திருவண்ணாமலை கோணலூர் பா.ம.க

திருவண்ணாமலை கோணலூர் பா.ம.க

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from திருவண்ணாமலை கோணலூர் பா.ம.க, Political organisation, konalur, thiruvannamalai, Chennai.

30/11/2021

புதிய மாவட்டச் செயலாளர்களுக்கு அன்பான வேண்டுகோள்🙏

முதலில் #கிராமங்கள் தோறும் சூறாவளி சுற்றுப் பயணம் மேற் கொள்ளுங்கள்.
💙💛❤️🇷🇴🇷🇴🇷🇴🔥🔥🔥
கட்சியின் #மூத்த_மற்றும்_இளைய கட்சிக்காரர்களை சந்தித்து பேசுங்கள். பொறுப்பாளர்களுக்கு பணியை பிரித்து கொடுங்கள். பொறுப்பான நேர்மையான பொறுப்பாளர்களை தேர்ந்தெடுங்கள்.

ஒவ்வொரு கிராமத்திலும் #கட்சி_கொடியை தவறாமல் ஏற்றுங்கள். கிளை நிர்வாகிகளை தேர்ந்தெடுங்கள். அவர்களை திண்ணை பிரச்சாரம் செய்ய சொல்லுங்கள்.

அனைத்து மாவட்ட செயலாளர்களும் நேரடியாக களத்தில் இறங்க உண்மை பாட்டாளின் அன்பான வேண்டுகோள்.

அய்யாவின் கனவை நிறைவேற்றுவோம்

பதிவு
பா ம க தொண்டன்

30/06/2021

பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள 2021-22 ஆம் நிதியாண்டிற்கான வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை (Shadow Agriculture Budget) சென்னையில் இன்று (27.06.2021) ஞாயிற்றுக் கிழமை காலை 11.00 மணிக்கு வெளியிடப் பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள், பா.ம.க. இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள், பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி மற்றும் மூத்த நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.

இடம் :
260, கீழ்த்தளம், மவுண்ட் கசா பிளண்ட்சா
அண்ணா சாலை, ஆயிரம் விளக்கு
சென்னை

| | | |

24/03/2021

வாக்களிப்பீர் ADMK+PMK

22/10/2019

#திருவண்ணாமலை தெற்கு #பாட்டாளி_ மக்கள்_கட்சி, மாவட்டத்தின் சார்பாக கட்சி அலுவலகம் தொடக்கம் அனைத்து பாட்டாளி சொந்தங்களுக்கு வருக வருக....

Photos from திருவண்ணாமலை கோணலூர் பா.ம.க's post 27/07/2019

புதிர் மண்டிக்கிடக்கும் மறைக்கப்பட்ட இந்திய தேசியக் கவி- ராஜரிஷி அர்த்தநாரீச வர்மா ஜெயந்தி விழா நாளை (27.07.2019) வெகுசிறப்பாக திருவண்ணாமலை மண்ணில் நடைபெற்றது...

Photos from திருவண்ணாமலை கோணலூர் பா.ம.க's post 25/07/2019

முக்கிய தலைவர்களின் வாழ்த்து செய்தி...

| | #முத்துவிழா80

25/07/2019

சமூகநீதி | இட ஒதுக்கீடு | போராளி
1987ல் நடந்த மாபெ௫ம் இட ஒதுக்கீடு போராட்டமே இன்றைய வரலாற்றில் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கல்வி,வேலைவாய்ப்புக்கு உறுதுணையாக இ௫ந்து வ௫கிறது.
உங்களால் உணர்வும் | உயர்வும் பெற்றோம் வணங்கி மகிழ்கிறேன்...🙏

| | 🔥

24/07/2019

"தமிழகத்தில் தனியார் வேலைவாய்ப்புகளில் 80% தமிழர்களுக்கே வழங்க சட்டம் தேவை!" - மருத்துவர் இராமதாசு அய்யா அறிக்கை

-------------------
ஆந்திராவில் உள்ள தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் உள்ள வேலைவாய்ப்புகளில் 75% ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கே வழங்கப்பட வேண்டும் என்று அம்மாநில அரசு புதிய சட்டம் இயற்றியுள்ளது. இது தமிழ்நாட்டிலிருந்து ஆந்திராவுக்கு வேலை தேடிச் செல்பவர்களை பாதிக்கும் என்றாலும் கூட, உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்யும் என்ற வகையில் வரவேற்கத்தக்கது.

ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள தனியார்துறை வேலைவாய்ப்புகளில் குறைந்தது 75-80% உள்ளூர் மக்களுக்கே வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் எழுப்பப்பட்டு வருகிறது. பா.ம.க. இந்த கோரிக்கையை நீண்ட நாட்களாக வலியுறுத்தி வருகிறது. சென்னை மறைமலை நகரில் ஃபோர்டு மகிழுந்து ஆலை தொடங்கப்பட்ட போது, அதன் வேலைவாய்ப்புகள் அனைத்தும் உள்ளூர் மக்களுக்கே வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி 10 ஆயிரம் பேரைத் திரட்டி போராட்டம் நடத்தினேன். இத்தகைய சூழலில் தான் ஆந்திரத்தில் தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் உள்ள வேலைவாய்ப்புகளில் 75 விழுக்காட்டை ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் தான் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தும் சட்டம் ஆந்திர சட்டப்பேரவையில் நேற்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

தனியார் நிறுவன வேலைவாய்ப்புகளில் குறிப்பிட்ட விழுக்காடு உள்ளூர் மக்களுக்கே வழங்கப்படும் என்று கர்நாடகம், குஜராத், மராட்டியம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் முதலமைச்சர்களும் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர். ஆனால், அவை ஆண்டுக்கணக்கிலும், மாதக் கணக்கிலும் வெற்று அறிவிப்புகளாகவே உள்ள நிலையில், ஆந்திரத்தில் இதுதொடர்பாக சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் தனியார் நிறுவன வேலைவாய்ப்புகளில் உள்ளூர் மக்களுக்கு அதிகாரப்பூர்வமாக 75% இட ஒதுக்கீடு வழங்கிய முதல் மாநிலம் என்ற பெருமையை ஆந்திரா பெறுகிறது.

