08/08/2018
Sathyamangalam - சத்தியமங்கலம்
Sathyamangalam - சத்தியமங்கலம் Sathyamangalam (also known as Sathy) is a town and municipality in Erode district in the Indian state of Tamil Nadu.
It lies on the banks of river Bhavani, a tributary of Kaveri in the foothills of the Western Ghats. It is about 65 km from Erode and 70 km from Coimbatore. As of 2011, the town had a population of 37,816. More :
http://en.wikipedia.org/wiki/Sathyamangalam
08/08/2018
21/11/2017
27/06/2017
ஓதிமலைமுருகன்.
சத்தியமங்கலம் அருகே 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது ஓதி மலை, இங்கே பழமையான முருகன் கோவில் அமைந்துள்ளது .ஒதிமலையில் உலகிலேயே வேறு எங்கும் இல்லாத வகையில் ஐந்து முகங்களும் , எட்டு கரங்களும் கொண்ட ஸ்ரீ முருகபெருமான் அருள்பாலிக்கிறார் . ஆறுபடை உள்பட முருகபெருமான் வீற்றிருக்கும் மலைகளிலேயே இதுதான் மிகவும் உயர்ந்தது. கோவில் 1800 செங்குத்தான படிகளை கொண்டது, மலையேற சற்று சிரமமாகத்தான் இருக்கும்.. கைப்பிடி இல்லை ..வெயில் நேரத்தில் ஏறுவது கடினமாக இருக்கும்.
🌼 புஞ்சைப்புளியம்பட்டி யிலிருந்து சிறுமுகை -மேட்டுப்பாளையம் செல்லும் வழி அல்லது பவானிசாகரில் இருந்து சிறுமுகை செல்லும் வழியில் இரும்பறையை அடுத்து இந்த மலை உள்ளது. இது மிகப்பழமையான பாடல்பெற்ற முருகன் கோவிலாகும்..
🌼சுவாமிமலையில் சிவனுக்கு பிரணவத்தின் பொருளை உணர்த்திய முருகன், இந்த ஓதிமலை தலத்தில் வேதம், ஆகமங்களை உபதேசித்தார். இவ்வாறு சிவனுக்கு வேதம் ஓதி உபதேசம் செய்த மலை என்பதால் இந்த தலம் “ஓதிமலை” என்றும், சுவாமிக்கு “ஓதிமலை முருகன்” என்ற பெயரும் ஏற்பட்டது.
🌼பதினெட்டு சித்தர்களின் ஒருவரான போகர் ஒதிமலையில் முதலில் முருகபெருமானை தரிசித்தார் பின்பு தான் முருக பெருமானின் பரிபூரண அனுகிரகத்தால் இறைவனின் வழிகாட்டுதலின் பேரில் பழனிக்கு சென்றதாக சொல்லப்படுகிறது .
ஓதிமலை முருகனை போகரின் ஆலோசனைப் படிதான் ஐந்து முகமுருகன் விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது ...
*போகர் தவம் செய்த பூதிக்காடு:*
🌼இம்மலையின் உச்சியில் ஈசான திக்கிலிருந்து பார்த்தால் அடிவாரத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் ஒரு பகுதி மட்டும் வெண்மை நிறத்தில் காணப்படும்.. இது பூதிக்காடு என்று அழைக்கப்படுகிறது .. இங்குதான் போகர் முருகனை வேண்டி யாகம் நடத்திய இடம்.
இங்கு மண்ணே விபூதியாகி வெண்மை நிறத்தில் இருக்கும் "விபூதிக்காடு - தான் காலப்போக்கில் பூதிக்காடு என்று அழைக்கப்படுகிறது.. இங்கே சிறிய குடில் அமைத்து அதில் கல்பீடம் வைக்கப்பட்டு உள்ளது ..
🍁இத்தலத்தில் பக்தர்கள் முருகனிடம் எந்த ஒரு காரியத்திற்கும் பூ வைத்து உத்தரவு கேட்கின்றனர். அதன் பிறகுதான் ஒரு காரியத்தை நிறைவேற்றுகின்றனர். இதை வரம் கேட்டல் என இப்பகுதி மக்கள்கூறுகின்றனர். ஒதிமலை அடிவாரத்தில் பிள்ளையார் கோவில் அமைந்துள்ளது. அதனை தொடர்ந்து மலையேற படிக்கட்டுகள் ஆரம்பம் ஆகின்றன.
