02/03/2026
கடந்த நான்காண்டுகளுக்கு முன்பு இதே நாளில் (02-03 - 2022) கோவை மாநகராட்சி 43 வது வார்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக போட்டியிட்ட தோழர் மல்லிகா புருஷோத்தமன் மாமன்ற உறுப்பினராக பதவி ஏற்றார்.
கோவை மாநகராட்சியில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டு, மகாத்மா காந்தி சிலைக்கு மரியாதை செலுத்திய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாநகராட்சியின் மாமன்ற உறுப்பினர்கள் தோழர் பிரபா ரவீந்தரன், தோழா மல்லிகா புருசோத்தமன் மற்றும் தோழர்கள்.
22/02/2026
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு.
கோவை மாநகராட்சி 43 வது வார்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிட்ட தோழர் மல்லிகா புருசோத்தமன் வெற்றி பெற்றார்.
அவர் தனது வெற்றி சான்றிதழை கட்சியின் மாவட்ட செயலாளர் தோழர் வி.எஸ்.சுந்தரம் அவர்களிடம் கொடுத்து வாழ்த்துப் பெற்றார்.
மாமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற தோழர் மல்லிகா புருசோத்தமன் அவர்களுக்கு மாவட்ட செயலாளர் தோழர் வி.எஸ்.சுந்தரம் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
கட்சியின் மாவட்டத் துணைச் செயலாளர் தோழர் ஆர்.தேவராஜ், பொருளாளர் யு.கே.சுப்பிரமணியன், திமுக மேலிட பொறுப்பாளர் திரு குளித்தலை சரவணன், தோழர்கள் மு.வ.கல்யாணசுந்தரம், கே.புருசோத்தமன், 53 வது வார்டில் வெற்றி பெற்ற தோழர் எம்.டி.மோகன், அ.அசரப் அலி, சேகர், என்.லட்சுமி நாராயண மூர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
#திமுக_காங்_சிபிஎம்_விசிக_மதிமுக_கொமதேக_இயூமுலீக்_மமக_தவாக_ஆத_கூட்டணி
14/02/2026
கோவை மாநகராட்சி தேர்தல் களம் (2022)
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் மல்லிகா புருஷோத்தமன் கதிர் அரிவாள் சின்னத்தில் வாக்கு சேகரிப்பு (14-02-2022)
13/02/2026
கோவை மாநகராட்சி தேர்தல் (2022)
43 வது வார்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் மல்லிகா புருசோத்தமன் (13-02-2022) வாக்கு சேகரிப்பின் போது.
11/02/2026
இன்று (11-02-2022) வெங்கிட்டாபுரம்,சிம்சன் நகர் பகுதிகளில் வாக்கு சேகரிப்பு.
#கோவை_மாநகராட்சி_43_வது_வார்டு
#மல்லிகாபுருசோத்தமன்
#இந்தியகம்யூனிஸ்ட்கட்சி
08/02/2026
கோவை மாநகராட்சி தேர்தல் (07-02-2022) 43-வது வார்டு வாக்கு சேகரிப்பு.
#இந்தியகம்யூனிஸ்ட்கட்சி
#மல்லிகாபுருசோத்தமன்
04/02/2026
கடந்த நான்காண்டுகளுக்கு முன்பு இதே நாளில் (04-02-2022) கோவை மாநகராட்சி தேர்தலில் 43-வது வார்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக தோழர் மல்லிகா புருஷோத்தமன் கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் தோழர்களுடன் சென்று வேட்பாளர் தாக்கல் செய்த போது.
18/10/2025
கோவை மாநகராட்சி 43வது வார்டு சுகாதாரப் பணியாளர்கள் நிரந்தர மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் அனைவருக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மாமன்ற உறுப்பினர் #மல்லிகா புருஷோத்தமன் அவர்கள் இன்று சனிக்கிழமை இனிப்பு பலகாரங்கள் வழங்கினார்.
தொழிலாளர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர் தீபாவளி நல்வாழ்த்துக்கள் பரிமாறிக் கொண்டனர்.