இந்த சட்டம் முழுமையாக செயல்படுத்தப்படுவதையும் ஆந்திர அரசு உறுதி செய்திருக்கிறது. வழக்கமாக இதுபோன்று சட்டங்கள் கொண்டு வரப்பட்டால், திறமையானவர்கள் இல்லை என்று கூறி, அந்த பணியை நிர்வாகத்துக்கு நெருக்கமான வெளிமாநிலத்தவருக்கு வழங்குவது தான் வாடிக்கையாக இருந்து வருகிறது. ஆனால், இத்தகைய ஏமாற்று வேலைக்கு ஆந்திர அரசின் சட்டம் திட்டவட்டமாக முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

ஒரு பணிக்காக விண்ணப்பிக்கும் உள்மாநிலத்தவர் ஒருவருக்கு கல்வித்தகுதி இருந்து, திறமை/பயிற்சி இல்லையென்றால் அதைக் காரணம் காட்டி, அவருக்கு வேலைவாய்ப்பை நிராகரித்து விடக்கூடாது; மாறாக, அத்தகையோரை பணிக்கு தேர்ந்தெடுத்து, மாநில அரசுடன் இணைந்து பயிற்சியளித்து பின்னர் பணியமர்த்தப்பட வேண்டும் என்று ஆந்திர சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டை ஒட்டி ஆந்திரத்தில் அமைந்துள்ள ஸ்ரீசிட்டி சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் தமிழகத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பணியாற்றி வருகின்றனர். ஆந்திர அரசின் புதிய சட்டம் நடைமுறைக்கு வரும் போது, வெளிமாநிலத்தவருக்கான 25% ஒதுக்கீட்டை விட கூடுதலாக பணியாற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் பணி நீக்கப்பட வாய்ப்புள்ளது. எனினும், ஆந்திர மாநில மக்களின் வேலைவாய்ப்புகளை உறுதி செய்ய வேண்டியது அம்மாநில அரசின் கடமை என்ற கோணத்தில் இது சரியான நடவடிக்கையாகும்.

புதிய பொருளாதாரக் கொள்கைகள் அறிமுகம் செய்யப்பட்ட பிறகு, மத்திய, மாநில அரசு பணிகள் கடந்த 25 ஆண்டுகளில் மூன்றில் ஒரு பங்கு குறைந்து விட்டது. அடுத்து வரும் ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை மேலும் குறையக்கூடும். அவ்வாறு இருக்கும் போது தனியார் நிறுவனங்களில் உள்ள அமைப்பு சார்ந்த பணிகளின் மூலமாகத் தான் மக்களுக்கு கண்ணியமான, கவுரவமான வாழ்க்கையை வழங்க முடியும்.

ஆனால், தனியார் தொழில் நிறுவனங்கள் பல்வேறு காரணங்களால் உள்ளூர்வாசிகளுக்கு வேலை வழங்குவதில்லை. இதனால், அவர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நிலையில், அவர்களுக்கு வாழ்வாதாரம் வழங்க தனியார் நிறுவன வேலைவாய்ப்புகளில் உள்ளூர் மக்களுக்கு குறிப்பிட்ட அளவு இட ஒதுக்கீடு வழங்க வேண்டியது அவசியமாகும். அதை மற்ற மாநில அரசுகள் பேசிக்கொண்டிருந்த நிலையில், ஆந்திரம் செயல்படுத்தியிருக்கிறது. அந்த வகையில் ஆந்திர அரசின் செயல் பாராட்டத்தக்கது.

ஆந்திரத்தைப் பின்பற்றி தமிழ்நாடும் தனியார் நிறுவன வேலைவாய்ப்புகளில் தமிழர்களுக்கு 80 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க வேண்டியது அவசியமாகும். அதற்கு பல காரணங்கள் உள்ளன. தமிழகத்திலுள்ள மத்திய அரசுப் பணிகள், மத்திய பொதுத்துறை நிறுவனப் பணிகள் ஆகியவற்றில் பெரும்பாலானவை வட இந்தியர்களால் பறிக்கப்பட்டு விட்டன. சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட நகரங்களிலும், அவற்றையொட்டிய பகுதிகளிலும் அமைந்துள்ள பெரு நிறுவனங்களின் வேலைவாய்ப்புகளையும் பிற மாநிலத்தவர்கள் தமிழர்களிடமிருந்து தட்டிப்பறித்து விட்டனர்.

இப்போது ஆந்திராவில் ஆந்திரர்களுக்கே வேலை என்ற சட்டம் கொண்டு வரப்பட்டதால் அங்குள்ள தமிழர்களும் வேலை இழக்கக்கூடும். இதனால் ஏற்படும் பாதிப்புகளை சரி செய்யவும், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்புகளை உறுதி செய்யவும் தமிழகத்திலுள்ள தனியார் நிறுவனங்களில் 80% வேலைவாய்ப்பு தமிழகத்தைச் சேர்ந்தோருக்கே வழங்கப்பட வேண்டும் என சட்டம் இயற்றப்பட வேண்டும். இதை தமிழக அரசு உடனே செய்ய வேண்டும்.

