31/05/2026
🚭 ஒரு சிகரெட்... ஒரு பழக்கம் அல்ல, ஒரு உயிர்கொல்லி!
நீங்கள் புகைப்பது உங்கள் உடலை மட்டுமல்ல, உங்களைச் சுற்றியுள்ள குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என அனைவரின் ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது.
💔 ஆண்டுதோறும் இலட்சக்கணக்கான உயிர்கள் புகையிலையால் பறிக்கப்படுகின்றன.
🌱 புகையை அல்ல... உயிரை சுவாசிப்போம்!
🚭 புகையிலையை விட்டு விடுங்கள்.
❤️ குடும்பத்திற்காக வாழுங்கள்.
சமூக விழிப்புணர்வுடன்
Awareness India Movement (AIM)
28/05/2026
🌍 உலக சுற்றுச்சூழல் தினம் – ஜூன் 5, 2026 🌱
🌿 “மரம் நடுவது ஒரு செயல் அல்ல…
எதிர்கால தலைமுறைக்கான உயிர் முதலீடு!” 🌿
தமிழ்நாடு முழுவதும்
Green Roots – 1 Crore Trees By 2026
என்ற மாபெரும் பசுமை இயக்கத்தின் மூலம்
தொடர்ச்சியாக ஒரு கோடி மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன. 🌱
இயற்கையை பாதுகாக்கவும்…
வெப்பமயமாதலை குறைக்கவும்…
அடுத்த தலைமுறைக்கு தூய்மையான காற்றை வழங்கவும்…
இந்த மக்கள் இயக்கத்தில் நீங்களும் இணையுங்கள்.
🌳 ஒரு மரக்கன்று – ₹150 மட்டும்
உங்கள் விருப்பப்படி
✅ 1
✅ 10
✅ 100
✅ 1000
✅ 10,000
✅ அல்லது லட்சக்கணக்கான மரக்கன்றுகளுக்கும்
தானமாக வழங்கலாம்.
தங்களால் இயன்றால்
ஒரு மரக்கன்றாவது நேரில் நடுங்கள்… 🌱
அது முடியவில்லை என்றால்
ஒரு மரக்கன்றை தானமாக வழங்குங்கள்… 🤝
💚 “பசுமையை மீட்டெடுக்க அனைவரும் ஒன்றிணைவோம்!”
📞 தொடர்புக்கு:
📱 9884929288
📱 9884049288
🌿 ஏற்பாடு:
Awareness India Movement (AIM)
Green Roots – 1 Crore Trees By 2026
✨ “கனவு காணுங்கள்…
அந்த கனவை மரங்களாக மாற்றுங்கள்…”
— A. P. J. Abdul Kalam 🌿
26/05/2026
திருவையாறு மெகா தூய்மை பணியில் காவேரி நதிக்கரைகளை தூய்மை செய்து சுமார் 6 டன் குப்பைகள் அகற்றப்பட்டன.
26/05/2026
தஞ்சை மாவட்டம் திருவையாறு மெகா தூய்மை பணியின் கலந்து கொண்ட அனைத்து நண்பர்களுடைய பெரும் முயற்சியில் தினகரன் நாளிதழ் மற்றும் சில நாளிதழ்களில் செய்தி வந்துள்ளது மகிழ்ச்சியை இதன் மூலம் சுற்றுப்புற மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது என்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
காவிரி மெகா தூய்மை பணி தஞ்சை மாவட்டத்திற்கு ஒரு உதாரணமாக இந்த நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.
26/05/2026
தஞ்சை மாவட்டம் திருவையாறு காவேரி கடைகளை தூய்மை செய்யும் பணி
Aim அமைப்பு முன்னெடுத்தது இதனுடன் பல்வேறு சமூக அமைப்புகள் இணைந்து சிறப்பாக பணியாற்றி ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது மகிழ்ச்சியாக இருக்கிறது திருவையாறு மெகா தூய்மை பணியில் கலந்து கொண்டு சிறப்பித்த அத்தனை நண்பர்களுக்கும் நன்றி கடந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
02/04/2026
கோடை காலத்தை எதிர்கொள்ள நமது அலுவலகத்திற்கு வெளியில் தினந்தோறும் 200-லிருந்து 300 நபர்கள் பயன்பெறும் வகையில் நீர்மோர் தரமாக ஆரோக்கியமாக வழங்கப்பட்டு வருகிறது இந்த கோடைகாலங்கள் முழுவதும் இந்த நிகழ்வு நடைபெறும் சரியாக காலை 11 மணிக்கு மேல் நமது அலுவலகத்தின் வழியாக கடந்து செல்பவர்களுக்கு வழங்கப்படுகிறது.
02/04/2026
மொளச்சூர் கிராம மக்களுக்கு சவிதா மருத்துவக் கல்லூரி சார்பாக *AIM* *அவர்னஸ் இந்தியா மூவ்மெண்ட்* அமைப்பின் மூலம் வழங்கப்பட்ட மரக்கன்றுகள் வழங்கி கிராமத்தை பசுமையாக்கும் திட்டத்தில் செயல்படும் மாணவர்களுக்கும் கிராம பகுதி மக்களுக்கும் நன்றி கடந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்