கொள்ளவேண்டாம் என்ற அறைகூவலை இனி அசட்டைசெய்ய மனம் வராது. காரணம் நலிந்த மக்களின் பொருளாதார நலனை கருத்தில் கொண்டதல்ல இடஒதுக்கீடு. இழைக்கப்பட்ட அநீதியை சரிசெய்வதற்கும் விகிதாச்சார அடிப்படையில் அதிகாரத்தை பிரித்தளிப்பதும் தான் இதன் நோக்கம்.

அத்திப்பாக்கம் வெங்கடாச்சல நாயகருக்கும் அவரின் செயல்பாடுகளுக்கு எழுத்து வடிவம் தந்து அந்த வாழ்விற்கு ஒரு உரைகல்லாக இந்த புத்தகத்தை படைத்த தமிழ்மகனுக்கும் மனமார்ந்த நன்றிகள்

- அன்புகுமரன் எத்தியரசன்

பெரும் வரவேற்பை பெற்ற படைவீடு நாவலை வேண்டும் என்றே வாங்காமல் இருந்தேன். அடுத்த முறை மின்னங்காடி அரங்கிற்கு செல்வதற்கு ஒரு காரணம் வேண்டாமா?

Photos from Minnangadi's post 01/04/2024

ஞாலம் நாவலுக்கு அன்புக்குரிய முனைவர் அ. மோகனா அவர்கள் கணையாழியில் எழுதியிருக்கும் மிக நீளமான விமர்சனத்தின் முதல் பக்கம் இது. வாக்கியங்களுக்கு இடையில் இருக்கும் அரசியலை நுணுக்கமாக ஆராய்ந்து எழுதியிருக்கிறார். முனைவர் வீ. அரசு அவர்களின் மாணவர்களில் தர வரிசையில் முன்னணியில் இருக்கும் மாணவர்களில் ஒருவர். நண்பர் முனைவர் திருஞான சம்பந்தம் அவர்களின் இணையர். விமர்சனத்தைப் படித்து பெரிதும் மகிழ்ந்தேன். நன்றி தோழி.

23/01/2022

புதிய நாவல்... புதிய பதிப்பு. விலை 200 /-

23/01/2022

சிறுகதைத் தொகுப்பு... புதிய பதிப்பு

Want your business to be the top-listed Government Service in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


Chennai
600050