Abdul samat

Abdul samat

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Abdul samat, Social service, Kuwait City.

20/03/2021

ඥානසාර ස්වාමීන් වහන්සේගේ පදනම් රහිත චෝදනාවලට පිළිතුරක්.

ஞானசர தீரோவின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு ஒரு பதில்.

An answer to Gnanasara Thero's
baseless allegations.

16/03/2021

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக பொய்யான கருத்துக்களை கூற வேண்டாமென விமல் வீரவன்சவிற்கு நீதிமன்றம் உத்தரவு.

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனுக்கு அபகீர்த்தி ஏற்படும் விதத்தில், பொய்யான மற்றும் வெறுக்கத்தக்க கருத்துக்களை வௌியிடுவதை தடுக்கும் வகையில், அமைச்சர் விமல் வீரவன்சவிற்கு கொழும்பு மாவட்ட நீதவான் அருண அளுத்கே இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அவ்வாறான கருத்துக்களை வௌியிடுவதை தடுக்கும் வகையில், மூன்று தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும் கொழும்பு மாவட்ட நீதவான் இன்று இந்த தடையுத்தரவை பிறப்பித்துள்ளார்.

எதிர்வரும் 31 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் பிரதிவாதிகளுக்கு கொழும்பு மாவட்ட நீதவான் அருண அளுத்கே உத்தரவிட்டுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்துள்ள மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சட்டத்தரணி ருஸ்தி ஹபீப் முன்வைத்த விடயங்களை ஆராய்ந்த நீதவான்...

எதிர்வரும் 30 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் வகையில் இந்த தடையுத்தரவை பிறப்பித்துள்ளார்.

அமைச்சர் விமல் வீரவன்ச கடந்த 9 ஆம் திகதி ஆற்றிய உரையின் மூலம் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தே பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.

அவ்வாறான பொய்யான கருத்துக்களை வௌியிட்டமை மற்றும் தமது பெயருக்கு களங்கம் விளைவித்தமை தொடர்பில் 10 கோடி ரூபா நஷ்ட்ட ஈட்டை பிரதிவாதிகளிடமிருந்து பெற்றுத்தருமாறும் ரிஷாத் பதியுதீன் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

16/03/2021
13/03/2021

பாம்பு கடியினால் விஷமேறி எவராவது இறந்துவிட்டதாக நினைத்து இறுதி சடங்குகளை செய்யாதீர்.

பாம்பு கடித்த விஷத்தினால் யாராவது மரணமடைந்து விட்டால். அவரின் கண்களை திறந்து பாருங்கள் கண் கருவிழிகள் உங்களையே நேர் நோக்கி பார்க்கிறது என்றால். அவர் மரணமடைந்துவிட்டார் என உணந்துகொள்ளவும்.கண் கருவிழிகள் கீழ் அல்லது மேல் நோக்கியோ அல்லது பக்கவாட்டிலோ இருந்தால் அவ்வுடாலில் உயிர் இருக்கிறது என உணர்ந்து கொள்ளவும்.

நாடி துடிக்காது,இரத்தஓட்டம் இருக்காது,கண் இமைகள் மூடித்திறக்காது,ஆனால் உடலில் உயிர் இருக்கும். மூன்று வெற்றிலை பத்து கல்லுப்பு பத்து மிளகு ஆகியவற்றை வாயில் போட்டு மென்று, அந்த சாற்றை இரண்டு துளிகள்வீதம் இரண்டு கண்களிலும், இரண்டுதுளிகள் வீதம் மூக்கு துவாரங்களிலும் விட்டு மூக்கு துவாரங்களை ஊதினால் உடனே விஷம் முறிந்து கை கால்கள் விறையல் கொடுக்கும் உடனே மீண்டும் மருத்துவ மனைக்கு கொண்டுச்செல்லவும். இது ஒரு முதலுதவி மாத்திரமே

Photos from Abdul samat's post 12/03/2021

இந்த கேவலமான செயலை செய்த amazon நிறுவனத்தை வன்மையாக கண்டிக்கிறேன்

09/03/2021

உறுப்படியான திட்டம் என நான் நினைக்கிறேன் நீங்கள் நினைப்பதை கமாண்டில் கூறவும்

09/03/2021

உங்கள் கருத்தை பதிவு செய்யவும்

01/03/2021

இம்றான்கான் எப்போது பாக்கிஸ்தான் ஜனாதிபதியானார்..?
யாருக்காவது தெரியுமா.?
அதாவுல்லாக்கு மாத்திரம் தெரியும் பாருங்கள்

27/02/2021

குர்ஆனை தடை செய்து விட்டு பொது பல சேனாவை தடை செய்ய வாருங்கள்! - ஞானசார தேரர் காட்டம்.