அதுமட்டுமின்றி, தமிழகத்திலுள்ள அனைத்து மத்திய பொதுத்துறை நிறுவனங்களிலும் அதிகாரிகள் நிலை தவிர்த்து மீதமுள்ள பணியாளர் பணியிடங்கள் அனைத்தும் தமிழகத்தைச் சேர்ந்தவர்களைக் கொண்டு நிரப்பவும், தமிழகத்திலுள்ள மத்திய அரசு அலுவலகங்களில் கடைநிலைப் பணிகள் அனைத்தையும் உள்ளூர் மக்களுக்கு ஒதுக்கவும் மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றவும் தமிழக அரசு முன்வர வேண்டும்.

l l l

20/07/2019

#பாமகநிறுவனர் #மருத்துவர்இராமதாசு அறிக்கை
#விடுதலைவீரர்
#அர்த்தநாரீச #வர்மாவுக்கு
#நினைவுமண்டபம் அமைக்க வேண்டும்!
-------அறிக்கை----------
விடுதலைப் போராட்ட வீரரும், தமிழ்நாடு உழைப்பாளர் கட்சியின் நிறுவனருமான எஸ்.எஸ். இராமசாமி படையாட்சியாரின் உருவப்படம் தமிழக சட்டப்பேரவை மண்டபத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சட்டப் பேரவைத் தலைவர் தனபால் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் முக்கியத் தலைவர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் இந்த விழாவில் பங்கேற்று சிறப்பித்துள்ளனர்.

பெருந்தலைவர் காமராசர் அமைச்சரவையில் உள்ளாட்சித் துறை அமைச்சராக பணியாற்றியதுடன், வன்னிய மக்களுக்கு இட ஒதுக்கீடு கோரி குரல் கொடுத்தவரான இராமசாமி படையாட்சியாருக்கு சட்டப்பேரவையில் உருவப்படம் திறந்திருப்பது மிகவும் பொருத்தமான அங்கீகாரம் ஆகும். அதற்கு முன்பாக அவரது பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும்; கடலூரில் நினைவு மண்டபம் அமைக்கப்படும் என்று அறிவித்து அவற்றை செயல்படுத்தி வரும் தமிழக அரசு, இப்போது இராமசாமி படையாட்சியாரின் உருவப்படத்தையும் திறந்திருப்பது வரவேற்கத்தக்கதாகும். இதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இராமசாமி படையாட்சியார், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், பெரும்பிடுகு முத்தரையர், சி.பா. ஆதித்தனார், கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை, இரட்டைமலை சீனிவாசன், ஏ.டி.பன்னீர்செல்வம், ஒண்டிவீரன், வீரன் சுந்தரலிங்கம், வீரன் அழகுமுத்துக்கோன், காலிங்கராயன், ம.பொ.சிவஞானம் உள்ளிட்ட தலைவர்களுக்கு இந்த ஆட்சியில் சிறப்பு செய்யப்பட்டிருக்கிறது. இது மிகவும் பாராட்டத்தக்கதாகும்.

தமிழக அரசால் சிறப்பிக்கப்பட்ட இந்த வரிசையில் விடுதலைப்போராட்ட வீரரும், #இராஜரிஷி என்று போற்றப்பட்டவருமான அர்த்தநாரீச வர்மாவுக்கு இடமளிக்கப்படாதது தான் மிகுந்த வருத்தமளிக்கிறது. சேலம் மாநகர எல்லைக்குட்பட்ட சுகவனபுரியில் 1874-ஆம் ஆண்டு ஜூலை 27-ஆம் தேதி பிறந்த அர்த்தநாரீச வர்மா அவர்கள், தனது வாழ்நாள் முழுவதும் கதராடை அணிவதையே கொள்கையாகக் கொண்டிருந்தார். தேச விடுதலை, தமிழ்நாட்டின் எல்லைக்காப்பு, மதுஒழிப்பு, கல்வி, சமூக முன்னேற்றம் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி ஏராளமான கவிதைகளை அவர் எழுதியுள்ளார். மகாகவி பாரதியாரின் சமகாலத்தவரான அர்த்தநாரீச வர்மாவின் கவிதைகள் பாரதியாரின் கவிதைகளுக்கு இணையான வீரியம் கொண்டவை. பல பத்திரிகைகளை தொடர்ந்து நடத்தி விடுதலை உணர்வை ஊட்டிய வர்மா ஏராளமான நூல்களையும் வெளியிட்டுள்ளார். அவரது கவிதைகள் விடுதலைப் போருக்கு உரமூட்டின.

வெள்ளையரின் அடக்குமுறை உச்சத்தில் இருந்த காலத்தில் கூட, அவற்றைக் கண்டு அஞ்சாதவராக விளங்கியவர் அர்த்தநாரீச வர்மா ஆவார். #மகாகவி பாரதியார் இறந்தபோது, ஆங்கிலேயருக்கு அஞ்சி அவரது இறுதி ஊர்வலத்துக்கு கூட யாரும் வராத போது, பாரதியாருக்காக துணிச்சலாக இரங்கல் பாடிய ஒரே கவிஞர் அர்த்தநாரீச வர்மா மட்டுமே. அவரது இரங்கற்பா சுதேசமித்திரனில் வெளியானது. இந்திய விடுதலைக்காக #வீரபாரதி எனும் பத்திரிகையை நடத்தினார். ஆனால், ஆங்கிலேயர்களுக்கு எதிராக பத்திரிகை நடத்துவதை தடுக்கக் கொண்டுவரப்பட்ட அச்சக சட்டத்தால் அர்த்தநாரீச வர்மா பாதிக்கப்பட்டார். வாரத்தில் 3 நாட்கள் வெளிவந்த இப்பத்திரிகை, அரச அடக்குமுறையால் நிறுத்தப்பட்டது.