🍁 பச்சை பசேல் பின்னணியில் மலையேறுவது மனதுக்கு மிகவும் இதமாக இருக்கும். மலை பகுதியில் ஏராளமான மயில், குரங்குகளும், பல வண்ண பறவைகளும் உள்ளன. இது சித்தர்களின் இருப்பு கொண்ட மலைப்பகுதி என ஆத்மசாதகர்களால் உணரப்படுள்ளது .பிரம்மாவை முருகன் இரும்பு அறையில்
சிறைப்படுத்தியதால் இவ்வூர் இரும்பறை என்றே அழைக்கப்
படுகிறது. அடிவார -இரும்பறையில் பிரம்மன் சிறைப்பட்ட இடத்தினை தரிசிக்க மறக்க வேண்டாம் ..
*ஓதிமலை குறித்த புராணச் செய்தி :*
🍁படைப்புக் கடவுளான பிரம்மா கைலாயம் சென்றபோது, விநாயகரை மட்டும் வணங்கிவிட்டு முருகனை வணங்காமல் சென்றார். அவரை அழைத்த முருகன், பிரம்மாவிடம் பிரணவ மந்திரத்தின் விளக்கம் கேட்டார். தெரியாமல் நிற்கவே, அவரை சிறையில் அடைத்து தானே படைப்புத்தொழிலை தொடங்கியதாக சொல்லப்படுகிறது.
🍁 படைக்கும் கடவுளான பிரம்மாவிற்கு அப்போது ஐந்து முகங்கள் இருந்தது. எனவே, முருகனும் பிரம்மாவின் அமைப்பிலேயே ஐந்து முகங்களுடன் இருந்து உலகை படைத்தார். இந்த அமைப்பு “ஆதிபிரம்ம சொரூபம்”
எனப்பட்டது.
🍁முருகனின் படைப்பில் அனைத்து உயிர்களும் புண்ணிய
ஆத்மாக்களாகவே பிறக்கவே பூமாதேவி பாரம் தாங்காமல் சிவனிடம்முறையிட்டாள். சிவன், முருகனிடம் பிரம்மாவை விடுவிக்கும்படி கூறினார். மேலும் அவரிடம் பிரணவத்தின் விளக்கம் கேட்டார். முருகன் அவருக்கு விளக்கம் சொல்லி, பிரம்மாவையும் விடுவித்தார்.
*ஓதி மலை அமைவிடம் :*
சத்தியமங்கலத்தில் இருந்து புளியம்பட்டி வரவேண்டும்.
புளியம்பட்டி-ல இருந்து 1௦ கீமீ தான்…ஆனா புளியம்பட்டி-ல இருந்து ஒதிமலை போக பஸ் வசதி குறைவு..
🔴1. ஈரோட்டிலிருந்து - ஈரோடு > கோபி > சத்தியமங்கலம் > புளியம்பட்டி > ஒதிமலை வரவேண்டும் ..
🔴2. கோவையிலிருந்து -கோவை > அன்னூர் > ஒதிமலை வரவேண்டும் .
🔴3. மதுரையில் இருந்து மதுரை - பழனி > தாராபுரம் >திருப்பூர் > அவினாசி > புளியம்பட்டி > ஓதி மலை வரவேண்டும்..
ஒருமுறை சென்றுவாருங்கள் சித்தர்களின் அருளும் , முருகபெருமானின் பரிபூரண கடாட்சியமும் ,அருமையான அனுபவங்களையும் பெறுவீர்கள் ..
*முருகபெருமான் அருள்புரியும் திருத்தலங்கள் :*
1. ஆறுமுகம் பன்னிரண்டு கரங்களுடன் -- அவினாசி அருகில் உள்ள திருமுருகன்பூண்டியிலும்,
2. ஐந்து முகம் எட்டு கரங்களுடன் -- பெத்திக்கோட்டை ஓதிமலையிலும்,
3. நான்கு முகம் எட்டு கரங்களுடன் திண்டுக்கல்சின்னாளப்பட்டியிலும்
4. மூன்று முகம் ஆறு கரங்களுடன் -- கோபி, காசிபாளையம் குமரன்கரட்டிலும்,
5. இரண்டு முகம் நான்கு கரங்களுடன் -- சென்னிமலையிலும்,
6. ஒரு முகம் தண்டாபுதபாணியாக -- பழனியிலும், மற்றும் அனேக
இடங்களில் முருகப் பெருமான் வீற்றிருக்கிறார்.