25/02/2021

கோவிட்19 இனால் மரணமடைந்தவர்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய அனுமதி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனை நாங்கள் வெற்றியாக கருதவில்லை. இது எங்களுடைய உரிமை. இது எங்களுக்கு கிடைத்த பரிசு அல்ல, அவர்கள் எப்போதோ கொடுத்திருக்க வேண்டிய உரிமை என்பதனை கருத்தில் கொள்ளவேண்டும். அனைத்து இலங்கையர்களுக்கும் சமத்துவத்தை மற்றும் தங்கள் உரிமையை அடைவதற்கான எங்கள் போராட்டத்தை நாம் கிடைக்கும்வரை என்றும் தொடருவோம்.

We are not considering the allowing of the burials of covid-19 victims a victory. This always should have been a right. This is not a gift to us, but a right that was owed. We will continue our fight to achieve equality for all Sri Lankan’s.

பாராளுமன்ற உறுப்பினர் சாணாக்கியன்

24/02/2021

இலங்கை - பாகிஸ்தான் பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் செயலாளராக றிசாத் பதியுதீனும், பிரதி தலைவராக ரவூப் ஹக்கீமும் தெரிவு.

இலங்கை - பாகிஸ்தான் பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக அமைச்சர் நிமல் சிறிபால டி.சில்வாவும் செயலாளராக பாராளுமன்ற உறுப்பினர் றிசாத் பதியுதீன் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், ஏ.அரவிந்த குமார் மற்றும் மொஹமட் முஸம்மில் ஆகியோர் இச்சங்கத்தின் உப தலைவர்களாகத் தெரிவு செய்யப்பட்டனர்.

இலங்கை-பாகிஸ்தான் பராளுமன்ற நட்புறவு சங்கத்தின் கூட்டம் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று (23) பாராளுமன்றத்தில் நடைபெற்ற போதே நிறைவேற்றுக் குழு மற்றும் பதவிகளுக்கான புதிய உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டனர்.

இந்நிகழ்வில் பாகிஸ்தான் குடியரசின் இலங்கைக்கான உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் மொஹமட் சாத் ஹகட்டாகும் கலந்துகொண்டிருந்தார்.

இச்சங்கத்தின் உதவிச் செயலாளராக வடிவேல் சுரேஷ், பொருளாளராக வீரசுமன வீரசிங்ஹ ஆகியோரும் தெரிவுசெய்யப்பட்டனர்.

இதனைவிடவும், பாராளுமன்ற உறுப்பினர்களான கே.காதர் மஸ்தான், துஷார இந்துனில் அமரசேன, வைத்திய கலாநிதி சுதர்ஷினி பர்னாந்துபுள்ளே, மேஜர் சுதர்ஷன தெனிபிட்டிய, அலி சப்ரி ரஹீம், கனஹ ஹேரத், ஜகந் புஷ்பகுமார, ஜயந்த வீரசிங்ஹ, ஜகத் குமார, குலசிங்கம் திலீபன், வேலு குமார், பைசல் ஹாசிம், அமரகீர்த்தி அதுகோரல, மதுர விதானகே, சாமர சம்பத் தஸநாயக்க, உதயன கிரிந்திகொட, குணதிலக ராஜபக்ஷ, வைத்திய கலாநிதி திலக் ராஜபக்ஷ, ஜே.சி.அலவத்துவல, ரொஷான் ரணசிங்க ஆகியோர் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.

Photos from Abdul samat's post 23/02/2021

தற்போது கொழும்பு
காலி முகத்திடல் முன்பாக
பொலீஸாரின் எதிர்ப்பையும் தாண்டி கட்டாய ஜனாஸா எரிப்பிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு..

Want your business to be the top-listed Government Service in Kuwait City?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Kuwait City