தமிழ்நாட்டில் மதுவிலக்குக்கு வித்திட்டதில் அர்த்தநாரீச வர்மாவின் பங்கு மகத்தானது. மதுவிலக்கை வலியுறுத்தி நாடு முழுவதும் சென்று பரப்புரை மேற்கொண்டார். நாட்டுக்காகவே வாழ்ந்த, உழைத்த அர்த்தநாரீச வர்மாவுக்கு இந்த நாடும், சமூகமும் பரிசாக வழங்கியது வறுமையைத் தான். #சேலத்தில் பிறந்து தமது வாழ்வின் இறுதிக்காலத்தை #திருவண்ணாமலையில் கழித்த அர்த்தநாரீச வர்மா தமது 90-ஆவது வயதில் 07.12.1964 அன்று காலமானார். அவரது சேவை இன்றுவரை அங்கீகரிக்கப்படவில்லை.

கவிச்சிங்கம் அர்த்தநாரீச வர்மாவின் பணிகளுக்கும், சேவைகளுக்கும் உரிய அங்கீகாரம் வழங்காமல் இனியும் புறக்கணிக்கக் கூடாது. தமிழகத்திற்கு புகழ் சேர்த்த தலைவர்களை பெருமைப்படுத்தி வரும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு, ராஜரிஷி அர்த்தநாரீச வர்மா அவர்களின் பிறந்தநாளினை அரசு விழாவாக கொண்டாடுவதுடன் #திருவண்ணாமலையில் #அர்த்தநாரீச #வர்மாவுக்கு #மணிமண்டபமும், #சேலத்தில் #திருவுருவச்சிலையும் அமைக்க வேண்டும். அர்த்தநாரீச வர்மா அவர்களின் வரலாறு மற்றும் பாடல்களை பாடநூல்களில் சேர்ப்பது; தமிழ் மொழியில் சிறந்த கவிஞர்களுக்கு அர்த்தநாரீச வர்மா பெயரில் விருது வழங்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். மத்திய அரசும் அதன் பங்குக்கு விடுதலைப் போராட்ட வீரரை கவுரவிக்கும் வகையில் சேலம் விமான நிலையத்துக்கு அர்த்தநாரீச வர்மா பெயரை சூட்டி, அவரது அஞ்சல் தலையை வெளியிட வேண்டும்....

19/07/2019

சட்டமன்றம் பாராளுமன்றம் எங்கும்,
என் கால்கள் செல்லாது...

------ டாக்டர் அய்யா💪🔥
|

16/07/2019

"பா.ம.க 31-ஆவது ஆண்டு விழா: புதிய வெற்றிப் பயணத்தின் தொடக்கமாகட்டும்!" - மருத்துவர் இராமதாசு அய்யா மடல்

--------------------
பாட்டாளி சொந்தங்களே...

பாட்டாளி மக்கள் கட்சி ஜூலை 16-ஆம் தேதி 30 ஆண்டுகளை நிறைவு செய்து 31-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. ஆண்டுகள் 30 தான் என்றாலும் பாட்டாளி மக்கள் கட்சி படைத்துள்ள சாதனை அத்தியாயங்கள் ஏராளமானவை. உயிரோட்டமுள்ள இயக்கம் என்பதற்கு உதாரணமாக திகழ்வது பாட்டாளி மக்கள் கட்சி தான். அதற்கு பின்னணியும், முன்னணியுமாய் திகழ்பவர்கள் நீங்கள் தான்.

ஓர் அரசியல் கட்சி உயிரோட்டமானதாக திகழ தொண்டர்களின் உணர்வுகளை தலைமை புரிந்து வைத்துக் கொண்டு, அதற்கு மதிப்பளித்து செயல்படுவதும், தலைமையின் எதிர்பார்ப்புகளை தொண்டர்கள் புரிந்து கொண்டு, அதற்கேற்ற வகையில் துடிப்பாக செயல்படுவதும் அவசியம் ஆகும். அத்தகைய உணர்வுகள் நமது கட்சியில் நிறைந்து காணப்படுவதால் தான் பாட்டாளி மக்கள் கட்சி தமிழ்நாட்டு அரசியலில் அர்த்தமுள்ள அரசியல் கட்சியாகத் திகழ்கிறது. அது தான் நமது வலிமையும் சிறப்பும் ஆகும்.

பாட்டாளி மக்கள் கட்சி கடந்த ஆண்டு இதே ஜூலை 16-ஆம் தேதி 30-ஆம் ஆண்டு விழாவை மிகவும் உற்சாகமாகக் கொண்டாடி பயணத்தைத் தொடங்கியது. மக்களவைத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் கூட்டணி அமைத்தோம்; கடுமையாக உழைத்தோம். ஆனால், முடிவுகள் நமது எதிர்பார்ப்புகளுக்கு முற்றிலும் எதிராக அமைந்தன. அந்த சோகத்திலும் பெரும் ஆறுதல் தமிழகம் தவறானவர்களின் கைகளுக்கு செல்லாமல் தடுத்தது பா.ம.க. என்பது தான்.

