26/02/2024
இச் சுற்றுப் போட்டிக்கு முழு அனுசரணை வழங்கி கொண்டிருக்கும் பொறியியலாளர் Uthumankandu Nafeer சேர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...
Politician
26/02/2024
இச் சுற்றுப் போட்டிக்கு முழு அனுசரணை வழங்கி கொண்டிருக்கும் பொறியியலாளர் Uthumankandu Nafeer சேர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...
11/02/2024
28/09/2023
எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே!! ஸலவாத் எனும் கருணையும், ஸலாம் எனும் ஈடேற்றமும் அகிலதிற்கு அருட்கொடையாக அனுப்பப்பட்ட ஈருலகத் தலைவர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தவர்கள், தோழர்கள் அனைவர் மீதும் உண்டாவதாக!!
21/11/2022
நவீன ஊடகங்கள் மலிந்த காலத்தில் கபட அரசியல்வாதிகள் மக்களை ஏமாற்ற முடியாது
அல்ஹாஜ். உதுமான்கண்டு நாபீர்
எதிர்வரும் காலங்களில் நாம் தேர்தல் ஒன்றை சந்திக்க இருக்கின்றோம் இவ்வாறான நிலையில் நம்மை நாம் சுய பரிசோதனை செய்யும் காலத்திலும் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
அம்பாறை மாவட்ட மக்களை காலம் காலமாக அரசியல் அடிமைகள் என நினைத்து பணம் கொடுத்து வாங்க நினைப்பது சமகாலத்தில் பெரும் முட்டாள் தனமாகும் என்பதை இங்கு அரசியல் செய்ய வரும் தங்களை சிறுபான்மை கட்சி தலைவர்கள் என்று கூறுபவர்கள் நன்கு புரிந்து கொண்டிருப்பார்கள் என்று நம்புகிறேன் பணத்திற்கும் அற்ப சலுகைகளுக்கும் எமது மக்கள் இன்னும் ஏமாந்து போக மாட்டார்கள்.
பணத்திற்கு ஏமாறும் அரசியல் தரகர்கள்,சமூகத்தில் நன்மதிப்பில்லாதவர்கள்,எலும்பிற்கு வாலாட்டும் ஒரு சில ஊடகவியலாளர்கள் என சிலர் உலா வருகின்றனர்.
கடந்த காலங்களைப் போன்று மக்கள் ஏமாளிகள் அல்ல. சமூக வலைத்தளங்களின் பரவல் காரணமாக ஏமாற்று அரசியலையும்,அரசியல்வாதிகளையும் பொதுமக்கள் சரியாக கணித்து வைத்திருக்கின்றனர். ஒவ்வொரு அரசியல்வாதி பற்றியும் சாதாரண பாமர மகனும் துல்லியமாக அளந்து வைத்திருக்கும் காலமிது.
இப்படியான நவீன ஊடகங்கள் மலிந்த காலத்தில் போலியான முகங்களுடன்,உணர்ச்சி ததும்பும் மேடை பேச்சுகளுடன் சங்கமித்து எமது உறவுகளை ஏமாற்று வலையில் வீழ்த்தலாம் என நினைப்பது என்றும் நிறைவேறாத பகற் கனவாகும் என்பதை மிக்க பொறுப்புணர்வுடன் மக்களை ஏமாற்ற வரும் அரசியல் வாதிகளிடம் கூறிக் கொள்ள விரும்புகின்றேன்
பொறியியலாளர். உதுமான்கண்டு நாபீர்
ஸ்தாபகர்- நாபீர் என்ற பவுண்டேசன்,
முகாமைத்துவ பணிப்பாளர் - ECM (Pvt) Ltd.