17/01/2026
வடசென்னை பெரம்பூர் பகுதி குழு தோழர் அசோக் கிளை மற்றும் சஞ்சய் நகர் கிளை சார்பாக பூங்காவில் சமத்துவ பொங்கல் மற்றும் விளையாட்டு போட்டி நடைபெற்றது. விழாவை அசோக் கிளை செயலாளர் தோழர் கிஷோர் சஞ்சய் நகர் கிளை செயளாலர் தோழர் ஷாலினி மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர் நிதிஷ் ஆகியோர் தலைமையேற்று நடத்தினர். விழாவில் மாநில துணை தலைவர் தோழர் அபிராமி, மாவட்ட செயலாளர் தோழர் நித்யராஜ், முன்னாள் மாவட்ட செயலாளர் தோழர் விஜயகுமார், முன்னாள் மாவட்ட குழு உறுப்பினர் தோழர் முரளி முற்றும் கிளை தோழர்கள் பங்கேற்றனர்..
17/01/2026
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் *20- ஆம் ஆண்டு மக்கள் ஒற்றுமை பொங்கல் விழா* *மகாலட்சுமி நகர் கிளை* -யில் நடைபெற்றது. இதில் மகாலட்சுமி நகர் கிராம சங்கத்தின் ஆலோசகர் தோழர் மணிவாசகம் கொடிய அசைத்து விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்தார். மேலும் இதில் மாவட்ட பொருளாளர் தொழ ஸ்டாலின் மாவட்ட குழு உறுப்பினர் தோழர் சர்வேஷ் பகுதி பொருளாளர் தோழர் ராஜ்குமார் போன்ற பல்வேறு தோழர்கள் பங்கேற்றனர்
17/01/2026
ஆர்.கே.நகர், 38வது வட்டத்தில் 19ஆம் ஆண்டு சமத்துவ பொங்கல் விழா மற்றும் பரிசளிப்பு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதில் அருள் கோட்டம் முருகன் திருக்கோயில் நிர்வாகிகள் பர்மா தமிழ் முஸ்லிம் பள்ளிவாசல் நிர்வாகிகளும் ECI மெய்மேய்ப்பர் நிர்வாகிகளும், அண்ணே வாலிபர் சங்கத்தின் மாவட்ட தலைவர் தோழர் விஜய்,CPIM மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர் லோகநாதன் அவர்களும், CPIM ஆர் கே நகர் பகுதி குழு செயலாளர் தொடர் தீபா அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
20/12/2025
TNPSC மூலம் ஒரு லட்சம் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வலியுறுத்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் வடசென்னை மாவட்ட குழு சார்பாக காத்திருப்பு இயக்கம் நடைபெற்றது மாநில செயலாளர் எஸ். கார்த்திக் l இயக்கத்தை நோக்க வைத்து உரையாற்றினார் வடசென்னையில் இயங்கி வரும் பல்வேறு கல்வி சார்ந்த இயக்கங்கள் ஜனநாயக இயக்கங்கள் வட சென்னை மாவட்ட குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர் இறுதியாக சங்கத்தின் முன்னாள் மாநில செயலாளர் தோழர் எஸ் .கே. மகேந்திரன் நிறைவுறையாற்றினார்.
15/12/2025
TNPSC இல் உள்ள ஒரு லட்சம் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பப்படும் வேண்டும் என்று வலியுறுத்தி ஒரு நாள் காத்திருப்பு இயக்கம்...
இடம்: மின்ட் ஐடிஐ அருகில், வள்ளலார் நகர்.