மக்களவைத் தேர்தல் மாயத் தேர்தலாகவே நடந்து முடிந்தது. நமது எதிரிகள் கொள்கைகளை பேச வில்லை. மக்கள் வளர்ச்சிக்கான செயல்திட்டங்களை பேசவில்லை. மாறாக குழந்தைகளை கவர்ந்து செல்ல நினைக்கும் கடத்தல்காரர்கள், குழந்தைகளுக்கு பிடித்த மிட்டாய்களையும், பொம்மைகளையும் காட்டி மயக்கியதைப் போன்று ‘‘ உங்கள் வீட்டில் உள்ள நகைகளையெல்லாம் வங்கிகளுக்கு கொண்டு சென்று வேண்டும் அளவுக்கு அடகு வைத்து பணம் வாங்கிக் கொள்ளுங்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் நகைக்கடன்களை தள்ளுபடி செய்து விடுகிறோம்’’ என்று வாக்காளர்களுக்கு ஆசை காட்டினார்கள். மக்களும் அதை நம்பி ஏமாந்தார்கள். சாத்தியமற்ற தேர்தல் வாக்குறுதிகளை அளிக்கக் கூடாது என்ற விதிகளை மீறி வழங்கப்பட்ட இந்த தேர்தல் வாக்குறுதியை தேர்தல் ஆணையமும் கண்டு கொள்ளவில்லை; கண்டிக்கவும் இல்லை. நாமும் அது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லை.

அதன் விளைவு தான்.... நமது அணி முன்வைத்த உண்மைகள் தோற்றன. அவர்கள் முன்வைத்த பொய்கள் வென்றன. தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு தான் தாங்கள் ஏமாற்றப்பட்டிருப்பதை தமிழ்நாட்டு மக்கள் முழுமையாக உணர்ந்துள்ளனர். தங்களின் தவறுகளை திருத்திக் கொள்ளவும், அவற்றுக்கான பரிகாரங்களைத் தேடவும் ஆயத்தமாகின்றனர். இது அடுத்து வரும் தேர்தலில் தெரியும்.

மற்றொருபுறம் தோல்விகளை கண்டு துவண்டு விடாமல் அடுத்து மேற்கொள்ள வேண்டிய பணிகளை செய்ய பாட்டாளிகளாக நீங்களும் தயாராகி விட்டீர்கள். பள்ளத்திலிருந்து மேட்டை நோக்கி ஏறும் ஆடு அந்த முயற்சியில் வெற்றி பெற முடியாமல் சரிந்து தரைக்கு வந்து விடும். ஆனால், அதற்காக அதன் முயற்சியில் பின்வாங்கி விடாது. முன்பு முயன்றதை விட அதிக வேகத்தில் ஓடிச் சென்று மேட்டின் மீது ஏறி விடும். அதைப் போலத் தான் நீங்களும் தோல்வி குறித்த சிந்தனைகளில் இருந்து விடுபட்டு, அடுத்த வெற்றிக்காக அயராது உழைக்க தயாராகி விட்டீர்கள். இந்த எழுச்சி பாராட்டத்தக்கதாகும்.

சென்னைக் கடற்கரை சீரணி அரங்கில் பத்து லட்சத்திற்கும் மேற்பட்டத் தொண்டர்கள் கூடியிருந்த வரலாற்று நிகழ்வில் தொடங்கப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சி, அன்று முதல் இன்று வரை ஏற்றுக்கொண்ட நிலைப்பாட்டுக்கு எதிராக எதையும் செய்ததில்லை. ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி மக்களுக்கு சேவை செய்வது தான் அரசியல் கட்சிகளின் நோக்கம் என்றாலும், ஓர் கட்சி எத்தனை முறை ஆட்சி செய்தது என்பதை விட, மக்கள் நலனுக்காக எத்தனைத் திட்டங்களைச் செயல்படுத்தக் காரணமாக விளங்கியது என்பது தான் மிகவும் முக்கியம் ஆகும். அந்த வகையில் பார்த்தால் கடந்த 30 ஆண்டுகளில் மக்கள் பிரச்சினைக்காக பாட்டாளி மக்கள் கட்சி எத்தனையோ போராட்டங்களை நடத்தி வெற்றி பெற்றிருக்கிறது.

குறிப்பாக தமிழகத்தின் அனைத்து சீரழிவுகளுக்கும் காரணமான மதுவுக்கு எதிராக போராடி வரும் பாட்டாளி மக்கள் கட்சி, கடந்த சில ஆண்டுகளில் மட்டும் அரசியல் அழுத்தம் காரணமாகவும், சட்டப்போராட்டம் மூலமாகவும் தமிழகத்தில் 4000-க்கும் கூடுதலான மதுக்கடைகளை மூட வைத்தது. படிப்படியாக மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று தமிழகத்தை ஆளும் அதிமுக அரசு அறிவித்திருப்பதற்கு பாட்டாளி மக்கள் கட்சி தான் முதன்மை காரணமாகும்.

சமூக நீதி, கல்வி, வேலைவாய்ப்பு, மக்களுக்கான வாழ்வாதாரத் திட்டங்கள் ஆகியவற்றுக்காக போராடுவதில் சமரசம் செய்து கொள்ளாத கட்சியாக பா.ம.க. திகழ்கிறது. கல்வி - வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 20% இட ஒதுக்கீடு, மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு, மருத்துவம் - பொறியியல் படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு ரத்து, சமச்சீர்க் கல்வித் திட்டம், நதிநீர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கானப் போராட்டங்கள் என அதிகாரத்தில் இல்லாமலேயே பா.ம.க. படைத்த சாதனைகளின் பட்டியல் நீளமானது.

