27/04/2026
🥭🥭 🥭 🥭🥭 🥭🥭🥭 🥭 🥭🥭 🥭🥭 🥭🥭🥭
மருத்துவ குல மக்களின் மாம்பழத் திருவிழா
🥭🥭🥭🥭🥭 🥭🥭🥭 🥭🥭🥭 🥭🥭 🥭🥭🥭🥭
மருத்துவகுல மக்களின் 6 ஆம் நாள் திருவிழாவான மாம்பழத் திருவிழாவானது அக்கரைப்பற்று ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் நேற்றைய தினம் (26/04/2026) மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.
எம்பெருமான் ஸ்ரீ சித்தி விநாயகரின் பேரருளால் எமது இத்திருவிழா சிறப்பாக நடைபெற உள்நாட்டிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும் நிதிப்பங்களிப்பு செய்த எமது மருத்துவகுல உறவுகள், நிதி அறவீட்டிற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட எமது மக்கள் முற்போக்கு அபிவிருத்திச் சங்க நிர்வாகத்தினர் மற்றும் மக்கள் முற்போக்கு அபிவிருத்திச் சங்க இளைஞர் அமைப்பினர், திருவிழாவின்போது தோலோடு தோள் நின்று பூஜைகள் சிறப்புற தொண்டாற்றிய அனைத்து உறவுகள், திருவிழாவில் கலந்துகொண்ட உறவுகள், ஆலய நிர்வாகத்தினர் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள். 😍
01/10/2025
இன்றை தினம் இடம்பெற்ற ஸ்ரீ இராம கிருஷ்ண மிஷன் மஹா வித்தியாலய நாமகள் நகர் உலாவின் போது மாணவர்களுக்கான தாக சாந்தியினை எமது மக்கள் முற்போக்கு அபிவிருத்தி சங்கத்தினர் (PPDS) மக்கள் முற்போக்கு அபிவிருத்திச் சேவைகள் லிமிடட்யின் (PPDS ltd) அனுசரனையுடன் வழங்கியிருந்தோம் அத்துடன் இப் பணியில் இணைந்து கொண்ட மக்கள் முற்போக்கு அபிவிருத்திச் சங்க இளைஞர் அமைப்பினருக்கும் (PPDSYF) நன்றிகளினை தெரிவித்துக் கொள்கின்றோம். ☺️
RamakrishnaMission Maha Vidyalaya Akkaraipattu 😍
27/09/2025
அக்கரைப்பற்று ஸ்ரீ பத்திர காளி அம்மன் ஆலயத்தின் வருடாந்த அலங்கார திருவிழாவில், மக்கள் முற்போக்கு அபிவிருத்திச் சங்கத்தினரின் (PPDS) நவராத்திரி பூசையானது நேற்றைய தினம் வெகு விமர்சையாக (26/09/2025) நடைபெற்றது.
திருவிழாவிற்கான நிதி உதவி செய்த அனைத்து மக்களுக்கும், அலங்கார வேலைகளில் ஈடுபட்ட இளைஞர் அமைப்பினருக்கும், மற்றும் திருவிழாயினை ஒழுங்கு படுத்தி தந்த ஆலய நிர்வாகத்தினருக்கும் எமது சங்கம் சார்பான நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.😊
01/08/2025
இம் முறை உகந்தைமலை ஶ்ரீ முருகன் ஆலயத்தில் 82வது வருடமாக 31/07/2025 ம் திகதி (வியாழக்கிழமை) எமது கிழக்கிலங்கை மருத்துவகுல மக்களின் ஏழாம் திருவிழா சிறப்பான முறையில் வெகு விமர்சையாக இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து 01/08/2025 ம் திகதி (வெள்ளிக்கிழமை) எமது மடத்தில் பகல் அன்னதான நிகழ்வும் சிறப்பான முறையில் இடம்பெற்றது.
திருவிழாவினை சிறந்த முறையில் நடத்துவதற்கு பல வழிகளிலும் உதவி புரிந்த மற்றும் திருவிழாவில் கலந்து கொண்ட அனைத்து நல் உள்ளங்களுக்கும் கிழக்கிலங்கை மருத்துவ குல மக்களின் சபை சார்பிலும் மற்றும் மக்கள் முற்போக்கு அபிவிருத்திச் சங்கத்தின் (PPDS) சார்பிலும் நன்றிகளினை தெரிவிப்பதுடன் எமது மக்களின் முன்னேற்றத்திற்காக முருகப்பெருமானிடம் பிரார்த்தித்துக் கொள்கின்றோம்.