1. ஆறுமுகம் கொண்ட கோலம் -திருமுருகன் பூண்டி தலம் முருகப் பெருமான் சிவபெருமானை வழிபட்ட தலமாகும். அகத்தியர், மார்க்கண்டேயர், துர்வாசர் போன்ற அருளாளர்கள் வழிபட்டுச் சென்றுள்ளனர். இத்தலத்தின் வழியாக சுந்தரர் செல்லும்போது, இங்கு எழுந்தருளியுள்ள இறைவன் தன் பூத கணங்களை வேடர் வடிவில் ஏவிச் சுந்தரரின் செல்வங்களைப் பறித்துக் கொண்ட தலம் எனக் கூறப்படுகிறது. இத்தலம் பிரம்மஹத்திதோஷம் நீங்கவும், மற்றும் சித்தப்பிரமை, பைத்தியம், பில்லி, சூன்யம் போன்ற நோய்கள் நீங்குவதற்கும் ஏற்ற தலமாகும். இதனால்பக்தர்கள் பல நாட்கள் இங்கு வந்து தங்கி தீர்த்தமாடி, இறைவனை வழிபட்டுச் செல்கின்றனர்.
2. ஐந்து முகம்கொண்ட திருக்கோலம் -போகருக்கு வழிகாட்டிய ஓதியப்பர் - ஓதிமலை முருகன்.
3. நான்கு முகங்களுடன் முருகப்பெருமான்- திண்டுக்கல் சின்னாளப்பட்டி என்ற தலத்தில் நான்கு முகங்களுடன் முருகப்பெருமான் காட்சியளிக்கிறார். ‘ஓம்’ என்னும்
பிரணவ மந்திரத்திற்கு பொருள் தெரியாததால் பிரம்மனை முருகப்
பெருமான் சிறையில் அடைத்தார். பின்னர் ஈசனின் மகனான கந்தக்
கடவுளே படைப்புத் தொழிலை மேற்கொண்டார். அப்போது அவர்
நான்கு முகங்களுடன் இருந்ததாக கோவில் தல புராணத்தில்
குறிப்பிடப்பட்டுள்ளது.
4. மூன்று முகத்திருக்கோலம் - மூன்று முகமுருகனாக ஈரோடு மாவட்டம் கோபி வட்டம் தடப்பள்ளி கிராமம் காசிபாளையம் குமரன் கரட்டில் சிவகிரி ஸ்ரீ முத்து வேலாயுதசாமி ஆலயத்தில் அருள் பாலிக்கிறார். இது 800 ஆண்டுகள் பழமையானது. இத் தலத்தின் சிறப்பு என்னவென்றால் முருகப்பெருமான் மூன்று முகம் ஆறு கரங்களுடன் கிழக்கு பார்த்த முகமாக நின்ற நிலையில் தேவியருடன் அருள் பாலித்து வருகிறார்.எங்கும் முருகப்பெருமான் முன்பு அவரது வாகனமான மயிலை பீடத்தில் அமைத்திருப்பதை காணலாம். ஆனால் இத்திருக்கோவில்முன்பு சக்திவேல் அமையப்பட்டிருக்கிறது. இவ்வேல் சூரபத்மனை வதம் செய்ய ஆதிசிவசங்கர அம்மை உமையவள் சகிதம் இவ்வேலின் ஒருபுறம் சரவணபவ சக்ரமும் மறுபுறம் ஓம் என்ற எழுத்துடன் சூலாயுதமும் வஜ்ஜராயுதமும் பொறிக்கப்பட்டுள்ளது.
5..இரண்டு முகம் உடைய சென்னிமலை முருகன் கோவிலில்
செவ்வாய் தவிர மற்ற எட்டு கிரகங்களையும் காணலாம். ஏனெனில் இந்த மூலவர் முருகனே செவ்வாய் கிரகமாக வீற்றிருக்கிறார். எனவே
இத்தல முருகப்பெருமானை வணங்கினால் நவக்கிரக தோஷங்களும்அகலும். சனிதோஷம், நாக தோஷம், செவ்வாய் தோஷம் என சகலகிரக பீடைகளும் உடனே விலகும்.
6.ஒரு முகங்கொண்ட முருகன் பழனி முதலான அனேக இடங்களில் தரிசிக்கலாம் .
,திருச்சிற்றம்பலம்.
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
கோவை.கு.கருப்பசாமி.
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
அடியாா்கள் கூட்டம் பெருகுக!