மருத்துவர் அன்புமணி இராமதாஸ் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்து அறிமுகப்படுத்திய தேசிய ஊரக சுகாதார இயக்கம், 108 அவசர ஊர்திச் சேவை, பொது இடங்களில் புகைப்பிடிக்கத் தடை, குட்கா உள்ளிட்ட போதைப்பாக்குகளுக்குத் தடை, தமிழகத்திற்கு கொண்டு வந்த சுமார் ரூ.22,000 கோடி மதிப்புள்ள மருத்துவத் திட்டங்கள் உள்ளிட்ட சாதனைகளை சொல்லி மாளாது. பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் தொடர்வண்டித்துறை அமைச்சர்களாக இருந்த போது தான் தமிழகத்தில் அதிக எண்ணிக்கையிலான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. இப்படியாக பா.ம.க.வின் மணிமகுடத்தை ஏராளமான சாதனை வைரங்கள் அலங்கரிக்கின்றன. இப்போதும் மக்களை பாதிக்கும் திட்டங்களுக்கு எதிராக போராடுவதில் பா.ம.க. தான் உண்மையான எதிர்க்கட்சியாக திகழ்கிறது.

மக்களவைத் தேர்தலில் மகுடம் சூட முடியாத நிலையில், அடுத்து வரும் உள்ளாட்சித் தேர்தல்களிலும், அதற்கடுத்து வரும் சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் நமது அணி பிரம்மாண்டமான வெற்றிகளை குவிப்பது தான் நமது இலக்காக இருக்க வேண்டும். அந்த இலக்கை நோக்கி நாம் வேகமாகவும், விவேகமாகவும் பயணிப்பதன் தொடக்கமாக அமையும் வகையில், பாட்டாளி மக்கள் கட்சியின் 31-ஆவது ஆண்டு விழாவை தமிழகம் மற்றும் புதுவையில் இதுவரையில்லாத வகையில் சிறப்பாகக் கொண்டாட வேண்டும்.

கட்சியின் ஆண்டு விழாவையொட்டி அனைத்து கிராமங்களிலும், நகரம் மற்றும் பேரூர்களில் அனைத்து வட்டங்களிலும் கட்சிக் கொடியேற்றி, மக்களுக்கு இனிப்பு வழங்க வேண்டும். அத்துடன், வாய்ப்புள்ள இடங்களில் பொதுக்கூட்டம் நடத்தி, பாட்டாளி மக்கள் கட்சியின் சாதனைகளை மக்களுக்கு விளக்க வேண்டும். மொத்தத்தில் நமது வெற்றி இலக்கை எட்டுவதற்காக கடுமையாக உழைக்க நமது பாட்டாளி சொந்தங்கள் அனைவரும் கட்சித் தொடக்க நாளில் உறுதியேற்றுக் கொள்ள வேண்டும்.

- - #மருத்துவர்இராமதாசுஅய்யா

வாழ்க ம௫த்துவர்.அய்யா!! வளர்க பா.ம.க!!!
|

11/07/2019

#இந்து_நாளிதழில் மரு.ராமதாசு பற்றியக் கட்டுரை

இந்து தமிழ் திசை நாளிதழில் ’’தலைவர் 11” என்ற தலைப்பில் அரசியல் தலைவர்கள் குறித்த 11 அம்சங்களை விளக்கும் கட்டுரை வெளியாகி வருகிறது. அந்த வரிசையில் இந்த வாரம் மரு.ராமதாசு பற்றிய 11 அம்சங்களை இந்து தமிழ் திசை நாளிதழ் வெளியிட்டுள்ளது.இந்து தமிழ் திசை நாளிதழுக்கும், விவரங்களை தொகுத்தளித்த பத்திரிகையாளர் கே.கே. மகேசுக்கும் நன்றி!

தலைவர் 11: ச.ராமதாஸ்

ஜூலை 25 அன்று 80-வது வயதில் அடியெடுத்துவைக்கும் பாமக நிறுவனர் ராமதாஸ் விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம், கீழ்சிவிறி கிராமத்தில் சஞ்சீவிராய கவுண்டர் - நவநீதம்மாள் தம்பதிக்கு நான்காவது மகனாகப் பிறந்தவர். உள்ளூர் ஆதிதிராவிடர் காலனியில் இருந்த காந்திஜி ஆதாரப் பள்ளியில்தான் ராமதாஸின் கல்விப் பயணம் தொடங்கியது. தலித் சமூகத்தைச் சேர்ந்த பாலசுந்தரம் நடத்திய பள்ளி அது. அந்தக் காலகட்டத்தில் அந்தப் பள்ளியில் படித்த தலித் அல்லாத சமூகத்தைச் சேர்ந்த ஒரே மாணவர் ராமதாஸ்.

