27/10/2023
எல்லாப் புகழும் இறைவனுக்கே...
இன்று(27/10/23) நாச்சியார்கோயில் பெருமாள் கோயில் மகா கும்பாபிஷேகம் விசேஷத்திற்கு வருகை தந்த உள்ளூர் மற்றும் வெளியூர் நபர்களுக்கு திருநறையூர் மற்றும் நாச்சியார்கோயில் அனைத்து முஸ்லிம் ஜமாத் கூட்டமைப்பு சார்பாக 5000 தண்ணீர் பாட்டிலும் 3200 பிஸ்கட் பாக்கெட்டும் வழங்கப்பட்டது.
இது காலை 07:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை தொடர்ச்சியாக வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வுக்கு வருகை தந்த சகோதர சமூகத்தை சார்ந்த அனைத்து மக்களும், மிகவும் தேவைக்கேற்ற தங்களின் உதவி என்று கூறினார்கள்.
மேலும் இன்றைய காலத்தில் இது போன்ற சமூக நல்லிணக்க பணிகள் தொடர வேண்டும் என்றும் இந்த பணியை பலரும் விருப்பத்துடன் போட்டோ மற்றும் வீடியோ எடுத்துச் பாராட்டி சென்றார்கள்.
இதுதான் இன்றைய தமிழகம். நமது நாட்டுக்கு ஒரு முன்மாதிரியான செயல் இது. இச்செயல் மென்மேலும் தொடர வேண்டும் என்றும் கூறினார்கள்.
மேலும் இதற்காக எல்லா வகையிலும் முழுமையாக ஒத்துழைப்பும் உதவியும் செய்த அனைத்து முஸ்லீம் ஜமாத் கூட்டமைப்பை சார்ந்த அனைத்து ஜமாத்தார்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றியை கூறிக் கொள்கின்றோம்.
புகழ் அனைத்தும் இறைவன் ஒருவனுக்கே...

25/04/2016