ஓம் முருகா 🙏❤️
21/07/2025
ஸ்ரீ உகந்தை மலை முருகன் ஆலயத்தில் அமையப்பெற்றுள்ள எமது கிழக்கிலங்கை மருந்துவ குல மக்களின் யாத்திரிகர் மடத்தின் மேலதிக கட்டுமானப் பணிகள் கடந்த மாதமளவில் ஆரம்பிக்கப்பட்டு பல சவால்களை முருகன் அருளோடு முறியடித்து இன்றைய தினம் (21/07/2025) அனைத்து வேலைகளும் முடிவடைந்தது. இதற்கான பூரண ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்வதோடு முருகப் பெருமானின் அருளாசி கிடைக்க பிரார்த்திக்கின்றோம். 🙏
14/06/2025
எமது மக்கள் முற்போக்கு அபிவிருத்திச் சங்கத்தினர் (PPDS) மற்றும் மக்கள் முற்போக்கு அபிவிருத்திச் சங்க இளைஞர் அமைப்பின் (PPDSYF) அங்கத்தவர்களின் பங்களிப்புடன் எமது மருத்துவர் குல மக்களின் உகந்தை மடம் அமைந்துள்ள பகுதியில் சிரமதான பணி முன்னெடுக்கப்பட்டது. அத்துடன் மடத்துடனான மேலதிக கட்டுமானப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டது.
இப்பணியில் இணைந்துகொண்ட அனைவருக்கும் நன்றிகள் ☺️
10/10/2024
அக்கரைப்பற்று ஸ்ரீ பத்திர காளி அம்மன் ஆலயத்தின் வருடாந்த அலங்கார திருவிழாவில், மக்கள் முற்போக்கு அபிவிருத்திச் சங்கத்தினரின் (PPDS) நவராத்திரி பூசையானது நேற்றைய தினம் வெகு விமர்சையாக (09/10/2024) நடைபெற்றது.
திருவிழாவிற்கான நிதி உதவி செய்த அனைத்து மக்களுக்கும், அலங்கார வேலைகளில் ஈடுபட்ட இளைஞர் அமைப்பினருக்கும், மற்றும் திருவிழாயினை ஒழுங்கு படுத்தி தந்த ஆலய நிர்வாகத்தினருக்கும் எமது சங்கம் சார்பான நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.😊
27/09/2024
இன்றைய தினம் (27/09/2024) ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் வருடாந்த நவராத்திரி திருவிழாவினை முன்னிட்டு ஆலயத்தினரின் அழைப்பில் எமது மக்கள் முற்போக்கு அபிவிருத்தி சங்கத்தினரால் (PPDS) சிரமதானப் பணியானது இடம்பெற்றது.
இப்பணியில் இணைந்து கொண்ட சகல உறவுகளுக்கு எமது நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றோம்.
14/07/2024
இம் முறை உகந்தைமலை ஶ்ரீ முருகன் ஆலயத்தில் 81வது வருடமாக 12/07/2024 ம் திகதி (வெள்ளிக்கிழமை) எமது கிழக்கிலங்கை மருத்துவகுல மக்களின் ஏழாம் திருவிழா சிறப்பான முறையில் வெகு விமர்சையாக இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து 13/07/2024 ம் திகதி (சனிக்கிழமை) எமது மடத்தில் பகல் அன்னதான நிகழ்வும் சிறப்பான முறையில் இடம்பெற்றது.
திருவிழாவினை சிறந்த முறையில் நடத்துவதற்கு பல வழிகளிலும் உதவி புரிந்த மற்றும் திருவிழாவில் கலந்து கொண்ட அனைத்து நல் உள்ளங்களுக்கும் கிழக்கிலங்கை மருத்துவ குல மக்களின் சபை சார்பிலும் மற்றும் மக்கள் முற்போக்கு அபிவிருத்திச் சங்கத்தின் (PPDS) சார்பிலும் நன்றிகளினை தெரிவிப்பதுடன் எமது மக்களின் முன்னேற்றத்திற்காக முருகப்பெருமானிடம் பிரார்த்தித்துக் கொள்கின்றோம்.
ஓம் முருகா 🙏❤️