27/11/2025
தேசிய வாசிப்பு மாதம் 2025
தேசிய விருது
தேசிய நூலக ஆவணவாக்கல் சபையினால் 2024ம் ஆண்டிற்கான தேசிய வாசிப்பு மாதத்தில் " உலகை வென்றவர்கள் வாசித்த மக்களே" எனும் தொனிப்பொருளுக்கமைவாக சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் நிகழ்ச்சிகளை முன்னெடுத்தமைக்காக இலங்கையில் உள்ள 39 தெரிவு செய்யப்பட்டு நூலகங்களுக்கு விருது வழங்கி கெளரவிக்கும் நிகழ்வு தேசிய நூலக ஆவணவாக்கல் சபையின் கேட்போர் கூடத்தில் 20.11.2025ம் திகதி இன்று மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
இந் நிகழ்வில சம்மாந்துறை பிரதேச சபை ்அமீர் அலி பொது நூலகத்திற்கும் தேசிய விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது. இவ்விருதினை கௌரவ புத்த தாசன ,சமய கலாச்சார பிரதி அமைச்சரான கமேகேந்திர திசநாயக்க அவர்களினால் எமது சம்மாந்துறை சபையின் அமீர் அலி பொது நூலகத்தின் நூலகரான A.R.M.இல்யாஸ் அவர்களிடம வழங்கி வைக்கப்பட்டதுடன் சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் I.L.M.மாஹிர். சேர் அவர்களும் கலந்து சிறப்பித்தனர் .இச்செயற்திட்டத்தினை முன்னெடுத்துச் செல்ல துணை புரிந்த முன்னாள் செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட் சேர் அவர்களுக்கும்,சன சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஐ.பஸ்மிலா அவர்களுக்கும் நூலக ஊழியர்களுக்கும் பிரதேச சபையின் உத்தியோகத்தர்களுக்கும் இச்சந்தர்ப்பத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.

04/11/2025
03/11/2025