பள்ளிக்கல்வி முடித்து, உரிய வழிகாட்டு தல் இல்லாததால், புலவர் படிப்பில் சேர முயன்றார் ராமதாஸ். “நல்ல மதிப்பெண் எடுத்திருக்கிறாய். மருத்துவப் படிப்பில் சேர்ந்தாலென்ன?” என்று வழிகாட்டியவர் மூத்த மாணவர் சொக்கலிங்கம். ஆனால், மாணவர் சேர்க்கைக்கான தேர்வுக் குழுவில் இடம்பெற்றிருந்த நீதிபதி ஒருவர் ஐந்தாயிரம் லஞ்சம் கேட்க, விரக்தியடைந்தார் ராமதாஸ். நமக்கெங்கே சீட் கிடைக்கப்போகிறது என்று கலக்கத்தில் இருந்தவருக்கு இன்ப அதிர்ச்சி. அந்த லஞ்ச நீதிபதியைத் தேர்வுக் குழுவிலிருந்தே நீக்கியிருந்தார் முதல்வர் காமராஜர். ஆக, சிபாரிசு இன்றியே மருத்துவர் இடம் கிடைத்து விட்டது.

ராமதாஸின் திருமணம், ‘லவ் அண்ட் அரேஞ்டு மேரேஜ்’ என்பது இன்றைய தலைமுறை அறியாதது. ராமதாஸின் மருத்துவப் படிப்புக்கு உதவிய உறவுக்காரரான ராமசந்திரனின் சகோதரி சரசுவதியைப் படித்துக்கொண்டிருந்த காலகட்டத்திலேயே திருமணம் செய்துகொண்டார் ராமதாஸ். படிப்பு முடிந்ததும், திண்டிவனத்திலேயே அரசு மருத்துவரானார். ‘கைராசி டாக்டர்’ என்று பெயரெடுத்தார். மூன்றே ஆண்டுகளில் அரசு வேலையை விட்டவர், தனியாக மருத்துவம் பார்க்க ஆரம்பித்துவிட்டார். மாத்திரை, ஊசி எல்லாவற்றுக்கும் சேர்த்து மூன்று ரூபாய் மட்டுமே நீண்ட நாள் வாங்கினார். பத்தாண்டுகளுக்குப் பிறகே அது ஐந்து ரூபாய் ஆனது. காசில்லாமல் பார்த்த நாட்களும், நோயாளிகளுக்கு பஸ் கட்டணம் கொடுத்துவிட்ட நாட்களும்கூட உண்டு.

திண்டிவனம் - புதுச்சேரி சாலையில் 1975-ல் 20 ஏக்கர் நிலத்தை வாங்கி, தோட்டமாக்கினார் ராமதாஸ். 43 ஆண்டுகளாக அந்தத் தைலாபுரம் வீட்டில்தான் குடியிருக்கிறார். ராமதாஸுக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன். மூத்த மகள் ஸ்ரீகாந்தி, அடுத்தது அன்புமணி, கடைசியாக கவிதா. மகள் வயிற்றுப் பேரன் சுகந்தனுக்குத் திருமணமாகி, கொள்ளுத் தாத்தாவும் ஆகிவிட்டார் ராமதாஸ். பிள்ளைகள், பேரக் குழந்தைகள், கொள்ளுப் பேத்தி என்று அத்தனை பேரும் கூடும் வகையில், ஆண்டுதோறும் அவர் நடத்தும் ‘தைக்கூடல்’ உறவினர்கள் தவறவிடாத சந்திப்பு நிகழ்ச்சி.

மருத்துவம் பார்த்த காலத்தில்தான் வன்னியர் சமூக மக்கள் எந்த அளவுக்கு மோசமாக வறுமையில் ஆட்பட்டிருக்கிறார்கள் என்பதை உணர்ந்தார் ராமதாஸ். விளைவாகவே கல்வி - வேலைவாய்ப்பில் தனி ஒதுக்கீடு கேட்டு 20.7.1980-ல் வன்னியர் சங்கத்தை ஆரம்பித்தார். ஏழு ஆண்டு களாகப் போராட்டங்கள் நடத்தியும் அவரைச் சந்திக்கவே முதல்வர் எம்ஜிஆர் மறுத்ததால், தொடர் சாலை மறியல் போராட்டத்தைக் கையில் எடுத்தார் ராமதாஸ். 1987 செப். 17 அன்று அவர் அழைப்பு விடுத்த போராட்டம் வட தமிழகத்தை ஸ்தம்பிக்க வைத்தது. பெரும் கலவரமும் வெடித்தது. காவல் துறை துப்பாக்கிச் சூட்டிலும், தடியடியிலும் 21 பேர் பலியாயினர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந் தனர். ஒட்டுமொத்த இந்தியாவும் ‘யார் இந்த ராமதாஸ்?’ என்று கேட்டது.

ராமதாஸைப் பேச்சுவார்த்தைக்கு அழைத் தது அதிமுக அரசு. ஆனால், ராமதா ஸைச் சந்தித்த ஒரு மாதத்தில் எம்ஜிஆர் காலமாகிவிட ராமதாஸின் கோரிக்கை நட்டாற்றில் தத்தளித்தது. 1989-ல் திமுக ஆட்சியைப் பிடித்ததும், மீண்டும் போராட்டத்தை அறிவித்தார் ராமதாஸ். பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்த கருணாநிதி, காலம் தாழ்த்தாமல் ராமதாஸை அழைத்துப் பேச்சுநடத்தினார். வன்னியர் உட்பட 107 சமூகங்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வரையறைக்குள் கொண்டுவந்து, அதற் கென 20% ஒதுக்கீடு வழங்கினார். வன்னியர் சமூகத்துக்கு மட்டுமே 20% இடஒதுக்கீடு வேண்டும் என்று மீண்டும் போராட்டத்தை அறிவித்தார் ராமதாஸ். நெருக்கடி கொடுக்க ஆரம்பித்தது அரசு. கட்சியை உருவாக்கினார் ராமதாஸ். 16.07.1989-ல் பாமக பிறந்தது.