ஆசை தீர கொடுப்பாா்-------
------ அலங்கல் விடைமேல் வருவாா்.
அருளாளா !! அண்டசராசரனே !!!
திருச்சிற்றம்பலம்.
ஓதிமலை முருகன்
08/06/2017
🐐🐐ஆட்டை வெட்டாதே!
🐄🐄மாட்டை வெட்டாதே!!
🐪🐪ஒட்டகம் வெட்டாதே!!!
😇😇எனக்கூறும் மங்குனி மத்திய அரசே!!
மரத்தை வெட்டாதே என கடுமையான சட்டம் இயற்று!!!
மழையாவது பெய்யுமே!!!
🌴🌴🌴🌳🌳🌳🌳🌲🌲💦💦💦💦🌧🌧🌧🌧🌧
*ஜோக்கர் திரைப்படம்* பார்த்ததுல இருந்து அதுல வர வசனங்களை மறக்கவே முடியல
"நாம யாருக்காக போராடுறமோ, யாருக்காக உயிர விடுறமோ, அவங்களே நம்மள காமெடியனா பாக்கிறதுதான் பெரிய கொடுமை"
"மக்களாட்சி என்றால் மக்களிடம் இருந்தே புறப்பட வேண்டும்"
"நமக்கு தேவையானத கொடுக்கலேன்னா நாமளே எடுத்துக்கனும்"
"அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் தின்னுட்டு போடுற எச்சி சோத்த திங்கிறவங்கதான்டா நம்ம மக்கள்"
"வாழ்றதுதான் கஷ்டம்னு நெனச்சேன்.
இந்த நாட்ல பேல்றத கூட கஷ்டமாக்கிட்டானுங்க"
"நாம ஓட்டு போட்டுதான் அரசியல்வாதிங்கள தேர்ந்தெடுக்கிறோம்.
ஆனா அவங்கள டிஸ்மிஸ் பண்ண உரிமை இல்ல நமக்கு"
"நூடுல்ஸ தடை பண்ணா சைனா காரனுக்கு புடிக்கல.
கூல்ட்ரிங்ஸ தடை பண்ணா அமெரிக்கா காரனுக்கு புடிக்கல.
ஹெலிகாப்டர பாத்து கும்பிடாதிங்கடன்னா அமைச்சர்களுக்கு புடிக்கல.
அரைநாள் உண்ணா விரதத்துக்கு ஏர்கூலர் ஏன்னு கேட்டா எதிர்கட்சி தலைவருக்கு புடிக்கல.
கல்லூரி கட்ட தடை. கூட்டனி தாவலுக்கு தடை..
சாதி மாநாட்டுக்கு தடை.
அதனாலதான் என்ன புடிக்கல."
"நகைக்கட காரனுங்க புரட்சி பண்ற இந்த நாட்ல ஜனாதிபதி புரட்சி பண்ண கூடாதா...!"
"சத்து குறைபாட்டால் 12 குழந்தைங்க செத்து மயக்க மருந்த மாத்தி கொடுத்ததால 2 கர்ப்பினி பெண்கள் செத்து போயிட்டாங்க.
கர்த்தரும் காப்பாத்தால.. நபிகளும் காப்பாத்தல.. மாரியாத்தாளும் காப்பாத்தால.."
"இங்க பாக்க முடியாது. அப்பல்லோல தான் பாக்கனும்னா ஓட்டு ஏன் கவர்மென்டுக்கு போடனும்.
அப்போல்லோவுக்கோ போட்ரலாமே"
வேடிக்கை பார்ப்பவர்களை வெள்ளம் கொண்டு போகட்டும்.
"சாராய அதிபர்களுக்கும், கொலைகாரர்களுக்கும் இரண்டடுக்கு பாதுகாப்பு கொடுக்குது இந்த மானங்கெட்ட அரசு"
"நாட்ல இருக்கிறவங்கள எல்லாம் நடைபிணமா ஆக்கிட்டு யாருக்கு காட்டபோறீங்க உங்க கருணைய.
ஊழல் இல்லாம கக்கூஸ் கட்ட வக்கில்ல.
உங்க கிட்ட கருணைய எதிர்பார்த்தது தவறுதான்"
"பெத்தவளையும், கட்டுனவளையும் விக்கிற மாதிரி ஓட்ட விக்கிறானுங்க"
31/07/2014
Sathyamangalam Forest
Click here to claim your Sponsored Listing.
Location
Website
Address
Sathyamangalam/சத்தியமங்கலம்
Erode
638402