பாமகவின் தொடக்க காலத்திலேயே வட மாவட்டங்களில் வன்னியர் - தலித் சமூகத்தினர் இடையேயான மோதல்கள் ஒரு பிரச்சினையாகிவந்த நிலையில், இதற்கு முகங்கொடுக்காமல் கட்சியை எல்லோருக்குமானதாகக் கட்ட முடியாது என்பதை முழுமையாக உணர்ந்திருந்தார் ராமதாஸ். தலித் சமூகத்தினருட னான நல்லுறவை மனதில் கொண்டு சில முக்கியமான நடவடிக்கைகளை எடுத்தார். அதில் மிக முக்கியமானது தமிழகத்தில் 100 இடங்களில் அம்பேத்கர் சிலைகளை நிறுவும் திட்டம். “தமிழ்நாட்டில் அம்பேத்கர் சிலைகளை அதிகம் திறந்த தலித் அல்லாத தலைவர் ராமதாஸ்தான். நீல நிறம் தலித்துகளின் குறியீடு என்பதாலேயே எல்லோரும் ஒதுக்குவார்கள். ராமதாஸோ பாமக கொடியில் நீலத்தை வலிய உள்ளடக்கினார். எல்லாக் கருத்து வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டும் இதைச் சொல்வேன்” என்று இன்றும் நெருக்கமானவர்களிடம் நினைவுகூர்வார் திருமாவளவன்.

தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஒரு தலித் என்ற முழக்கத்தைப் பாமக மூலம் முன்வைத்தார் ராமதாஸ். மத்திய அமைச்சரவையில் பாமகவுக்கு இடம் கிடைத்தபோது ‘பாமகவின் முதல் அமைச்சராக ஒரு தலித்’ என்று சொல்லி ஏழுமலையை அமைச்சராக்கினார். தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவருடைய சடலத்தைப் பொது வழியில் எடுத்துச்செல்ல முடியாத நிலை உருவாக்கப்பட்டபோது, சொந்த சமூகத்தையே பகைத்துக்கொண்டு சடலத்தைச் சுமந்துவந்த வரலாறும் ராமதாஸுக்கு உண்டு. அதெல்லாம் ஒரு காலம்.

தமிழுரிமைக்கான உறுதியான குரல்களில் ஒன்று ராமதாஸுடையது. அவருடைய நிழலில் வந்த ‘தமிழ் ஓசை’ நாளிதழ், ‘மக்கள் தொலைக்காட்சி’ இரண்டும் கையாண்ட தனித்தமிழ் அவருடைய அக்கறைக்கான அத்தாட்சி. மருத்துவம், பொறியியல் படிப்புக்கான நுழைவுத்தேர்வை ரத்துசெய்ய வைத்தது, சமச்சீர் கல்வித் திட்டத்தைக் கொண்டுவரச் செய்தது, மதுக் கடைகள் திறந்திருக்கும் நேரத்தைக் குறைக்க வைத்தது, நெடுஞ் சாலையோரக் கடைகளை மூடவைத்தது, தமிழ் திரைப்படங்களுக்குத் தமிழில் பெயர் வைத்தால் வரிச்சலுகை என்று அறிவிக்கச் செய்தது என்று பல விஷயங்களைத் தன்னுடைய அரசியல் போராட்டங்களால் சாதித்தவர் ராமதாஸ்.

மத்திய - மாநில அரசுகள் செய்யும் தவறுகள் எதுவாயினும் முதலில் தட்டிக்கேட்பவராக இருக்கிறார். கூடவே, அரசுக்கு ஆக்கபூர்வமான யோசனைகளை முன்வைக்கும் விரிவான அறிக்கையும் அவரிடம் இருந்தே முதலில் வருகிறது. தமிழக அரசுக்கு வழிகாட்டும் வகையில் இவர் வெளியிடும், நிழல் நிதிநிலை அறிக்கை, விவசாயத்துக்கென தனியே வெளியிடும் வேளாண் நிதிநிலை அறிக்கைகள் கவனத்துக்குரியன. மும்முறை மத்திய அரசில் அங்கம்வகித்தபோது ரயில்வே, சுகாதாரம் உள்ளிட்ட துறைகள் வழி தமிழ்நாட்டுக்கு முக்கியமான சில திட்டங்களையும் கொண்டுவந்தது பாமக.

தன் வாழ்நாள் முழுவதும், தானோ, தன் குடும்பத்தினரோ கட்சியிலோ, ஆட்சியிலோ பங்கேற்க மாட்டோம் என்று சூளுரைத்தவர் ராமதாஸ். பிற் பகுதியில் தன்னுடைய மகன் விஷயத்தில் அதைப் பின்பற்ற முடியாமல் போய்விட்டாலும், தன்னளவில் சட்ட மன்றம், நாடாளுமன்றம் இரண்டையும் தவிர்த்தவர் ராமதாஸ். மத்திய கூட்டணி அரசில் அமைச்சர் பதவிகள் கிடைத்தபோது மற்றவர்களுக்குக் கொடுத்து அழகுபார்த்தவர். எல்லைகளைக் கடந்து, அனைத்துச் சமூகத்தினருக்குமான இயக்கமாக பாமக ஆக வேண்டும் என்ற ராமதாஸின் கனவையே பெரும்பான்மை தமிழர்களும் விரும்புகின்றனர்!

செய்தி வெளியீடு..

ஊடகப்பிரிவு...

Want your business to be the top-listed Government Service in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


Konalur, Thiruvannamalai
Chennai
606755